சனி, 6 அக்டோபர், 2012

04-10-2012 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு

அல்லாஹ்வின் பேரருளால்,

கத்தர் மண்டலமர்கஸில் [QITC] வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 04-10-2012 வியாழன் இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை துணை பொருளாளர் சகோதரர்.காதர் மீரான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

துவக்கமாக மண்டல அழைப்பாளர் சகோதரர்.வக்ரா ஃபக்ருதீன் அவர்கள் "துஆவின் ஒழுங்குகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

அடுத்ததாக மண்டல அழைப்பாளர் மௌலவி,அன்ஸார் மஜீதி அவர்கள், "உண்மையான முஸ்லிம் யார்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இறுதியாக,சவூதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவி,அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் "நாயனைநினைவில் நிறுத்துவோம்" என்ற தொடர் தலைப்பில் உரையாற்றினார்கள்.

பின்பு, மண்டல தலைவர் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் அறிவிப்புகள் பல செய்ய, தொடர்ந்து செயலாளர் மௌலவி, முஹம்மத் அலீ,M.I.Sc.,அவர்கள் சென்ற வார பயான் கேள்விகளுக்கான விடைகளும், இந்த வார பயானில் இருந்து மூன்று கேள்விகளும் கேட்டு நிகழ்ச்சியை நிறைவு செய்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட சகோதர- சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

இதே நேரம், மௌலவி,முஹம்மத் தமீம் M.I.Sc. அவர்கள் "குழந்தைகளுக்கான தர்பியா" வகுப்பை  நடத்தினார்கள்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.