சனி, 8 ஜூன், 2013

கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு 06-06-2013

அல்லாஹ்வின் பேரருளால், தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு 06-06-2013 வியாழன் இரவு 8:45 மணி முதல் 10:00 மணி வரை சகோதரர் ஃ பக்ருதீன் அலி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

ஆரம்பமாக,மண்டல அழைப்பாளர் சகோதரர் காதர்மீரான் அவர்கள் "அல்லாஹ்வின் கருணை" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

அடுத்ததாக மண்டல அழைப்பாளர் மவ்லவி இஸ்சத்தின் ரிள்வான் ஸலஃபி அவர்கள் "நமது பெண்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

பின்னர்மண்டல அழைப்பாளர் மவ்லவி மனாஸ் பயானி அவர்கள் "அல்லாஹ்வையும், அல்லாஹ்வின் தூதரையும் நேசிப்பதின் அளவுகோல்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

பின்பு மண்டலத்தலைவர் சகோதரர் மஸ்வூத் அவர்கள் தலைமை நடத்தும் தாயீக்கள் பயிற்சிவகுப்பு பற்றியும், இன்னும் பல அறிவிப்புகளும் செய்தார்கள். பின்னர் மண்டல துணைத் தலைவர் சகோதரர் ஃ பக்ருதீன் அலி அவர்கள் அன்றைய உரையிலிருந்து மூன்று கேள்விகள் கேட்டு நிகழ்ச்சியை நிறைவு செய்து வைத்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 140-க்கும் மேற்பட்ட சகோதர- சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.