சனி, 18 மே, 2013

கத்தர் மண்டலத்தி்ல் "சிறார்கள் தர்பியா" 16-05-2013

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத்,கத்தர் மண்டலத்தில், "சிறார்கள் தர்பியா" 16-05-2013 வியாழன் அன்று இரவு 9 மணி முதல் 10 மணி வரை நடைபெற்றது. 

ஆரம்பமாக,மண்டல அழைப்பாளர் மவ்லவி அன்சார் மஜிதி அவர்கள் அல்லாஹ், நபிமார்கள், குர் ஆன், துஆ ஆகிய தலைப்புகளில் இதுவரை நடந்த பாடங்களை நினைவு படுத்தி எதிர்வரும் 23 ஆம் தேதி தேர்விற்கு குழந்தைகளை தயார்படுத்தினார்கள். இவ்வகுப்பில் பல சிறுவர் - சிறுமிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.