சனி, 24 மார்ச், 2012

22-03-2012 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு

அல்லாஹ்வின் பேரருளால்,

கத்தர் மண்டல மர்கஸில் [QITC] வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 22-03-2012 வியாழன் இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை துணைச்செயலாளர் சகோதரர், அப்துல் பாசித் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

துவக்கமாக QITC அழைப்பாளர் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம், அவர்கள் "விருந்தோம்பல்" என்ற தொடர் தலைப்பில் உரையாற்றினார்கள்.

அடுத்ததாக QITC அழைப்பாளர் மௌலவி, முஹம்மத் அலீ அவர்கள் "நபிகளாரின் இறுதி நாட்கள் தரும் படிப்பினை" என்ற தொடர் தலைப்பில் உரையாற்றினார்கள்.

இறுதியாக, ஸவூதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவி, அப்துஸ்ஸமத் மதனி அவர்கள் "இறுதிப் பயணம்" என்ற தொடர்தலைப்பில் உரையாற்றினார்கள்.

தொடர்ந்து, கத்தர் நாட்டை விட்டு, வேறு நாட்டிற்கு வேலைக்கு செல்லும் மண்டல பொருளாளர் சகோதரர் பீர் முஹம்மத் அவர்கள் உறுப்பினர்களுக்கு தவ்ஹீத் கொள்கையில் உறுதியாக இருக்குமாறும், தவ்ஹீத் ஜமா'அத்திற்கு தொடர்ச்சியாக உதவுமாறும் வேண்டுகோள் விடுத்தார்கள்.

பின்பு, மண்டல தலைவர் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் அறிவிப்புகளும், செயலாளர் மௌலவி,முஹம்மத் அலீ அவர்கள் அன்றைய பயானிலிருந்து கேள்விகளும், சென்ற வாரம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களும் கூறினார்கள்.


இந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட சகோதர- சகோதரிகள் மற்றும் சிறார்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இரவு உணவிற்குப் பின்இலங்கை சகோதரர்களுக்கான ஒருங்கிணைப்பு கூட்டம் செயலாளர் மௌலவிமுஹம்மத் அலீ அவர்கள் தலைமையில் நடந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.