புதன், 29 மார்ச், 2023

ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி 30-03-2023 வியாழக்கிழமை


கத்தர் TNTJ- அறிவிப்பு 👇


➡️ TNTJ கத்தர் மண்டலம் நடத்தும் 

➡️ ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி 


✍ நாள் : 30-மார்ச்-2023 வியாழக்கிழமை 


✍ நேரம் :  9:00PM  to 1:00AM  


✍ இடம் : Gulf  Paradise Hotel - Bin Mahmoud  


கண்ணியத்திற்குறிய சகோதர சகோதரிகளே! 


 👉🏻 ஸஹர் நேர நிகழ்ச்சியில் சிறப்பு  சொற்பொழிவு  மற்றும் மாணவ, மாணவியருக்கான ஸூரா & துஆ இறுதி போட்டித் தேர்வு நிகழ்ச்சி 30-03-2023 வியாழக்கிழமை அன்று பின் மஹ்மூத் பகுதியில் உள்ள Gulf Paradise ஹோட்டல் அரங்கில் நடைபெற உள்ளது


✍ இதில் 


🔖 KG -1 to 10th STD  வரை கலந்துகொண்ட பிள்ளைகளுக்கு ஸூரா & துஆ இறுதி போட்டி🔖


🟢 மற்றும்👇🏻🟢


📣 சிறப்புரை:


🎤 சகோ. முஹம்மத் அலி MIsc 

(TNTJ - கத்தர் மண்டல தலைவர்)


📗 தலைப்பு : 

தவ்ஹீத் நெஞ்சமே தடுமாறாதே.


✍ இந்த நிகழ்ச்சியில் தாங்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு பயனடையுமாறு உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம். 


🟢 குறிப்பு: 👇


📌 போட்டியில் கலந்து கொண்ட பிள்ளைகளின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை 8: 45PM அரங்கிற்கு அழைத்து கொண்டு வந்து விட வேண்டும்.


📌 நிகழ்ச்சிக்கு வரக்கூடிய அனைவரும் சரியான நேரத்திற்கு முன் நிகழ்ச்சியில் வருகை தந்து சிறப்பிக்கவும் .


📌 தங்களுக்கு தெரிந்தவர்களை தவறாமல் அழைத்து வரவும்


📌 பெண்களுக்கு தனி வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


🍲 ஸஹர்  உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



🎁 ஈருலகிலும் நன்மைகளை அடைய அல்லாஹ் அருள் புரிவானாக....


⬛⬛⬛✳✳✳✳✳⬛⬛⬛


இப்படிக்கு 


கத்தர்-TNTJ

நிர்வாகம்

29-03-2023


⬛⬛⬛✳✳✳✳✳⬛⬛⬛

செவ்வாய், 28 மார்ச், 2023

இரவு தொழுகைக்கு பின் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி 28, 29-03-2023

 


அல்லாஹ்வின் திருப்பெயரால்.......

🎤TNTJ கத்தர் மண்டலம்- அறிவிப்பு🎤

இன்ஷா அல்லாஹ்! 

TNTJ கத்தர் ➖ நடத்தும்  

இரவு தொழுகைக்கு பின்  சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி
 
✍ நாள்: 28, 29-03-2023  செவ்வாய் & புதன் இரவு 

➡️ சிறப்புரை

 சகோ. அன்சார் மஜிதி 
(TNTJ கத்தர் மண்டலப் பேச்சாளர்)
 
➡️ தலைப்பு
யுக முடிவு நாள்

✍ நேரம்: இரவு  08:45 மணி முதல் 9:30 மணி வரை (கத்தர் நேரப்படி)

✍ இடம்: Zoom இணையவழி

இணைவதற்கான ZOOM லிங்க்  👇

📌 Zoom Link 
Join Zoom Meeting

Meeting ID : 831 6537 1542
Passcode: 2022

மேலே உள்ள லிங்கில்  இணைந்து பயனடையவும்.

