சனி, 16 பிப்ரவரி, 2013

14-02-2013 கத்தர் மண்டலம் அல்-நஜாஹ் கிளை வாராந்திர சொற்பொழிவு

அல்லாஹ்வின் பேரருளால், 

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டலம் ,சனாயிய்யா பகுதியிலுள்ள  அல்-நஜாஹ்  கிளையில்  அல்-நஜாஹ் ஆட்டோமேடிக் டைல்ஸ் ஃபேக்டரி  வளாகத்தில், 14-02-2013 வியாழன்  இரவு 8:30 மணி முதல் 9:30 மணி வரை , வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி  நடைபெற்றது.

ஆரம்பமாக, மண்டல அழைப்பாளர் சகோதரர்.தஸ்தகீர் அவர்கள்  'சிறந்ததும்-நிலையானதும்' என்ற தொடர் தலைப்பில் உரையாற்றினார்கள்.

அடுத்ததாக,மண்டல அழைப்பாளர் மவ்லவி,இஸ்ஸதீன் ரிழ்வான் ஸலஃபி அவர்கள் 'சுய பரிசோதனை' என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இறுதியாக, மண்டல செயலாளர்  சகோதரர்.தஸ்தகீர் அவர்கள் அறிவிப்புகள் பல செய்து நிகழ்ச்சியை நிறைவு செய்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட சகோதரர்கள்  ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.