ஞாயிறு, 24 ஜூன், 2012

21-06-2012 அல் ஃஹோர் கம்யூனிட்டி சொற்பொழிவு

அல்லாஹ்வின் பேரருளால்,

கத்தர் மண்டலம் அல் ஃஹோர் கம்யூனிட்டி வளாகத்தில் உள்ள "தாருல் அர்கம்" உள்ளரங்கத்தில் வாரம் விட்டு வாரம் நடைபெறும் சொற்பொழிவு நிகழ்ச்சி 21-06-2012 வியாழன் இரவு 7:00 மணி முதல் 8.30 மணி வரை,கிளைப் பொறுப்பாளர் சகோதரர்.நெய்னா முஹம்மத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

துவக்கமாக,மண்டல பேச்சாளர் சகோதரர்.சபீர் அஹ்மத் அவர்கள் "எதிர்ப்பில் வளர்ந்த ஏகத்துவம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

அடுத்து,கத்தர் கெஸ்ட் சென்டர் அழைப்பாளர்,சகோ.அப்துர்ரஹ்மான்அவர்கள் "தவிர்க்க வேண்டிய தீமைகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இறுதியாக,மண்டல பேச்சாளர் மௌலவி, முஹம்மத் தமீம் ,M.I.Sc., அவர்கள் "இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்" நிகழ்ச்சியில், பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் பல குடும்பத்தார்கள் தங்களது குழந்தைகளுடன், ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்!