📌 தாமதம் தவிர்க்கவும். 
ஜஸாக்கல்லாஹூ ஹைரா...🤝

➖➖➖➖➖➖➖➖➖➖➖
وَلْتَكُنْ مِّنْكُمْ اُمَّةٌ يَّدْعُوْنَ اِلَى الْخَيْرِ وَيَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ‌ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ‏
*(நம்பிக்கையாளர்களே!) உங்களில் ஒரு கூட்டத்தார் (மனிதர்களை) சிறந்ததின் பக்கம் அழைத்து நன்மையைச் செய்யும்படி ஏவி, பாவமான காரியங்களிலிருந்து அவர்களை விலக்கிக் கொண்டும் இருக்கவும். இத்தகையவர்கள்தாம் வெற்றி பெற்றவர்கள்.
(அல்குர்ஆன் : 3:104)

🔷🔷🔷🔷🟡🟡🟡🔷🔷🔷🔷

இப்படிக்கு

TNTJ - கத்தர்
தேதி : 28-03-2023

🔷🔷🔷🔷🟡🟡🟡🔷🔷🔷🔷

வியாழன், 16 பிப்ரவரி, 2023

சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி 16-02-2023 வியாழக்கிழமை

 


🟣 சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி 


✍ நாள்: 16-02-2023 வியாழக்கிழமை 

நேரம்: இரவு 8:35 மணி முதல் 9:30மணி வரை (கத்தர் நேரப்படி) 

➡️ சிறப்புரை: 
 சகோ.தாவுத்
 (TNTJ கத்தர் மண்டல  பேச்சாளர்) 

➡️ தலைப்பு: 
(உறவோடு உறவாடுவோம்)

✍ நேரம்: இரவு 8:35 மணி முதல் 8:45 மணி வரை (கத்தர் நேரப்படி) 

➡️ சிறப்புரை: 
 சகோ. ஹாரிஸ் MISc 
 (TNTJ பேச்சாளர்) 

➡️ தலைப்பு :
நஸ்ரு அத்தியாயமும் நான்கு விசயங்களும்

✍ நேரம்: இரவு 8:45 மணி முதல் 9:30 மணி வரை (கத்தர் நேரப்படி) 


🔗 இணைவதற்கான ஜூம் லிங்க்:- 👇

📌 Zoom Link 👇 
Join Zoom Meeting

Meeting ID: 831 6537 1542 
Passcode: 2022

வெள்ளி, 3 பிப்ரவரி, 2023

ரமலான் சிறுவர் சிறுமியர்களுக்கான அறிவுப் போட்டி-2023 படிவம் (Online Form)


 

QITC- அறிவிப்பு 👇

ஏக இறைவனின் திருப்பெயரால்... 

QITC-யின் 

✍ ரமலான் சிறுவர் சிறுமியர்களுக்கான அறிவுப் போட்டி-2023 

படிவம் பூர்த்தி செய்ய வேண்டிய கடைசி நாள் :10/02/2023 

🗓 படிவம் வந்து சேரவேண்டிய கடைசி நாள்: 10/02/2023 

⏰ படிவம் ஏற்கப்படும் நேரம்: இரவு 10:59PM  - வரை மட்டுமே 

🕌  அனுப்ப வேண்டிய முகவரி: Online ல் பதிவு செய்தல் மட்டுமே... 

கண்ணியத்திற்குரிய சகோதரர்களே

🔰 QATAR TNTJ யின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தில் சிறுவர் சிறுமியர்ர்கள் & பெரியவர்களுக்கான மார்க்க அறிவுப்போட்டி நடைபெற்றுவருவதை தாங்கள் அறிவீர்கள்.

🔰 அதைப்போன்று இவ்வாண்டும் எதிர்வரும் ரமலான் மாதத்தில் போட்டிகள் நடத்த இருக்கிறோம் இன் ஷா அல்லாஹ்.

🔰 அதற்கான link யை பதிந்திருக்கிறோம். அதை 10-02-2023 இரவுக்குள் பூர்த்தி செய்துவிடவும். Link 👇

https://forms.gle/GuGdDEtK8VHHYLbm6

பூர்த்தி செய்த தகவலை 55263976 என்ற எண்ணிற்க்கு What's app ல் Ramadan Form Filled என அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.

