ஞாயிறு, 22 ஏப்ரல், 2012

20-04-2012 கத்தர் மண்டல மர்கஸில் அரபி இலக்கணப் பயிற்சி வகுப்பு

அல்லாஹுவின் பேரருளால்,

கத்தர் மண்டல மர்கஸில் [QITC] 20-04-2012 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை , வாராந்திர "அரபி இலக்கணப் பயிற்சியின்" எட்டாவது வகுப்பு நடைபெற்றது.

ஸவூதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவி,அப்துஸ்ஸமத் அவர்கள் இவ்வகுப்பில் "எழுவாய்-பயனிலை" குறித்து "இரண்டில் எது சரி?" என்ற கேள்வி-பதில் முறையில் விரிவாக பாடம் நடத்தினார்கள்.

இதில், இந்திய - இலங்கை நாடுகளை சார்ந்த ஏராளமான சகோதர - சகோதரிகள் மற்றும் சிறார்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

இன்ஷாஅல்லாஹ், இவ்வகுப்பு ஒவ்வொரு வாரமும் ,மர்கஸில், இதே நேரத்தில் தொடர்ந்து நடைபெறும்.