புதன், 28 மார்ச், 2012

30-03-2012 பெண்கள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி - அழைப்பு


بسم الله الرحمن الرحيم
அல்லாஹ்வின் திருப்பெயரால் ....
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

மாதாந்திர பெண்கள்
சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி –
அழைப்பிதழ்


நாள் : 30/03/2012 - வெள்ளிக்கிழமை
நேரம் : மாலை 7 :௦௦ மணிமுதல்
இடம் : QITC மர்கஸ்

இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் அறிய வாய்ப்பு !

QITC -
மர்கஸில் மாதத்தின் இறுதி வெள்ளிக்கிழமையில் பெண்களே பெண்களுக்காக நடத்தும் பயான் நிகழ்ச்சி நடைபெற்று வருவதை தாங்கள் அறிவீர்கள்.

அதேபோல் இன்ஷா அல்லாஹ், வரும் வாரம் 30-03-2012 வெள்ளிகிழமை அன்று பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி உள்ளது. குடும்பத்துடன் வசிக்கும் அணைத்து சகோதரர்களும் தங்களின் குடும்பத்தினரையும் மற்றும் நண்பர்களின் குடும்பத்தினர்களையும் இந்த பயான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடையும் படி செய்யுமாறு உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம் .

கூடுதல் தகவலுக்கு:
சகோ. முஹம்மத் இல்யாஸ், +974 – 5518 7260
(பொருளாளர் & பெண்கள் பயான் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் )

செவ்வாய், 27 மார்ச், 2012

"உம்ரா" வழிகாட்டி




அல்லாஹ்வுக்காக அந்த ஆலயத்தில் ஹஜ் செய்வது, அங்குப் பயணிப்பதற்குச் சக்தி பெற்ற மனிதர்கள்மீது கடமையாகும்.

(அல் குர்ஆன் 3:97)


"உங்களது ஹஜ் மற்றும் உம்ரா செய்யும் வழிமுறையை என்னிடமிருந்து எடுத்துக் கொள்ளுங்கள்." என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(முஸ்லிம் 2286)




ஹஜ் கிரியைகள் சுருக்கம்

1.   பிறை 8: இஹ்ராம் கட்டுதல்

2.   பிறை 8: இஹ்ராமுடன் மினாவில் தங்குதல்

3.   பிறை 9: நமீராவில் உரை கேட்டல்

4.   பிறை 9: அரஃபாவில் தங்குதல்

5.   பிறை 10: முஸ்தலிஃபாவில் தங்குதல்

6.   பிறை 10: லுஹா நேரத்தில பெரிய ஜம்ராவில் மட்டும் கல் எறிதல்

7.   பிறை 10: பிராணியை பலி கொடுத்தல்

8.   பிறை 10: தவாஃப் அல் இஃபாளா செய்தல்

9.   பிறை 10: ஸஃபா மர்வாவில் சஃயீ செய்தல்

10.   பிறை 10: தலை முடியை மழித்தல்

11.   பிறை 11,12 & 13 ஆகிய இரவுகளில் மினாவில் தங்குதல்

12.   பிறை 11,12 & 13, லுஹருக்குப்பின் 3 ஜம்ராக்களிலும் கல்லெறிதல்

13.   இறுதியாக தவாஃப் அல்விதா செய்தல்


இந்த கைஏட்டின் அறிமுகம்

ஹஜ் என்ற வணக்கத்தை நாம் மூன்று வகைகளில் செய்யலாம் அதில் ஒன்று தமத்துஃ முறையில செய்யும் ஹஜ் ஆகும். தமத்துஃ முறையில் ஹஜ் செய்வது எப்படி என்பதை முதலில் பார்த்து விட்டு மற்ற வகை ஹஜ்ஜில் இருக்கும் வித்தியாசங்களை இறுதியாக பார்ப்போம்.

தமத்துஃ என்றால்: சுகம் பெறுதல் அவகாசம் எடுத்துக் கொள்ளுதல் என்று பொருள்.

தமத்துஃ முறை ஹஜ் செய்ய ஷவ்வால் மாதத்திலிருந்து துல்ஹஜ் மாதம் 8ஆம் நாளுக்கு இடைப்பட்ட நாட்களில், நாம் உம்ராவின் கிரியைகளை செய்து இஹ்ராமிலிருந்து விடுபட வேண்டும்.

பிறகு துல்ஹஜ் பிறை 8 அன்று ஹஜ் செய்வதற்காக மீண்டும் இஹ்ராமின் கட்டுப்பாட்டுக்குள் வந்து ஹஜ்ஜை நிறை வேற்ற வேண்டும்.

