ஞாயிறு, 14 அக்டோபர், 2012

11-10-2012 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு


அல்லாஹ்வின் பேரருளால்,  

கத்தர் மண்டல  மர்கஸில் [QITC] வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 11-10-2012 வியாழன் இரவு 8:30 மணி முதல் 10:30 மணி வரை தலைவர்  டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம்  தலைமையில் நடைபெற்றது.

துவக்கமாக மண்டல அழைப்பாளர் சகோதரர். முஹம்மத்  யூசுஃப்  அவர்கள் "அனாச்சாரங்கள்"  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

அடுத்ததாக மண்டல அழைப்பாளர் மௌலவி,இஸ்ஸதீன் ரிழ்வான் சலஃபி அவர்கள், "சமுதாய மறுமலர்ச்சி" என்ற  தலைப்பில் உரையாற்றினார்கள்.

இறுதியாக,மண்டல அழைப்பாளர் மௌலவி,முஹம்மத் தமீம்,M.I.Sc., அவர்கள் "குர்பானியின் சட்ட -திட்டங்களை கேள்வி -பதில் முறையில்" நடத்தினார்கள்.

பின்பு, மண்டல தலைவர் டாக்டர். அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் அறிவிப்புகள் பல செய்ய, தொடர்ந்து செயலாளர் மௌலவி, முஹம்மத் அலீ,M.I.Sc.,அவர்கள் சென்ற வார பயான் கேள்விகளுக்கான  விடைகளும், இந்த வார பயானில் இருந்து மூன்று கேள்விகளும்   கேட்டு நிகழ்ச்சியை நிறைவு செய்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட சகோதர- சகோதரிகள்  ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள். 

இதே நேரம், சகோதரர். காதர் மீரான் மற்றும் சகோதரர்.வக்ரா ஃபக்ருதீன் ஆகியோர் தர்பியா குழந்தைகளுக்கான, 'பெற்றோர்கள் கலந்துரையாடலை', தர்பியா அறையில் வைத்து நடத்தினார்கள்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

அல்ஹம்துலில்லாஹ்.

مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE [QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863 
Vodafone: 70138460
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/