திங்கள், 28 ஜனவரி, 2013

25-01-2013 கத்தர் மண்டல மர்கஸில் "பெண்கள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி"

அல்லாஹுவின் அருளால்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா'அத்-கத்தர் மண்டல மர்கஸில் [QITC-கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்] ஒவ்வொரு மாதமும் இறுதி வெள்ளிக்கிழமைகளில், பெண்களுக்கு பெண்களே நடத்தும் மாதாந்திர "பெண்கள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி", 25-01-2013 வெள்ளி அன்று மாலை 7:00 மணி முதல் 8:00 மணி வரை நடைபெற்றது.

ஆரம்பமாக,சகோதரி.கதீஜத்துல் நூரிய்யா அவர்கள் 'இஸ்லாமிய புணரமைப்பில் பெண்களின் பங்கு' என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

அடுத்ததாக,சகோதரி.அஷ்ரஃப் நிஷா அவர்கள் 'உலகாசையை உதறித் தள்ளுவோம்' என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இறுதியாக,சென்ற மாத தேர்வில் முதல் மூன்று நிலைகளைப் பிடித்த சகோதரிகளுக்கு 'நபிமொழி தமிழாக்கம்' புத்தகம் ஊக்கப்பரிசாக வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் 60 க்கும் மேற்பட்ட சகோதரிகளும், சிறுமிகளும் கலந்து கொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.