செவ்வாய், 31 மே, 2011

27-05-2011 பெண்கள் சிறப்பு நிகழ்ச்சி


அல்லாஹுவின் திருப்பெயரால் ....
அல்லாஹுவின் அருளால், ஒவ்வொரு மாதமும் இறுதி வெள்ளிக்கிழமையில்  நடைபெறும் பெண்களுக்கானபெண்கள் உரையாற்றும் சிறப்பு நிகழ்ச்சி, QITC மர்கசில் 27-05-2011 அன்று மாலை 7:00மணிக்கு துவங்கியது.

இதில், சகோதரி. அஷ்ரஃப் நிஷா அவர்கள் "நபிகளாரின் நற்போதனைகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

அதனைத் தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சி (எழுத்துத் தேர்வு) நடைபெற்றது. இந்த 3 மாதத்திற்கு ஒருமுறை நடைபெறும் நிகழ்ச்சியில், குர் ஆன் (அத்தியாயம் 71 ,72 & 73) மற்றும் "நபிகளாரின் நற்போதனைகள்" (பாகம் 1 - 10, 21-30 & 51-60) இவற்றிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டன. இதில் அதிக மதிப்பெண்கள் பெரும் முதல் சகோதரிகளுக்கு பரிசுகள் வழங்கப்படும் இன்ஷா அல்லாஹ்.  



இந்த நிகழ்ச்சியில் 50 க்கும் மேற்பட்ட சகோதரிகளும், சிறுமிகளும்  கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.

குறிப்பு: இன்ஷா அல்லாஹ், அடுத்த பெண்கள் சிறப்பு பயான் 24 -06 -2011 அன்று நடைபெறும்.



கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்  ,
ஏர்போர்ட் ரமீஸ் பின்புறம்,
‘E’ ரிங் ரோடுபாராசூட் சிக்னல் அருகில்,
அல் துமாமாதோஹா  .
தொலைபேசி:44315863.
மின்னஞ்சல்:qitcdoha@gmail.com