ஞாயிறு, 8 ஜூலை, 2012

கத்தர் மண்டல மர்கஸில் [QITC ] வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 05-07-2012

அல்லாஹ்வின் பேரருளால், 

கத்தர் மண்டல மர்கஸில் [QITC ] வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 05-07-2012 வியாழன் இரவு 8:30 மணி முதல் 10:20 மணி வரை எதிர்வரும் ரமலானை வரவேற்கும் முகமாக ரமலானை வரவேற்போம்  எனும்  சிறப்பு நிகழ்ச்சியாக  மண்டல துணைச் செயலாளர் சகோதரர் .காதர்மீரான்   அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

துவக்கமாக மண்டல அழைப்பாளர் சகோதரர்.தஸ்தகீர்    அவர்கள் "ரமளானின் சிறப்புகள்   " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

அடுத்ததாக மண்டல அழைப்பாளர் .சகோதரர்  மௌலவி ரில்வான்   அவர்கள் " இறையச்சம் "  என்ற  தலைப்பில் உரையாற்றினார்கள்.

இறுதியாக,மண்டல அழைப்பாளர் மௌலவி,அப்துஸ்ஸமத் மதனீ   அவர்கள் " நோன்பின் சட்டங்கள்  " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

பின்பு, மண்டல இணைச் செயலாளர் .சகோதரர் . வக்ரா .ஃ பக்ருதீன்   அவர்கள் அறிவிப்புகளும், செயலாளர் மௌலவி,முஹம்மத் அலீ அவர்கள்  சென்ற வாரம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களையும்   கூறினார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட சகோதர- சகோதரிகள் மற்றும் சிறார்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.