திங்கள், 3 அக்டோபர், 2011

30-09-2011 அன்று தோஹா QITC மர்கசில் நடைபெற்ற பெண்கள் சிறப்பு நிகழ்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

அல்லாஹுவின் பேரருளால்,

கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) சார்பாக ஒவ்வொரு மாதமும் இறுதி வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் பெண்களுக்கான பெண்களே நடத்தும் "பயான் நிகழ்ச்சி", தோஹா QITC மர்கசில் 30-09-2011 அன்று மாலை 7:15 மணிக்கு நடைபெற்றது.

சகோதரி. கதீஜத்துல் நூரியா அவர்கள் "முஸ்லீம் பெண்களே! நம்மில் இஸ்லாம் எங்கே?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

சகோதரி. அஷ்ரஃப் நிஷா அவர்கள் "உண்மையாளர்கள் யார்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

கடந்த மே மாதம் நடந்த பெண்களுக்கான அறிவுப்போட்டியில் வெற்றி பெற்ற சகோதரிகளுக்கு இந்நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் அப்போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான சகோதரிகளும், சிறுமிகளும் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.