திங்கள், 29 அக்டோபர், 2012

25-10-2012 கத்தர் மண்டல மர்கஸில் அரஃபா நாள் நோன்பு திறப்பு மற்றும் சிறப்பு சொற்பொழிவு

அல்லாஹுவின் அருளால்,


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா'அத்,கத்தர் மண்டலம் சார்பாக, மண்டல QITC மர்கஸில், 25-10-2012 வியாழக்கிழமை மாலை 5 மணி முதல் 8 மணி வரை, அரஃபா நாள் நோன்பு திறப்பு நிகழ்ச்சி மற்றும் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இதில் தாயகத்தில் இருந்து வருகை புரிந்திருக்கும், மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் சகோ. முஹம்மத் அல்தாஃபி அவர்கள் "தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா'அத்தின் தனித்துவம்" என்ற தலைப்பில் இயக்கங்கள் எப்படி இருக்க வேண்டும் - அவற்றின் கொள்கைகள் எப்படி இருக்க வேண்டும் - அவற்றின் நிர்வாகிகள் எப்படி இருக்க வேண்டும் என்பன போன்ற பல விசயங்களை தெளிவாக எடுத்துரைத்தார்கள்.

இந்நிகழ்ச்சிகளில், 80 க்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்துகொண்டு பயனடைந்தார்கள்.