ஞாயிறு, 30 டிசம்பர், 2012

27-12-2012 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு


அல்லாஹ்வின் பேரருளால்,

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டலமர்கஸில் [QITC] வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 27-12-2012 வியாழன்இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை இணைச் செயலாளர் வக்ரா ஃபக்ருதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

ஆரம்பமாக, மண்டல அழைப்பாளர் சகோதரர்.ஹயாத் பாஷா அவர்கள் "ஏழ்மையை பொருந்திக் கொள்வோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

அடுத்து,மண்டல அழைப்பாளர் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் "விளை நிலங்களை விரிவுபடுத்துவோம்"என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இறுதியாக, மண்டல அழைப்பாளர் மௌலவி,அன்ஸார் மஜீதி ,அவர்கள் "மயக்க வைக்கும் மறுமை" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

பின்பு, மண்டல தலைவர் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் அறிவிப்புகள் பல செய்ய, தொடர்ந்து செயலாளர் மௌலவி,முஹம்மது அலீ M.I.Sc. அவர்கள் இன்றைய பயானில் இருந்து மூன்று கேள்விகள் கேட்டுநிகழ்ச்சியை நிறைவு செய்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 130-க்கும் மேற்பட்ட சகோதர- சகோதரிகள்ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள். 

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

அல்ஹம்துலில்லாஹ்.