உம்ரா செய்ய வரிசை எண் 1 மற்றும் வரிசை எண் 8 முதல் 10 வரை பார்க்கவும்.

ஹஜ்ஜின் கிரியைகளை மட்டும் செய்ய வரிசை எண் 2 முதல் 13 வரை பார்க்கவும்.

இதற்கான ஆதாரங்களை அடி குறிப்பில் குறிப்பிடப்பட்ட எண்ணை கொண்டு கடைசி பக்கத்தில் பார்க்கவும்.


1.   பிறை 8: இஹ்ராம் கட்டுதல்

ஹஜ் மற்றும் உம்ராவுக்கான சில எல்லைகளை (மீகாத்) நபியவர்கள் குறிப்பிட்டார்கள். நாம் எந்த திசையிலிருந்து வருகிறோம் என்பதனைப் பொருத்து எல்லைகள் முடிவு செய்யப்படும். 

இந்தியா மற்றும் இலங்கையிலிருந்து செல்பவருக்கு யலம்லம், கத்தாரிலிருந்து செல்பவருக்கு கர்னுல் மனாஸில் என்பதே எல்லையாகும் (1).

ஹஜ் செய்ய துல்ஹஜ் 8 அன்று குளித்து விட்டு இஹ்ராம் அணிய வேண்டும். (2)
  • ஆண்கள் தையல் இல்லாத இரண்டு துணிகள் அணிய வேண்டும்; தலையையும் கணுக்காலையும் மறைக்கக் கூடாது. செருப்பை அணிந்து கொள்ளலாம். (3)
  • பெண்கள் முகம் கைமணிக்கட்டையை தவிர, உடலை மறைக்கும் எந்த ஆடையையும் அணிந்து கொள்ளலாம். (5)

இவ்வாறு தயாராகி “லப்பைக்க ஹஜ்ஜன்” என்று கூற வேண்டும் இவ்வாறு கூறுவதே இஹ்ராமாகும், இதன்பின் பெரிய ஜம்ராவில் கல் எறியும் வரை தல்பியாவை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். (1)

உம்ரா செய்பவர்கள் தங்களுக்கான மீகாத்தை அடைந்து “லப்பைக்க உம்ரதன்” என்று கூறி மஸ்ஜிதுல் ஹராமுக்கு செல்ல வேண்டும்; பள்ளியில் நுழையும் வரை தல்பியாவை சப்தமிட்டு கூற வேண்டும். (1) & (7)


இஹ்ராமின் போது கவனிக்க வேண்டியவை:

a)   முடி மற்றும் நகங்களை களையக் கூடாது (3)

b)   நறுமணம் பூசக் கூடாது (4)

c)   ஆண்கள் தலையை மறைக்க கூடாது, தையல் ஆடைகளை அணியக் கூடாது (3)

d)   இல்லறத்தில் ஈடுபட கூடாது (4)

e)   திருமண ஒப்பந்தம் செய்ய கூடாது (4)

f)   வேட்டையாடுதல் கூடாது (6)

g)   வீண் விவாதங்களில் மற்றும் குற்ற செயல்களில் ஈடுபட கூடாது. (4)


 



இஹ்ராமின் ஆடை




தல்பியா வாசகம்



2.   பிறை 8: மினாவில் தங்குதல்

பிறை 8 இஹ்ராமுடன் முற்பகல் நேரத்தில் மினாவை அடைந்ததும், அங்கே தொழுகைகளை குறித்த நேரங்களில் சுருக்கி தொழ வேண்டும், மறுநாள் பிறை 9 அன்று சூரியன் உதிக்கும் வரை மினாவிலேயே தங்கியிருக்க வேண்டும். (2), (8) & (9)



3.   பிறை 9: நமிராவுக்கு செல்லுதல்

அரஃபா எல்லையில் உள்ள நமிரா பள்ளிக்கு சென்று, அங்கு நிகழ்த்தப்படும் உரையை கேட்டு, லுஹர் மற்றும் அஸர் தொழுகைகளை ஜம்மு கஸர் செய்து தொழ வேண்டும், பிறகு அரஃபாவின் எல்லைக்குள் செல்ல வேண்டும். நமிராவுக்கு வர தாமதமானால் நேரடியாக அரஃபாவிற்கு சென்றுவிட வேண்டும். (2) & (9)



4.   பிறை 9: அரஃபாவில் கட்டாயம் தங்குதல்

அரஃபாவில் மக்ரீப் வரை கட்டாயம் தங்க வேண்டும். அரஃபாவில் (ஜபலுர் ரஹ்மா அருகில்) அதிகம் துஆ செய்ய வேண்டும். (10)

ஹஜ் செய்வோர் அரஃபா நோன்பு நோற்கக் கூடாது, மேலும் அவர்களுக்கு பெருநாள் தொழுகையும் கிடையாது. (11)

அரஃபாவுக்கு குறித்த நேரததில் வர முடியாதவர் பிறை 10 ஃபஜருக்கு முன் சிறிது நேரமாவது அரஃபாவில் இருக்க வேண்டும்.





