சனி, 27 ஆகஸ்ட், 2011

26-08-2011 அன்று கத்தரில் மாபெரும் இஃப்தார் நிகழ்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு.

இறைவனின் உதவியால், கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) மற்றும் கத்தர் சாரிட்டி சார்பாக மாபெரும் இஃப்தார் நிகழ்ச்சி 26/08/2011 வெள்ளி மாலை 5:00 மணிக்கு அல் சத் ஸ்போர்ட்ஸ் கிளப் உள்ளரங்கத்தில் QITC துணைச் செயலாளர் A.சாக்ளா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மௌலவி முஹம்மத் தாஹா MISc (பேராசிரியர், தவ்ஹீத் இஸ்லாமியக் கல்லூரி, சேலம்) அவர்கள் வருமுன் காப்போம்என்ற தலைப்பில் மறுமையின் வெற்றிக்காக தர்மத்தை முற்படுத்துவது பற்றி சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

மேலும் QITC தலைவர் டாக்டர் அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் QITC யின் செயல்பாடுகள் பற்றி எடுத்துரைத்தார்கள். QITC செயலாளர் மௌலவி முஹம்மத் அலி மற்றும் QITC துணைச் செயலாளர் தஸ்த்தகீர் ஆகியோர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு செய்ய QITC நிர்வாகிகளும், தொண்டர்களும் சிறப்பாக களப்பணி ஆற்றினார்கள்.

சவூதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவி அப்துஸ்ஸமத் மதனி அவர்கள் மஹ்ரிப் தொழுகை நடத்தினார்கள்.

இந்நிகழ்ச்சியில் ஏராளமான சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டார்கள். அனைவருக்கும் இஃப்தார் உணவு பரிமாறப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.