ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

QITC யின் அல் நஜாஹ் கிளையில் 05-09-2013 வியாழன் சொற்பொழிவு நிகழ்ச்சி


அல்லாஹ்வின் பேரருளால்,

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டல QITC யின் சனையா கிளையான அல் நஜாஹ் கிளையில் 05-09-2013 வியாழன் இரவு 8:40 மணி முதல் 10:00 மணி வரை கிளைப்பொறுப்பாளர் சகோதரர் சாதிக் அவர்கள் தலைமையில் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் முதலில் சகோதரர் ஃபக்ருதீன் அலி அவர்கள் "துஆக்களின் ஒழுங்குகள்" என்ற தலைப்பிலும், அடுத்ததாக மவ்லவி இஸ்சத்தின் ரிள்வான் ஸலபி அவர்கள் "நபிமார்களின் துஆக்கள்" என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.

இதில் ஏராளமான இந்திய இலங்கையை சேர்ந்த சகோதரர்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர். அனைவருக்கும் இரவு உணவுவழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !