சனி, 26 ஜனவரி, 2013

24-01-2013 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு


அல்லாஹ்வின் பேரருளால், 

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டல மர்கஸில் [QITC] வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 24-01-2013 வியாழன் இரவு 8:30 மணி முதல் 10:15 மணி வரை துணைச் செயலாளர் சகோதரர்.அப்துர்ரஹ்மான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

ஆரம்பமாக, மண்டல அழைப்பாளர் சகோதரர்.காதர் மீரான் அவர்கள் "செய்த வினையை சிந்திப்போம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

அடுத்ததாக, மண்டல அழைப்பாளர் மௌலவி,லாயிக் அவர்கள் "மறுமையில் படைப்பாளனும்-படைப்பினங்களும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இறுதியாக, மண்டல அழைப்பாளர் மௌலவி,முஹம்மத் அலீ,M.I.Sc.,அவர்கள் "மவ்லீதை மவ்தாக்குவோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

தொடர்ந்து, தமிழகம் - தஞ்சாவூர் மாவட்டம் - கரம்பக்காடு என்ற ஊரைச் சார்ந்த சகோதரர்.சந்திர போஸ் அவர்களுக்கு, இஸ்லாமிய மார்க்கத்தை அறிந்து கொள்வதற்காக "திருக்குர்'ஆன் தமிழாக்கம், திருமறையின் தோற்றுவாய், திருக்குர்'ஆனின் அறிவியல் சான்றுகள், அர்த்தமுள்ள மார்க்கம் மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம்" ஆகிய புத்தகங்களை மண்டல துணைச் செயலாளரும், இஸ்லாமிய அழைப்புப்பிரிவு பொறுப்பாளராகுமாகிய சகோதரர். அப்துர்ரஹ்மான் அவர்கள் மண்டலம் சார்பாக இலவசமாக வழங்கி இஸ்லாத்தைப் பற்றி அவருக்கு எடுத்துக் கூறினார்கள் 

பின்பு, மண்டல இணைச் செயலாளர் சகோதரர்.வக்ரா ஃபக்ருதீன் அவர்கள் அறிவிப்புகள் பல செய்து ,தொடர்ந்து இன்றைய பயானில் இருந்து மூன்று கேள்விகள் கேட்டு நிகழ்ச்சியை நிறைவு செய்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 140-க்கும் மேற்பட்ட சகோதர- சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள். 

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

அல்ஹம்துலில்லாஹ்.