போட்டிகள்: 👇

🟥 1) சிறுவர்கள் சூரா மற்றும் துஆ மனனப்போட்டி

🟦 2) சிறுவர்கள் பேச்சுப் போட்டி

🟧 3) பெரியவர்கள் கிராஅத் போட்டி

குறிப்பு:👇

1) பேச்சுப்போட்டி, சூரா மற்றும் துஆ, கிராத் ஆகியவைகளுக்கான குறிப்புகள் நமது இணையதளம் & சமூக வளைதளங்களில்  வெளியிடப்படும்.

2) தங்கள் பிள்ளைகளுக்கு சிறந்த முறையில் பயிற்சி அளித்து போட்டிக்காக தயார் படுத்திக் கொள்ளவும்.

3) சூரா மற்றும் துஆக்களுக்கான தகுதிச் சுற்றுப்போட்டிகள்02-03-2023

பேச்சுப் போட்டிக்கான தகுதிச் சுற்றுப்போட்டிகள் 03-03-2023

4) தகுதிச்சுற்றில் வெற்றி பெறுபவர்களே இறுதிச்சுற்றில் கலந்துகொள்ள முடியும்.

5) வெற்றி பெறும் மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் காத்திருக்கிறது.

6) தாமதமாக வரும் படிவங்கள் பரிசிலனை செய்யப்பட மாட்டாது. 

📍  போட்டிக்கான பயிற்சிகளுக்கு உங்களுக்கான பயிற்சியாளர்களை தொடர்பு கொள்ளுங்கள்.

📣📣📣📣🔲🔲🔲📣📣📣📣

அன்புடன்

மண்டல நிர்வாகம்

25-01-2023

📞 44315863, 66579598,  70453598

📣📣📣📣🔲🔲🔲📣

புதன், 11 ஜனவரி, 2023

தொழுகையில் நடைபெறும் பித்அத்கள்


தொழுகையில் நடைபெறும் பித்அத்கள் 

ஒரு முஸ்லிமிற்கு தொழுகை மிக அவசியமானதாகும். 

நம்பிக்கை கொண்டோருக்கு தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாக உள்ளது. 

அல்குர்ஆன்: 04:103 

அந்தத் தொழுகையை எவ்வாறு தொழ வேண்டுமென நபியவர்கள் நமக்கு தெளிவாக வழிகாட்டியுள்ளார்கள்.

என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள் என நபி (ஸல்) கூறினார்கள். 

அறிவிப்பவர்: மாலிக் இப்னு ஹூவைரிஸ் நூல்: புகாரி: 631 

ஆனால் இன்றைய இஸ்லாமியர்கள் நபியவர்கள் காட்டித் தந்த தொழுகை முறைக்கு மாற்றமாக தங்களின் தொழுகை முறைகளை அமைத்துக் கொள்கின்றனர்.

இவை மார்க்கத்தில் இல்லாத பித்அத்கள் ஆகும். அவற்றில் சில பித்அத்களை உங்களுக்கு அறியத் தருகிறோம்.

தொழுகையில் நடைபெறும் பித்அத்கள்:

📌 தொழுகைக்கு முன் நிய்யத்தை அரபியில் வாயால் மொழிதல்.

📌 வெள்ளிக்கிழமை சுப்ஹ் தொழுகையில் குனூத் ஓதுதல்.

📌 ஜூம்ஆவிற்கு இரண்டு பாங்கு கூறுதல்.

📌 ஜூம்ஆவின் போது தமிழ், அரபி என இரண்டு பயான் செய்தல்.

📌 மிஃராஜ், பராஅத் முன்னிட்டு தொழப்படும் விசேஷ தொழுகைகள்.

📌 தஸ்பீஹ் தொழுகை தொழுதல்.

📌 தராவீஹ் என்ற பெயரில் 20 ரக்அத் தொழுதல்.

