சனி, 6 ஏப்ரல், 2013

சனாயிய்யா அல்-நஜாஹ் கிளையில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 04-04-2013


அல்லாஹ்வின் பேரருளால்,

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டலம், சனாயிய்யா பகுதியிலுள்ள அல்-நஜாஹ் கிளையில் அல்-நஜாஹ் ஆட்டோமேடிக் டைல்ஸ் ஃபேக்டரி வளாகத்தில், 04-04-2013 வியாழன் இரவு 8:30 மணி முதல் 9:30 மணி வரை, வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் முதலில் சகோதரர் ஃ பக்ருதீன் அலி அவர்கள் "துன்பங்களில் இருந்து மீள்வது எப்படி?" என்ற தலைப்பிலும், அடுத்ததாக மவ்லவி அப்துஸ் சமத் மதனீ, அவர்கள் "திருக்குர்ஆன் தரும் பாடம்" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.