5.   பிறை 10: முஸ்தலிபாவில் தங்குதல்

அரஃபாவிலிருந்து புறப்பட்டு முஸ்தலிஃபாவில் சென்று மக்ரிப் மற்றும் இஷாவை ஜம்மு கஸர் செய்து தொழ வேண்டும், மஷ்அருல் ஹராம் என்னும் இடத்தில் கிப்லாவை முன்னோக்கி அதிகம் துஆ செய்ய வேண்டும். (2) 

ஃபஜருக்கு பிறகு சூரியன் உதிப்பதற்கு முன்பாகவே அங்கிருந்து புறப்பட்டு மினா அருகே இருக்கும் வாதி முஹஸ்ஸரில் சிறிய கற்களை எடுத்துக் கொள்ள வேண்டும். (12)




6.   பிறை 10: பெரிய ஜம்ராவில் மட்டும் கல்லெறிதல்

முற்பகல் (லுஹா) நேரத்தில் மினாவில் உள்ள ஜம்ரதுல் அகபா எனும் பெரிய ஜம்ராவில் மட்டும் அல்லாஹு அக்பர்" என்று கூறிக் கொண்டே ஏழு சிறிய கற்களை எறிய வேண்டும். கற்கள் அந்த தூணில் படவேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை அந்த ஹவுலுக்குள் கற்கள் விழுவதே போதுமானது. இதன் பிறகு தல்பியாவை நிறுத்திவிட்டு, கிப்லாவை நோக்கி துஆ செய்ய வேண்டும். (2) & (13)

பெண்கள் மற்றும் பலவீனர்கள் மட்டும் பிறை 10 இரவிலே ஜம்ராவில் கல் எறியும் கிரியத்தை நிறைவேற்றி விடலாம். (15)

இத்துடன், மனைவி தொடர்பைத் தவிர மற்ற இஹ்ராமின் தடைகள் நீங்கும். (14)



7.   பிறை 10: பிராணியை பலி கொடுத்தல்

பிறை 10 பிராணியை பலி கொடுக்க வேண்டும். (2)



8.   பிறை 10: மஸ்ஜிதுல் ஹராமுக்கு சென்று காபதுல்லாவில் தவாஃப் அல் இஃபாளா/ தவாஃப் அல் ஸியாரவை கட்டாயம் செய்தல்

தவாஃபை ஹஜருல் அஸ்வத் இருக்கும் மூலையிலிருந்து அல்லாஹு அக்பர் என்று கூறி அதை தொட்டு முத்தமிட்டு தவாஃப் செய்ய துவங்க வேண்டும், தொட முடியவில்லை என்றால் அல்லாஹு அக்பர் என்று கூறி கையால் சைகை செய்து துவங்க வேண்டும், இவ்வாறு ஒவ்வொரு சுற்றின் போதும் இதே போல் செய்ய வேண்டும்.

மேலும் காபாவின் இன்னொரு மூலையான ருக்னுல் யமானியை அடையும் போது அதை தொட வேண்டும், தொட முடியவில்லை என்றால் சைகை தேவை இல்லை, ருக்னுல் யமானிக்கும் ஹஜருல் அஸ்வதுக்கும் இடையில் செல்லும் போது ரப்பனா ஆதினா ஃபித்துன்யா.. என்ற துஆவை ஓதிக் கொள்ள வேண்டும் அஜருல் அஸ்வதை கடந்ததும் நமக்கான துஆக்களை விரும்பினால் செய்துக் கொள்ளலாம், இவ்வாறாக ஏழு சுற்றுகளை சுற்ற வேண்டும், தவாஃப் செய்த பிறகு மகாமே இப்ராஹீமுக்கு சென்று

وَاتَّخِذُوۡا مِنۡ مَّقَامِ اِبۡرٰهٖمَ مُصَلًّى

வத்தகிதூ மின் மகாமி இப்ராஹீம முஸல்லா‌

என்று கூறி அங்கு இரண்டு ரக்ஆத்கள் தொழ வேண்டும், இதில் சூரதுல் ஃபாதிஹா ஓதிய பிறகு முதல் ரக்ஆத்தில் சூரா அல் காஃபிரூனும் இரண்டாம் ரக்ஆத்தில் சூரா அல் இக்லாஸையும் ஓத வேண்டும், பிறகு ஜம் ஜம் நீரை அருந்திக் கொள்ள வேண்டும், அதில் சிறிதளவு தலையில் தெளித்துக் கொள்ள வேண்டும், முடிந்தால் மீண்டும் ஹஜருல் அஸ்வதை தொட்டு முத்தமிட வேண்டும். (2) & (16-20)

