திங்கள், 12 ஆகஸ்ட், 2013

QITC நடத்திய "மாபெரும் இஃப்தார் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி" 01/08/2013

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 01/08/2013 வியாழக்கிழமை அன்று கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் நடத்திய "மாபெரும் இஃப்தார் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி" கிரிக்கெட் விளையாட்டுள்ளரங்கத்தில் மாலை 4:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை மண்டல செயலாளர் சகோதரர். M.முஹம்மத் அலி MISc அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

சிறப்பு பேச்சாளர் மவ்லவி கே. அப்துன் நாசர் MISc அவர்கள் "வெளிநாடுகள் வாழும் நாம்!" என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்.

பின்னர் வந்திருந்த அனைவருக்கும் இஃப்தார் செய்வதற்காக உணவு வழங்கப்பட்டது, மக்ரிப் தொழுகை நிறைவேற்றப்பட்ட பின் மண்டல செயலாளர் சகோதரர் முஹம்மத் அலி MISc அவர்கள் எதிர்வரும் நிகழ்ச்சிகள் குறித்த அறிவிப்புகளை செய்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் 400 க்கும் அதிகமான சனையா பகுதியில் உள்ள பேச்சுலர் சகோதரர்கள் கலந்துகொண்டனர். .வந்திருந்த அனைவருக்கும் இப்தார் உணவு பரிமாறப்பட்டது. உணவுக்கான ஏற்பாட்டினை உணவுக்குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர். தொண்டரணியினர் வாகனங்களை சரியாக நிறுத்தவும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறவும் ஒத்துழைப்பு நல்கினார்கள். 

பின்னர் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் சிறப்பு கேள்வி பதில் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இருதியாக துணை செயலாளர் சகோதரர் தஸ்தகீர் நன்றியுரை கூறி நிறைவு செய்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்!!