இது போன்ற பல பித்அத்தான நடைமுறைகளையும், நபியவர்கள் காட்டித்தராத பித்அத்தான தொழுகைகளையும் சிலர் நடைமுறைப் படுத்தி வருகின்றனர். இது பெரும் வழிகேடாகும்,

பித்அத்கள் குறித்த நபிகளாரின் எச்சரிக்கைகள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்படும்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல்: புகாரி: 2697

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும், நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். செய்திகளில் மிகக் கெட்டது (மார்க்த்தின் பெயரால்) புதிதாக உருவானவையாகும், புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்.

அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) நூல் : நஸாயி 1560

தவறான புரிதலின் அடிப்படையிலும் அதுவே மார்க்கம் என எண்ணியும் தான் தொழுகையில் பித்அத்தான காரியங்களை மக்கள் செய்து வருகின்றனர். இது தவறாகும். எனவே நபியவர்கள் நமக்குக் காட்டித் தந்த தொழுகைகளையும், தொழும் முறைகளையும் மட்டுமே நாம் கடைபிடித்து இஸ்லாத்தில் இல்லாத பித்அத்களை விட்டொழிக்க வேண்டும். அல்லாஹ் அதற்கு உதவி செய்வானாக.

வெள்ளி, 1 ஜூலை, 2022

TNTJ கத்தர் மண்டலத்தின் சார்பாக ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு 36-வது மாபெரும் இரத்த தான முகாம் - 01/07/2022

 


QATAR TNTJ – நன்றி அறிவிப்பு

TNTJ கத்தர் மண்டலத்தின் சார்பாக ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு 36-வது மாபெரும் இரத்த தான முகாம் - 01/07/2022


கண்ணியத்திற்குறிய சகோதர சகோதரிகளுக்கு 

அல்லாஹ்வுடைய அருளால் வெள்ளிக்கிழமை 01/07/2022 இன்று
TNTJ கத்தர் மண்டலத்தின் சார்பாக 36-வது மாபெரும் இரத்த தான முகாம் சிறப்பாக நடைபெற்று முடிந்தது

🌰 இம்முகாமில் 65 சகோதரர்கள் குருதிக் கொடை அளித்தார்கள்

🌰 100 க்கும் அதிகமான சகோதர சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்

 எல்லா புகழும் அல்லாஹ்விற்கே

🎁 மக்களுக்கு நன்றி செலுத்தாதவன் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தியவனாக ஆக மாட்டான் என்ற அடிப்படையில் 🎁 

🌰  இம்முகாம் சிறப்பாக நடைபெற 👇

🤝  குருதிக் கொடை  செய்து ஒத்துழைப்பு நல்கிய சகோதர சகோதரிகளுக்கும் 

🤝 கிளை நிர்வாகிகளுக்கும்

🤝 கிளை உறுப்பினர்களுக்கும்

🤝 கொள்கை சொந்தங்கள்

🤝 உணவுக் குழு, வாகனக் குழு,  செயல்வீரர்கள் 

🤝 மற்றும் கலந்துகொண்ட  அனைத்து நல் உள்ளங்களுக்கும்

எங்களின் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

JAZAKALLAHU KHAIRA👆 

இம்மகத்தான உயிர்காக்கும்  பணியில் நம் அனைவரையும் பங்கு கொள்ளச்செய்து, நற்கூலிகளை வாரிவழங்கி நம்பாவங்களை மன்னிக்க காத்திருக்குக்கும்_ தனக்கு துணையை ஏற்படுத்திக் கொள்ளாத_ அல்லாஹ்விற்கு நன்றி கூறி  அனைத்து புகழும் அவனுக்கே உரித்தாக்குகிறோம்

  குறிப்பு👇

இரத்த தான  முகாமில் மனிதர்கள் என்ற அடிப்படையில் ஏதும் குறைகள் இருப்பின்  அல்லாஹ்விற்காக மனம் பொறுக்குமாறு  மண்டல நிர்வாகத்தின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறது

♦♦♦♦♦♦♦♦♦♦

இப்படிக்கு

கத்தர் TNTJ- நிர்வாகம்
66579598, 70482146

தேதி: 01-07-2022

⬛⬛⬛🛄🛄🛄🛄🛄⬛⬛⬛



திங்கள், 4 ஏப்ரல், 2022

நினைவில் கொள்ளவேண்டிய சிறந்த துஆக்கள் (ஆடியோவுடன்)



A1. தூங்கி எழுந்ததும் ஓதும் துஆ


اَلْحَمْدُ للهِ الَّذِيْ أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُوْرُ

அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா ப(B]ஃத மா அமா(த்)தனா வ இலைஹின் னுஷுர்

இதை தூங்கி எழுந்தவுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுவார்கள்.