உம்ரா செய்வர்கள், மஸ்ஜிதுல் ஹராமில் நுழைந்ததும் தவாஃப் அல் குதூமை செய்ய வேண்டும், தவாஃப் அல் குதூமில் முதல் மூன்று சுற்றின் போது குலுங்கி ஓட வேண்டும் மற்ற நான்கு சுற்றிலும் சாதாரணமாக நடக்க வேண்டும், மேலும் இந்த தவாஃபின் போது ஆண்கள் மட்டும் கண்டிப்பாக தைய்யல் இல்லாத ஆடையை அணிந்து இருக்க வேண்டும், மேலும் அந்த ஆடையை வலது தோள்பட்டை தெரியும் வண்ணம் அமைத்துக் கொள்ள வேண்டும், மற்ற அனைத்தும் மேலே குறிப்பிட்டதை போல் செய்ய வேண்டும். (24) & (25)





9.   பிறை 10: ஸஃபா மர்வாவில் ஸஃயி செய்தல்

اِنَّ الصَّفَا وَالۡمَرۡوَةَ مِنۡ شَعَآٮِٕرِ اللّٰهِ

இன்னஸ் ஸஃபா வல்மர்வத்த மின் ஷஆயிரில்லாஹ்

என்று கூறி, அல்லாஹ் ஸஃபாவை கொண்டு ஆரம்பித்ததால், ஸஃபாவிலிருந்து ஆரம்பிக்கிறேன் என்று சொல்லி ஸஃயீ செய்ய வேண்டும். ஸஃபாவிலிருந்து மர்வாவிற்கு செல்லுவது ஒரு சுற்று, மர்வாவிலிருந்து ஸஃபாவிற்கு திரும்புவது இரண்டாம் சுற்று — இவ்வாறு மொத்தம் ஏழு சுற்றுகள் செய்ய வேண்டும்.

ஸஃயீ ஸஃபாவில் ஆரம்பித்து மர்வாவில் முடியும். இடையில் பச்சை விளக்கு (சம தரை) பகுதியை அடையும் போது சிறிது வேகமாக (குலுங்கி) ஓட வேண்டும். ஸஃபா மற்றும் மர்வாவில் ஏறிய பின் கிப்லாவை நோக்கி திக்ருகளை செய்ய வேண்டும்.

لَا إِلَهَ إِلَّا اللهُ, اللَّهُمَّ أَكْبَرُ ,اللَّهُمَّ أَكْبَرُ, اللَّهُمَّ أَكْبَرُ

லாயிலாஹ இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் கூறிய பின் கீழ் உள்ள திக்குரை மூன்று முறை ஓதுங்கள். (26)

لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ أَنْجَزَوَعْدَهُ وَنَصَرَ عَبْدَهُ وَهَزَمَ الأَحْزَابَ وَحْدَهُ



10.   பிறை 10: முடிகளை களைதல்

உம்ரா செய்த, பின்பு ஹஜ் செய்ய வேண்டி இருப்பதால் உம்ராவின் போது முடியை கத்தரித்து கொள்ள வேண்டும், பின்பு ஹஜ் செய்யும் போது தலைமுடிகளை மழித்துக் கொள்ள வேண்டும், முடிகளை மழிக்கும் போது வலது புறமாக மழிப்பது நபி வழியாகும். (21)

பெண்கள் முடியை மழிக்க கூடாது சிறிதளவு கத்தரித்து கொள்ள வேண்டும். (22)

குறிப்பு: பிறை பத்து அன்று செய்யப்படும் கிரியைகளின் வரிசையை மாற்றி செய்வதும் எந்த குற்றமுமில்லை. (23)


11.   பிறை 11, 12 மற்றும் 13 மினாவில் தங்குதல்

பிறை 11, 12 மற்றும் 13 ஆகிய இரவுகளில் மினாவில் தங்க வேண்டும், விரும்பினால் காலையில் மக்காவிற்கு செல்லலாம். (27)


12.   பிறை 11, 12 மற்றும் 13 கல்லெறிதல்

இந்த மூன்று நாட்களிலும் லுஹருக்கு பிறகு ஏழு கற்கள் வீதம் மூன்று ஜமராகளிலும் அல்லாஹு அக்பர் என்று கூறி கொண்டே கற்களை எறிய வேண்டும், பின்பு கிப்லாவை முன்னோக்கி துஆ செய்து கொள்ள வேண்டும். (28)



