ஞாயிறு, 13 ஜனவரி, 2013

11-01-2013 கத்தர் மண்டல மர்கஸில் அரபி இலக்கணப் பயிற்சி

அல்லாஹுவின் பேரருளால், 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டல மர்கஸில் [QITC], 11-01-2013 வெள்ளிக்கிழமை அன்று மாலை 5:30 மணி முதல் 6:30 மணி வரை, வாராந்திர "அரபி இலக்கணப் பயிற்சியின்" இருபத்து நான்காவது  வகுப்பு நடைபெற்றது.
 
ஸவூதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவி,அப்துஸ்ஸமத் மதனீ அவர்கள் இவ்வகுப்பில் "ஐந்து எழுத்து வினைச்சொற்கள்"  வகை பாடங்களை  நடத்தினார்கள்.

இதில்,இந்திய - இலங்கை நாடுகளை சார்ந்த  சகோதர - சகோதரிகள் கலந்து கொண்டார்கள். 

இன்ஷாஅல்லாஹ், இவ்வகுப்பு ஒவ்வொரு வாரமும் மஃக்ரிப்  தொழுகையை தொடர்ந்து நடைபெறும்.