சனி, 2 ஏப்ரல், 2016

31/03/2016 அன்று QITC மர்கஸில் நடைபெற்ற "இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்" நிகழ்ச்சி



31/03/2016 அன்று QITC மர்கஸில் நடைபெற்ற "இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்" கேள்வி-பதில் நிகழ்ச்சியில் மாநில தலைவர் சகோ. அல்தாஃபி அவர்கள் பதிலளித்தார்கள்.

கேட்கப்பட்ட கேள்விகள்:

1) மனோ இச்சையை பின்பற்றினால் மறுமை வெற்றி கிடைக்குமா?

2) பெண்கள் சபைக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கப்பட வில்லை? திரை போடுவது தடுக்கப்பட்டது ஏன் பிற்பற்றப்படுவது இல்லை?

3) பொய் சொல்வதற்கு விதிவிலக்கு உண்டா? போரில் நபி பொய் சொன்னது பற்றி?

4) குழந்தைகளுக்காக கண் திருஷ்டி பாதுகாப்பு துஆ புகாரியில் உண்டே. அது பற்றி?

5) சூனியம் அல்லாஹ்வின் நாட்டத்தினால் நடக்கும் என்று நம்புபவர்களை முஷ்ரிக் என்று சொல்லலாமா?

6) ஆயிஷா (ரலி) பள்ளியில் (மிக்காத் இல்லாத) இஹ்ராம் கட்டலாமா?

7) தவ்ஹீத் தாயீக்களின் பேச்சு மரியாதை குறைவாக இருப்பது சரியா?

8) மகாமே மஹ்மூத் நமக்கு கிடைக்குமாறு துஆ செய்யக் கூடாதா?

9) ஜனாஸா பிரச்சினைக்காக 2 நாள் தாமதப்படுவது ஏன்? இறந்தவரின் விருப்பத்தை கணக்கில் கொள்ளாமல் பிள்ளைக்காக நபி வழியில் அடக்க முயற்சி செய்வது ஏன்? சிறிய சுன்னத்திற்காக இவ்வளவு பிரச்சினை தேவையா?

10) மாற்று மதத்தவர்களை எப்படி இனிய மார்க்க நிகழ்ச்சிக்கு அழைப்பது?

11) சொத்து பங்கீடு உயிரோடு இருக்கும் போது கொடுக்கலாமா?

12) பெண்ணின் உறவினர்கள் திருமணத்தை ஒட்டி அன்பளிப்பு கொடுத்தால் வாங்கலாமா?

13) கப்ரு வேதனை முன்பே இறந்தவர்களுக்கு அதிகம் என்பது நீதமானதா?

14) ஆண்கள் இரும்பு மோதிரம் அணியலாமா? வெளிநாட்டுக்கு வந்தவர்கள் 4 மாதத்திற்கு மேல் பிரிந்து இருக்க கூடாது என்று சட்டம் உள்ளதா?

15) நோய் தீர செய்ய முடியதாத அளவிற்கு நேர்ச்சை செய்து விட்டால் என்ன செய்வது?

16) முஸ்லீம் அல்லாதவர்களிடம் சுன்னத் செய்யலாமா?

கொட்டும் மழையிலும் நூற்றுக்கணக்கான சகோதர சகோதிரிகள் பங்குகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.