13.   இறுதியில்: தவாஃப் அல் விதா செய்தல்

மேலே சொல்லபட்ட கிரியைகளை நிறைவு செய்து விட்டால் ஹஜ் கடமை நிறைவேறிவிட்டது, நாம் எப்பொழுது நாட்டிற்கு திரும்புவோமோ அப்பொழுது மட்டும் தவாஃப் அல் விதாவை செய்துவிட்டு, மகாமே இப்ராஹீமில் இரண்டு ரக்ஆத்களை தொழுதுவிட்டு செல்ல வேண்டும், இதில் ஸஃயி செய்ய தேவை இல்லை. (29)

வல்ல ரஹ்மான் நம்முடைய ஹஜ் உம்ராவை நபி (ஸல்) அவர்கள் காட்டிதந்த வழியிலேயே செய்து, நன்மைகளை பெற கூடியவர்களாக ஆக்குவானாக!




ஹஜ்ஜின்சிறப்புகள்

1.   ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ் பாவங்களை அழித்து அன்று பிறந்த குழந்தை போல் ஆக்கும்.

2.   ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு சொர்க்கத்தை தவிர வேறு கூலி இல்லை.
 
3.   பெண்களுக்கான ஜிஹாத் ஹஜ் ஆகும். 

4.   அரஃபா நாளில் அல்லாஹ் தன் அடியார்களை நரகத்திலிருந்து விடுவிப்பது போல் வேறு எந்த நாட்களிலும் விடுவிப்பதில்லை.
 
(புகாரி: 1521, 1773, 1520; முஸிலீம்: 2623) 


மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள்

மாதவிடாய் என்பது இயற்கையான நிலை. ஹஜ்ஜின் போது இது ஏற்பட்டாலும், ஹஜ்ஜில் எந்த சிக்கலும் இல்லை. சில விஷயங்கள் மட்டும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஹஜ்ஜில் செய்யும் மூன்று அம்சங்கள்:

1. தொழுகைகளை நிறைவேற்றுவது

2. குறிப்பிட்ட சில இடங்களில் தங்குவது

3. மஸ்ஜிதுல் ஹராமில் தவாஃப் செய்தல்

மாதவிடாயில் இருக்கும் பெண்கள் தொழ வேண்டிய அவசியமில்லை என்பதால் அவர்கள் தொழாமல் இருப்பது ஹஜ்ஜில் எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது.

பெண்கள் மாதவிடாயின் போது, “தவாஃபை தவிர, ஹாஜிகள் செய்யும் அனைத்தையும் செய்ய நபிகளார் அனுமதித்தார்கள்.

மினா மற்றும் அரஃபாவில் தங்குவது, கல்லெறிவது ஆகியவை செய்யலாம்.

பிறை 10 அன்று செய்யும் தவாஃப் செய்யாமல், மாதவிடாய் நின்ற பிறகு கட்டாயம் இந்த தவாஃபை செய்து கொள்ள வேண்டும், இத்துடன் ஹஜ் கிரியைகள் நிறைவு பெறும், ஒருவேளை விடை பெறும் நேரத்தில் செய்யும் தவாஃப் அல் விதாவின் போது மாதவிடாய் ஏற்ப்பட்டால் இந்த தவாஃபை செய்யாமலே விடை பெறுவது அவர்கள் மீது குற்றமாகாது. (30)


மூன்று வகை ஹஜ்ஜின் ஒப்பீடு:

ஹஜ் தமத்துஃ

ஹஜ் கிரான்

ஹஜ் இஃப்ராத்

இதன் அர்த்தம்: சுகம் பெறுதல் அவகாசம் எடுத்துக் கொள்ளுதல்

இதன் அர்த்தம்: ஹஜ் உம்ரா இரண்டும் சேர்த்து செய்தல்

இதன் அர்த்தம்: ஹஜ் மட்டும் தனித்துச் செய்தல்

நிய்யத்: உம்ராவின் போது லப்பைக்க உம்ரத்தன் பிறகு ஹஜ்ஜின் போது லப்பைக்க ஹஜ்ஜன் என்று கூற வேண்டும்

நிய்யத்: லப்பைக்க ஹஜ்ஜன் வ உம்ரதன் என்று கூற வேண்டும்

நிய்யத்: லப்பைக்க ஹஜ்ஜன் என்று கூற வேண்டும்.

தமத்துஃ ஹஜ் செய்பவர் முதலில் உம்ரா செய்து இஹ்ராமை களைந்து, துல் ஹஜ் 8 அன்று மீண்டும் இஹ்ராம் கட்டி ஹஜ் செய்ய வேண்டும்.

ஒரே இஹ்ராமில் உம்ராவும் ஹஜ்ஜும் செய்ய வேண்டும் உமரா செய்த பிறகு, இஹ்ராமை  களையாமல் ஹஜ்ஜை நிறைவேற்ற வேண்டும்.

