ஞாயிறு, 27 டிசம்பர், 2015

25-12-2015 அன்று கத்தரில் கொட்டும் மழையிலும் சிறப்பாக நடைபெற்ற இரத்ததான முகாம்


ஏக இறைவனின் திருப்பெயரால்...

25-12-2015 வெள்ளிகிழமை அன்று கத்தர் மண்டலம்‬ சார்பாக மாபெரும் ‪இரத்ததான முகாம்‬ நடைபெற்றது. கத்தரில் அன்று காலை முதல் பெய்த அடைமழையையும் பொருட்படுத்தாமல் நம் சகோதரர்கள் அதிக அளவில் வருகை தந்திருந்தனர்.

வருகை தந்திருந்த சகோதர்கள் அனைவரையும் முறைபடுத்தி வருகை பதிவு செய்து வருகை எண் வழங்கப்பட்டது. பின்னர்‪ ஹமத்‬ மருத்துவ குழுவிற்கு உடல் பரிசோதனைக்கு அனுப்பட்டு தகுதி பெற்ற சகோதர்கள் இரத்ததான ஊர்தியில் அனுமதிக்கப்பட்டனர்.

பிற்பகல் ஒரு மணிக்கு துவங்கப்பட்ட முகாம் இரவு ஏழு மணிவரை நடைபெற்றது.

நமது இரத்ததான முகாம் சிறப்பாக நடைபெற, ஹமத் மருத்துவமனை இரத்த வங்கி, மருத்துவர்கள், செவிலியர்கள், ஆய்வாளர்கள் என 10 பேர் கொண்ட குழுவை அனுப்பி வைத்தது. மேலும் ஆறு படுக்கை கொண்ட நவீன பேருந்தையும், ‪QITC மர்கஸ்க்கு‬ அனுப்பி, இரத்ததான முகாம் சிறப்பாக நடைபெற உதவியது.‪

கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்‬ சார்பாக, குருதி கொடையளித்த சகோதர்களுக்கும், ஹமத் மருத்துவமனை இரத்த வங்கிக்கும் எங்களது இதயம் கனிந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறோம்.

‪அல்ஹம்துலில்லாஹ்‬...