சனி, 25 மே, 2013

"சிறார்கள் தர்பியா" வாய்மொழி தேர்வு 23-05-2013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டலத்தில், "சிறார்கள் தர்பியா" வில் வாய்மொழி தேர்வு 23-05-2013 வியாழன் அன்று இரவு 9 மணி முதல் 10 மணி வரை நடைபெற்றது.

இதில், மண்டல அழைப்பாளர் மவ்லவி முஹமத் தமீம் MISc, மவ்லவி மனாஸ் பயானி மற்றும் சகோதரர் ஃ பக்ருதீன் அலி ஆகியோர் "அல்லாஹ், நபிமார்கள், குர் ஆன், துஆ, நல்லொழுக்கங்கள்" ஆகிய தலைப்புகளில் இருந்து சிறுவர் சிறுமிகளுக்கு கேள்விகள் கேட்டு வாய்மொழி தேர்வு நடத்தினார்கள். இதில் பல சிறுவர் சிறுமிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு பதில் அளித்தார்கள்

கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்!