தவாஃப் அல் குதூம் செய்து ஹஜ் கிரியைகளை நிறைவேற்றிய பின் விரும்பினால் உம்ரா செய்யலாம்.

குர்பானி கொடுக்க வேண்டும்

குர்பானி பிராணியுடன் சென்றவர் இவ்வகை ஹஜ் மட்டுமே செய்ய வேண்டும்.

குர்பானி கொடுக்க தேவை இல்லை



ஆதாரங்கள்:

(1) புகாரி 1524

(2) முஸ்லீம் 2137

(3) புகாரி 134

(4) முஸ்லீம் 2522

(5) புகாரி 1838

(6) அல் குர்ஆன் 5:96

(7) முஸ்லீம் 2194, திர்மிதீ 759

(8) புகாரி 1634, 1745

(9) புகாரி 1081-1083

(10) முஸ்லீம் 2138

(11) புகாரி 1658

(12) முஸ்லீம் 2248

(13) புகாரி 1544, 1683, 1687

(14) அபூ தாவூத் 1708

(15) புகாரி 1677, 1678, 1856

(16) அபூ தாவூத் 1710

(17) புகாரி 1606, 1612

(18) புகாரி 166, 1601

(19) அஹ்மத் 14851, அபூ தாவூத் 1616

(20) அஹ்மத் 14707

(21) புகாரி 1727

(22) அபூ தாவூத் 1694

(23) புகாரி 124, 1738

(24) முஸ்லீம் 2139, திர்மிதீ 884

(25) திர்மிதீ 787, அபூ தாவூத் 1607

(26) புகாரி 1556

(27) முஸ்லீம் 2290

(28) புகாரி 1751

(29) புகாரி 1755

(30) புகாரி 305, 1650


திங்கள், 26 மார்ச், 2012

23-03-2012 கத்தர் மண்டல மர்கஸில் அரபி இலக்கணப் பயிற்சி வகுப்பு

அல்லாஹுவின் பேரருளால்,

கத்தர் மண்டல மர்கஸில் [QITC] 23-03-2012 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6:15 மணி முதல் 7:15 மணி வரை , வாராந்திர "அரபி இலக்கணப் பயிற்சியின்" ஐந்தாவது வகுப்பு நடைபெற்றது.

ஸவூதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவி,அப்துஸ்ஸமத் அவர்கள் இவ்வகுப்பில் "பெயர்ச்சொற்களின் பல்வேறு வடிவங்களைக்" குறித்து விரிவாக பாடம் நடத்தினார்கள்.

இதில்,இந்திய - இலங்கை நாடுகளை சார்ந்த ஏராளமான சகோதர- சகோதரிகள் மற்றும் சிறார்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

இன்ஷாஅல்லாஹ், இவ்வகுப்பு ஒவ்வொரு வாரமும் ,மர்கஸில் ,இதே நேரத்தில் தொடர்ந்து நடைபெறும்.

ஞாயிறு, 25 மார்ச், 2012

23-03-2012 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொழிவுகள்

அல்லாஹுவின் பேரருளால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 23-03-2012 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்! 

1.   வக்ரா பகுதியில் சகோதரர்.முஹம்மத் யூசுஃப் அவர்கள் உரையாற்றினார்கள்.
2.   நஜ்மா பகுதியில் - சகோதரர்.அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்.
3.   அல் அத்தியா பகுதியில் மௌலவி, அப்துஸ்ஸமத் அவர்கள் உரையாற்றினார்கள்..
4.   முஐதர் பகுதியில் சகோதரர். தஸ்தகீர் அவர்கள் உரையாற்றினார்கள்.
5.   கரத்திய்யாத் பகுதியில் சகோ.காதர் மீரான் அவர்கள் உரையாற்றினார்கள்.
6.   லக்தா பகுதியில் - மௌலவி,முஹம்மத் தமீம் அவர்கள் உரையாற்றினார்கள்.
7.   கராஃபா பகுதியில்- மௌலவி,முஹம்மத் அலீ அவர்கள் உரையாற்றினார்கள்.
8.   மதினா கலிபா பகுதியில் - மௌலவி,முஹம்மத் அலீ அவர்கள் உரையாற்றினார்கள்.
9.   பின் மஹ்மூத் பகுதியில் - மௌலவி,ரிழ்வான் அவர்கள் உரையாற்றினார்கள்.
10.  அல் ஃஹீஸா பகுதியில் - மௌலவி, அன்ஸார் அவர்கள் உரையாற்றினார்கள்.
11.  சலாத்தா ஜதீத் பகுதியில் - மௌலவி,லாயிக் அவர்கள் உரையாற்றினார்கள்.
12.  கர்வா கேம்பில் - மௌலவி, அப்துஸ்ஸமத் அவர்கள் உரையாற்றினார்கள்.
13.  டொயோட்டா கேம்பில் - மௌலவி,ரிழ்வான் அவர்கள் உரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய- இலங்கையைச் சேர்ந்த பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.


