வியாழன், 2 செப்டம்பர், 2010

QITC அல்கோர் சகர் நேர சிறப்பு நிகழ்ச்சி 26-08-2010


கடந்த 26-08-2010 வியாழக்கிழமை இரவு QITC யின் அல்கோர் கிளை , சகர் நேர சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியை நடத்தியது. இச்சிறப்பு நிகழ்ச்சிக்கு அல்கோர் கிளை ஒருங்கிணைப்பாளர் சகோதரர் தேவியாக்குறிச்சி ஜியாவுதீன் அவர்கள் தலைமை வகித்தார்கள் . நிகழ்ச்சியின் துவக்க உரையாக சகோதர் மௌலவி லாயிக் அவர்கள் "கொடை கொடுப்போம் விடை கொடுப்போம் " என்ற தலைப்பில் உரையாற்றினார். அடுத்ததாக சகோதரர் மௌலவி முஹம்மது அலி அவர்கள் "அன்சாரிகளின் அழகிய வரலாறு " என்ற தலைப்பில் உரையாற்றினார் . மூன்றாவது உரையாக "நபிகளாரின் இறுதி எச்சரிக்கை " என்ற தலைப்பில் சகோதரர் மௌலவி அப்துஸ் சமத் மதனீ அவர்கள் உரையாற்றினார்கள் . இறுதியாக தமிழகத்திலிருந்து வருகை தந்துள்ள சிறப்பு விருந்தினர் சகோதரர் அப்துல் கரீம் MISC அவர்கள் "பத்ரு போர் தரும் படிப்பினை " என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் சகர் உணவு பரிமாறப்பட்டது . முன்னூறுக்கும் மேற்பட்ட அல்கோர் வாழ் சகோதரர் சகோதரிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர் . இரவு பத்து மணிக்கு தொடங்கிய இச்சிறப்பு நிகழ்ச்சி சஹர் நேரம் இரண்டுமணி வரை உற்சாகத்துடன் நடைபெற்றது . இறுதியாக பொருளாளர் செய்யத் இப்ராஹீம் அவர்களின் நன்றியுரையுடன் நிறைவேறியது அல்ஹம்துலில்லாஹ் !

"நீங்கள்,மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத்தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்!"அல்குரான் 3:110