சனி, 11 மே, 2013

சனாயிய்யா பகுதியிலுள்ள அல்-நஜாஹ் கிளையில் மார்க்க சொற்பொழிவு 09-05-2013

அல்லாஹ்வின் பேரருளால்,

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டலம் சனாயிய்யா பகுதியிலுள்ள அல்-நஜாஹ் கிளையில் அல்-நஜாஹ் ஆட்டோமேடிக் டைல்ஸ் ஃபேக்டரி வளாகத்தில், 09-05-2013 வியாழன் இரவு 8:30 மணி முதல் 9:30 மணி வரை, சிறப்பு மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது.

கத்தர் மண்டல அழைப்பாளர் சகோதரர் மனாஸ் பயானி அவர்கள் "இறையச்சம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். பின்னர் இனைச்செயலாளர் சகோதரர் காதர் மீரான் அவர்கள் பிற மத சகோதரர்கள் கலந்து கொள்ளும் "இஸ்லாம் என் பார்வையில்" என்ற கட்டுரை போட்டி பற்றி அறிவிப்பு செய்தார்கள் .

இதில் 50க்கும் மேற்ப்பட்ட சகோதரர்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தார்கள்.