சனி, 21 ஆகஸ்ட், 2010

வக்ராவில் கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் நடத்திய ஸஹர் நேர சிறப்பு இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்ச்சி

இடம்: வக்ரா விளையாட்டு உள் அரங்கம்

நாள்: 12-08-2010 வியாழன் இரவு 10 மணி முதல் ஸஹர் நேரம் வரை இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

சரியாக இரவு 10 மணிக்கு துவங்கிய இந்நிகழ்ச்சியில் பேச்சு பயிற்ச்சியில் பயிற்ச்சி பெற்ற சகோதரர்கள் மற்றும் புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு பேச்சு பயிற்ச்சி எடுத்துக்கொண்டவரும் சிறிய உரையாற்றினார்கள்.

குழந்தைகளுக்கான மார்க்க அறிவுப் போட்டிகளும் மணணம் போட்டிகளும் சிறப்பாக நடைபெற்றது.

இறுதியில் சிறுமி சுமையா என்பவர் இனைவைத்தல் என்ற தலைப்பில் ஒரு சிற்றுரையும் ஆற்றினார்.

மேலும் தொடர்ந்து மெளலவி லாயிக் அலி அவர்கள் ரமளானும் அதன் சிறப்புக்களும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

மேலும் அதனைத் தொடர்ந்து மெளலவி அன்ஸார் அவர்கள் நோன்பு ஓர் அறிமுகம் என்ற தலைப்பில் நோன்பின் சட்டங்களை மிகச் சிறப்பாக தனது உரையிலே விளக்கி உரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து மெளலவி அப்துல்ஸமது மதனி அவர்கள் ரமளான் ஓர் பயிற்ச்சிக் களம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.

அதன் பிறகு குழந்தைகளின் மார்க்க அறிவுப் போட்டிகளில் பங்கெடுத்த குழந்தைகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.

வக்ராவில் முதன் முதலாக நடைபெற்ற இதுபோன்ற நிகழ்ச்சியில் ஏராளமான சகோதர சகோதரிகள் கலந்து பயனடைந்தனர்.

இந்நிகழ்ச்சியின் இறுதியில் அனைவருக்கும் ஸஹர் உணவு ஏற்ப்பாடு செய்யப்பட்டு வருகை தந்த அனைத்து சகோதர சகோதரிகளும் ஸஹர் உணவு அருந்தி அல்லாஹ்வின் அருளால் இந்நிகழ்ச்சி இனிதாக நிறைவடைந்தது.


"நீங்கள்,மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத்தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்!"அல்குரான் 3:110