சனி, 24 மார்ச், 2012

22-03-2012 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு

அல்லாஹ்வின் பேரருளால்,

கத்தர் மண்டல மர்கஸில் [QITC] வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 22-03-2012 வியாழன் இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை துணைச்செயலாளர் சகோதரர், அப்துல் பாசித் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

துவக்கமாக QITC அழைப்பாளர் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம், அவர்கள் "விருந்தோம்பல்" என்ற தொடர் தலைப்பில் உரையாற்றினார்கள்.

அடுத்ததாக QITC அழைப்பாளர் மௌலவி, முஹம்மத் அலீ அவர்கள் "நபிகளாரின் இறுதி நாட்கள் தரும் படிப்பினை" என்ற தொடர் தலைப்பில் உரையாற்றினார்கள்.

இறுதியாக, ஸவூதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவி, அப்துஸ்ஸமத் மதனி அவர்கள் "இறுதிப் பயணம்" என்ற தொடர்தலைப்பில் உரையாற்றினார்கள்.

தொடர்ந்து, கத்தர் நாட்டை விட்டு, வேறு நாட்டிற்கு வேலைக்கு செல்லும் மண்டல பொருளாளர் சகோதரர் பீர் முஹம்மத் அவர்கள் உறுப்பினர்களுக்கு தவ்ஹீத் கொள்கையில் உறுதியாக இருக்குமாறும், தவ்ஹீத் ஜமா'அத்திற்கு தொடர்ச்சியாக உதவுமாறும் வேண்டுகோள் விடுத்தார்கள்.

பின்பு, மண்டல தலைவர் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் அறிவிப்புகளும், செயலாளர் மௌலவி,முஹம்மத் அலீ அவர்கள் அன்றைய பயானிலிருந்து கேள்விகளும், சென்ற வாரம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களும் கூறினார்கள்.


இந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட சகோதர- சகோதரிகள் மற்றும் சிறார்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இரவு உணவிற்குப் பின்இலங்கை சகோதரர்களுக்கான ஒருங்கிணைப்பு கூட்டம் செயலாளர் மௌலவிமுஹம்மத் அலீ அவர்கள் தலைமையில் நடந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.


செவ்வாய், 20 மார்ச், 2012

QITC மர்கஸில் இலங்கை சகோதரர்களுக்கான தாவா ஆலோசனைக்கூட்டம் - அழைப்பிதழ்


بسم الله الرحمن الرحيم
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு...

QITC மர்கஸில் இலங்கை சகோதரர்களுக்கான தாவா ஆலோசனைக்கூட்டம் - அழைப்பிதழ் 

நாள் : 22 /03 /2012 வரும் வியாழன் இரவு பயான் முடிந்ததும் 
இடம் : QITC மர்கஸ்

அன்பிற்குரிய சகோதரர்களே ! 
கடந்த வாரம் வியாழன் அன்று நடைபெற்ற இலங்கை சகோதரர்களுக்கான தாவா கூட்டத்தில் கீழ்க்கண்ட  விசயங்கள் எடுத்துரைக்கப்பட்டது. 
அதன் விவரம் வருமாறு:
1 . சனய்யா கர்வா கேம்பில் ஒவ்வொரு புதன் கிழமையும் இஷா தொழுகையுடன் பயான் நடைபெறுகிறது.
2 . சனய்யா டொயோடா கேம்பில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இஷா தொழுகையுடன் பயான் நடைபெறுகிறது  அல்ஹம்து லில்லாஹ் !
கலந்து கொள்ள வாய்ப்புள்ளவர்கள் இந்த பயான் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பயனடையும் படி கேட்டுக்கொள்கிறோம்.
மற்றும் தாவா வை துரிதப்படுத்துவது சம்மந்தமாக  ஆலோசிக்கப்பட்டது . மற்ற இடங்களில் உள்ள இலங்கை மற்றும் இந்திய மக்களிடம் இந்த தூய ஏகத்துவம் சென்றடைய வேண்டு மென்றால் நம் அனைவருடைய பங்களிப்பும் கண்டிப்பாக அதக அதிகம் இருக்கவேண்டும். மென்மேலும் தாவா வளர வேண்டும் அதனடிப்படையில் வரும் வியாழன் இரவு அன்றும் QITC மர்கஸில் பயான் முடிந்ததும் வழக்கம் போல் நமது ஆலோசைக்கூட்டம் உள்ளது. இதில் அனைத்து இலங்கை சகோதரர்களும் தங்களுக்கு அறிந்த சகோதரர்கலுக்கு தகவலை எடுத்துரைத்து  தங்களுடன் அழைத்து வந்து சிறந்த ஆலோசனைகளை வழங்கு மாறு உங்களை அன்போடு அழைக்கிறோம்.


