திங்கள், 3 டிசம்பர், 2012

30-11-2012 கத்தர் மண்டல மர்கசில் "பெண்கள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி"

அல்லாஹுவின் அருளால், 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா'அத்-கத்தர் மண்டல மர்கசில் [QITC-கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்] ஒவ்வொரு மாதமும் இறுதி வெள்ளிக்கிழமைகளில், பெண்களுக்கு பெண்களே நடத்தும் "பெண்கள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி", 30-11-2012 வெள்ளி அன்று மாலை 7:00 மணி முதல் 8:00 மணி வரை சகோதரி. கதீஜத்துல் நூரியா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

ஆரம்பமாக, சகோதரி. ரஹானா சுல்தானா அவர்கள் "மறுமை சிந்தனையை மட்டுப்படுத்தாதீர்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

பின்பு,சகோதரி. அஷ்ரஃப் நிஷா அவர்கள் "அழிவுநாளின் அடையாளங்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் 40 க்கும் மேற்பட்ட சகோதரிகளும், சிறுமிகளும் கலந்து கொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.