செவ்வாய், 1 நவம்பர், 2011

27-10-2011 அன்று நடைபெற்ற வாராந்திர பயான் நிகழ்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

அல்லாஹ்வின் பேரருளால்,

தோஹா QITC மர்கசில் வாராந்திர பயான் நிகழ்ச்சி 27-10-2011 வியாழன் இரவு 8:30 மணிக்கு நடைபெற்றது.

துவக்கமாக QITC அழைப்பாளர் டாக்டர். அஹ்மத் இப்ராஹிம் அவர்கள், "நபித்தோழியர் வரலாறு" என்ற தொடர் தலைப்பில் "ஸல்மா (ரலி)" அவர்களைப்பற்றி உரையாற்றினார்கள்.

QITC அழைப்பாளர் முஹம்மத் தமீம் MISc அவர்கள், "குர்பானியின் சட்டங்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

சவூதி மர்கஸ் அழைப்பாளர் மவ்லவி. அப்துஸ்ஸமத் மதனி அவர்கள் 6-வது வாரமாக "தவ்ஹீத்" என்ற தொடர் தலைப்பில் உரையாற்றி, "கிதாபுத் தவ்ஹீத்" என்ற நூலின் பாடத்திலிருந்து அரபி இலக்கணத்தை விளக்கினார்கள். மேலும் இதுவரை நடத்திய பாடத்திலிருந்து எழுத்துத் தேர்வுக்கான கேள்வித்தாள் கொடுக்கப்பட்டு, அதற்கு பதில் எழுதி வரும் 31/10/11 க்குள் கொடுக்குமாறு கோரினார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய, இலங்கையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட தமிழ் பேசும் சகோதர சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

இதே நேரம், பத்து வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கான தர்பியா வகுப்பை QITC அழைப்பாளர் சகோதரர். தஸ்தகீர் அவர்கள் நடத்தினார்கள்.

இறுதியாக அன்றைய பயானிலிருந்து கேள்விகளும், சென்ற வாரம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களும் சொல்லப்பட்டன.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.