ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி வியாழன் 05-09-2013

அல்லாஹ்வின் பேரருளால்,

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டல QITC மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி  05-09-2013 வியாழன் இரவு 8:45 மணி முதல் 10:00 மணி வரை மண்டல இணைச்செயலாளர் சகோதரர் ஷைக்அப்துல்லாஹ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் சகோதரர் இஸ்மாயில்சதகத்கான் அவர்கள் "பிறர் நலம் பேணுதல்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்

அடுத்ததாக மவ்லவி முஹமத் லாயிக் அவர்கள் "பள்ளிவாசல்களும் முஸ்லிம்களும்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

பிறகு மவ்லவி மனாஸ் பயானி அவர்கள் "யஹ்சூஜ் மஹ்சூஜ் என்பவர்கள் யார்?" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

மேலும் நிகழ்ச்சியின் இறுதியில் மண்டல தலைவர் சகோ. மஸ்வூத் அவர்கள்  அறிவிப்புகள் பல செய்து நன்றியுரை கூறி நிகழ்ச்சியினை நிறைவு செய்து வைத்தார்கள்.

இதில் ஏராளமான இந்திய இலங்கையை சேர்ந்த சகோதர சகோதரிகள் கலந்துகொண்டு பயன் பெற்றனர். அனைவருக்கும் இரவு உணவு பரிமாறப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !