வியாழன், 19 ஜூலை, 2012

கத்தர் மண்டல மர்கசில் ரமலான் மார்க்க அறிவுப்போட்டி நிகழ்ச்சி 12-07-2012

அல்லாஹ்வின் பேரருளால்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டல மர்கஸில் [QITC] வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 12-07-2012 வியாழன் இரவு 8:30 மணி முதல் 10:20 மணி வரை எதிர்வரும் ரமலானை முன்னிட்டு ரமலான் தொடர்பான மார்க்க அறிவுப்போட்டி (கேள்வி, பதில்) நிகழ்ச்சியாக  மண்டலமர்கஸ் உள்ளரங்கத்தில் மண்டல பொருளாளர், சகோதரர். முஹமத் இலியாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியின் துவக்கமாக மண்டல பேச்சாளர் சகோதரர்  காதர் மீரான் அவர்கள்  "நபிவழியில் நோன்பு நோற்போம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

பின்னர் மண்டல செயலாளர் சகோதரர் .முஹமத் அலி Misc அவர்கள் மார்க்க அறிவுப்போட்டியை (கேள்வி, பதில்)  பெண்கள், ஆண்கள் என்று இரு குழுக்களாக பிரித்து  ரமலான் தொடர்பான சந்தேகங்களை போக்கும் முகமாக ரமலான் தொடர்பான கேள்விகளை கேட்டு அவற்றுக்கு மதிப்பெண் வழங்கினார்கள். இதில் ஏராளமான சகோதர, சகோதரிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டு சிறப்பாக பதில் அளித்தனர்.

மண்டல துணைச் செயலாளர் சகோதரர் .தஸ்தகீர் அவர்கள் அறிவிப்புகள் செய்தார்கள். இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் அதிகமான இந்திய, இலங்கையை சேர்ந்த சகோதர ,சகோதரிகள் மற்றும் சிறார்கள் கலந்துகொண்டனர். கலந்துகொண்ட அனைவருக்கும் இரவு உணவு பரிமாறப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.









مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863 
Vodafone: 70138460