சனி, 21 ஆகஸ்ட், 2010

ரமலான் சகர் நேர சிறப்பு சொற்பொழிவுகள்






 ரமலான் சகர் நேர சிறப்பு சொற்பொழிவுகள் 
19-08-2010  அன்று அல்லாஹுவினுடைய பெருங்கிருபையால்  கத்தரில் ரமலான் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது . கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்மதீனா கலிபாவில் அமைந்துள்ள சவுதி மர்கஸில் சிறப்பு சஹர் நேர நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்ததது . தமிழகத்திலிருந்து வருகை தந்துள்ள , தமிழ் நாடு தவ்ஹீத் ஜாமத்தின் மேலாண்மை குழு உறுப்பினர்  சகோதரர் ஷம்சுல்லுஹா  ரஹ்மானி அவர்களும் , இர்ஷாத் கல்லூரி பேராசிரியர் சகோதரர் அப்துல் கரீம்  MISC  அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டார்கள்இந்நிகழ்ச்சிக்கு சகோதரர் முஹம்மது யூசுப் அவர்கள் தலைமை ஏற்று    நடத்தினார்கள் . முன்னதாக சவுதி மார்க்சின் இஸ்லாமிய  அழைப்பாளர் சகோதரர் அப்துஸ் சமத் மதனீ அவர்கள் " ரமலான் எனும் அருட்கொடை " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் . பின்னர் சகோதரர் அப்துல் கரீம்  MISC  அவர்கள் " ரமலானில் பெற வேண்டிய படிப்பினைகள் " என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள். நள்ளிரவு தாண்டி நடைபெற்று கொண்டிருக்கும் இந்த தொடர் சொற்பொழிவுகளில் கேட்பவர்களுக்கு உற்சாகத்தை அளிக்க தேநீர் , பரிமாறப்பட்டது . இதனிடையில் கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தில் நடைபெற்ற இஸ்லாமிய அடிப்படை கொள்கை விளக்க வகுப்பில் சிறப்பாக தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழும் பரிசும் வழங்கப்பட்டதுஇறுதியாக சிறப்பு விருந்தினர் சகோதரர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி அவர்கள் " அஞ்சுவோம் அடிபணிவோம் " என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள் . அல்லாஹுவிற்காக தொழுது, நோன்பு வைத்து ,இன்னபிற நல்லறங்களை செய்து  கொண்டுவந்தாலும்  திருமணத்தின் போது மார்க்கம் கட்டி தராத அனாச்சரங்களிலிருந்து இன்னும் விடுவித்து கொள்ளாமல் இருக்கிறது நம் தமிழக இஸ்லாமிய சமுதாயம். சொந்தங்கள் எதிர்த்தாலும் வரதட்சனை வாங்க மாட்டோம் , பெண் வீட்டார் அளிக்கும் விருந்தில் கலந்துக்கொள்ள மாட்டோம் என்று உறுதியோடு நிற்கும்  இளைஞர் பட்டாளத்தை உருவக்கியிருகிறது நம் ஜமாஅத்.தொழுகையும் கொள்கையும் இல்லாதவன்  சொர்கத்தில்  புகமுடியாது. தீமையை புறக்கணித்தால் தான் தீமை அழியும் , ஏகத்துவ கொள்கையில் உறுதி ஏற்படும் ,அதன் வாயிலகத்தான் சொர்க்கம் சொல்ல இயலும் .சமுதாயத்தின் தீமைகளை ஒழித்து , நம்முடைய ஈமானை காத்து, நபி (ஸல் ) காட்டிய முன் மாதிரி சமுதாயத்தை உருவாக்க அயராது பாடுபடுவோமாக என்று தனது உரையில் கூறினார் . மையத்தின் தலைவர் சகோதரர் ஷபீர் அவர்கள் ரமலானில் நடைபெறும் நிகழ்ச்சிகளின் பற்றி அறிவிப்பு செய்தார் . இறுதியில்  பொருளாளர் சகோதரர் சயீத் இப்ராஹீம் அவர்கள் நன்றியுரை யாற்றினார் . இதில் ஐநூறுக்கும்  மேற்பட்ட சகோதரர் சகோதரிகள் கலந்துகொண்டு பயனடைந்ததார்கள் . வருகை தந்த அனைவருக்கும் சகர்   நேர உணவு பரிமாறப்பட்டது . துணை செயலாளர் சகோதரர் ஹாஜி அவர்களின் தலைமையில் உணவு குழு உணவு ஏற்பாட்டை  சிறப்பாக செய்திருந்தததுஅரங்க அமைப்பு குழு தலைவர் சகோதரர் அப்துல் கபூர் அவர்களின் தலைமையில் அரங்க ஏற்பாடு மற்றும்   ஒளி ஒலி ஏற்பாட்டை சிறப்புடன் செய்திருந்தது. அல்லாஹுவின் பெருங்கிருபையால் நிகழ்ச்சி சிறப்புடன் நடந்து முடிந்தது



"நீங்கள்,மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத்தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்!" அல்குரான் 3:110