ஞாயிறு, 18 மார்ச், 2012

16-03-2012 அன்று நடைபெற்ற கத்தர் மண்டல நிர்வாகிகள் கூட்டம்

அல்லாஹ்வின் பேரருளால்,

வழமையாக நடைபெறும் கத்தர் மண்டல நிர்வாகிகள் கூட்டம்,  மண்டல மர்கசில் [QITC] 16-03-2012 வெள்ளிக்கிழமை மாலை 8:00 மணி முதல் 10:00 மணி வரை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மண்டல நிர்வாகம் சம்பந்தமான பல விசயங்கள் விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன. மண்டல தலைவர் டாக்டர். அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பத்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்.

சனி, 17 மார்ச், 2012

16-03-2012 கத்தர் மண்டல மர்கஸில் "அரபி இலக்கணப் பயிற்சியின்" நான்காவது வகுப்பு

அல்லாஹுவின் பேரருளால்,

கத்தர் மண்டல மர்கஸில்  [QITC] 16-03-2012 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6:00 மணி முதல் 7:00 மணி வரை, வாராந்திர "அரபி இலக்கணப் பயிற்சியின்" நான்காவது வகுப்பு நடைபெற்றது.

சவூதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவி,அப்துஸ்ஸமத் அவர்கள் இவ்வகுப்பில் "சென்ற  கால வினைச்சொற்களின் பல்வேறு வடிவங்களைக்" குறித்து விரிவாக பாடம் நடத்தினார்கள்.

இதில், இந்திய - இலங்கை நாடுகளை சார்ந்த ஏராளமான சகோதர- சகோதரிகள் மற்றும் சிறார்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

இன்ஷாஅல்லாஹ், இவ்வகுப்பு ஒவ்வொரு வாரமும்,மர்கஸில்,இதே நேரத்தில் தொடர்ந்து நடைபெறும்.

16-03-2012 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொழிவுகள்

அல்லாஹுவின் பேரருளால்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 16-03-2012 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ் !

1.  வக்ரா பகுதியில் – சகோதரர்.முஹம்மத் யூசுஃப் அவர்கள் உரையாற்றினார்கள்.
2 . நஜ்மா பகுதியில்-  சகோதரர்.வக்ரா ஃபக்ருதீன் அவர்கள் உரையாற்றினார்கள். 
3 .அல் அத்தியா பகுதியில் –   மௌலவி, அப்துஸ்ஸமத் அவர்கள் உரையாற்றினார்கள்..
4 . முஐதர் பகுதியில் –  சகோதரர். தஸ்தகீர் அவர்கள் உரையாற்றினார்கள்.
5. கரத்திய்யாத் பகுதியில் –   சகோ.காதர் மீரான் அவர்கள் உரையாற்றினார்கள்.
6. லக்தா பகுதியில் - மௌலவி,முஹம்மத் அலீ அவர்கள் உரையாற்றினார்கள்.
7. கராஃபா பகுதியில்-  மௌலவி,முஹம்மத் அலீ அவர்கள் உரையாற்றினார்கள்.
8. மதினா கலிபா பகுதியில்- மௌலவி,முஹம்மத் அலீ அவர்கள் உரையாற்றினார்கள். 
9. பின் மஹ்மூத் பகுதியில் -  மௌலவி,ரிழ்வான் அவர்கள் உரையாற்றினார்கள்.
10 . அல் ஃஹீஸா பகுதியில் -   மௌலவி, அன்ஸார் அவர்கள் உரையாற்றினார்கள்.
11. சலாத்தா ஜதீத் பகுதியில்-  மௌலவி,லாயிக் அவர்கள் உரையாற்றினார்கள்.
12. கர்வா கேம்பில்- மௌலவி, அப்துஸ்ஸமத் அவர்கள் உரையாற்றினார்கள்.
13. டொயோட்டா கேம்பில் -  மௌலவி,ரிழ்வான் அவர்கள் உரையாற்றினார்கள்.
14. அல் ஃஹோர்  பகுதியில் - மௌலவி, அப்துஸ்ஸமத்அவர்கள் உரையாற்றினார்கள்.


இந்நிகழ்ச்சியில் இந்திய- இலங்கையைச் சேர்ந்த பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.