பொருள்:

எங்களை மரணிக்கச் செய்த பின் உயிர்ப்பித்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். மேலும் அவனிடமே (நமது) திரும்பிச் செல்லுதல் உள்ளது.

ஆதாரம்: புகாரி 6314



A2. தொழுகை முடிந்ததும் ஓதும் துஆ


أَسْتَغْفِرُ اللَّهَ ، أَسْتَغْفِرُ اللَّهَ ، أَسْتَغْفِرُ اللَّهَ. اللَّهُمَّ أَنْتَ السَّلَامُ وَمِنْكَ السَّلَامُ، تَبَارَكْتَ ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ

அஸ்தஃபிருல்லாஹ் , அஸ்தஃபிருல்லாஹ் ,அஸ்தஃபிருல்லாஹ்

அல்லாஹும்ம அன்(த்)தஸ் ஸலாம், வமின்(க்)கஸ் ஸலாம், தபாரக்(த்)த தல் ஜலாலி வல்இக்ராம்


பொருள்:

இறைவா! நீ சாந்தியளிப்பவன். உன்னிடமிருந்தே சாந்தி ஏற்படுகிறது, மகத்துவமும், கண்ணியமும் உடையவனே! நீ பாக்கியமிக்கவன்!) என்று கூறுவார்கள்.

ஆதாரம்: முஸ்லிம் 1037



A3. சபையை முடிக்கும் போது ஓதும் துஆ


سُبْحَانَكَ اللّهُمَّ وَبِحَمْدِكَ أَشْهَدُ أَنْ لاَ إِلهَ إِلاَّ أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوْبُ إِلَيْكَ

ஸுப்ஹான(க்)கல்லாஹும்ம வபி(B] ஹம்தி(க்)க அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லா அன்(த்)த அஸ்தக்பி[F]ரு(க்)க வஅதூபு(B] இலை(க்)க.


பொருள் :

இறைவா! நீ தூயவன். உன்னைப் புகழ்கிறேன். வணக்கத்திற்குரியவன் உன்னைத் தவிர யாருமில்லை. உன்னிடமே பாவ மன்னிப்புத் தேடுகிறேன். உன்னிடமே மீள்கிறேன்.

ஆதாரம்: திர்மிதீ 3355



B1.பாங்கு முடிந்தவுடன ஓத வேண்டிய துஆ

பாங்கு ஓதி முடிந்தவுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் ஓதி விட்டு பின்னர் கீழ்க்காணும் துஆவை ஓத வேண்டும்.


اَللّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ وَالصَّلاَةِ الْقَائِمَةِ آتِ مُحَمَّدًا اَلْوَسِيْلَةَ وَالْفَضِيْلَةَ وَابْعَثْهُ مَقَامًا مَحْمُودًا الَّذِيْ وَعَدْتَهُ

அல்லாஹும்ம ரப்ப(B] ஹாதிஹித் தஃவ(த்)தித் தாம்ம(த்)தி வஸ்ஸலா(த்)தில் காயிம(த்)தி ஆ(த்)தி முஹம்மதன் அல்வஸீல(த்)த வல் ப[F]ளீல(த்)த வப்(B]அஸ்ஹு மகாமன் மஹ்மூதன் அல்லதீ வஅத்தஹு


பொருள் :

இறைவா! இந்த முழுமையான அழைப்பிற்கும், நிலையான தொழுகைக்கும் சொந்தக்காரனே! முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு (சொர்க்கத்தின் மிக உயர்ந்த பதவியான) வஸீலா எனும் பதவியினையும், சிறப்பையும் வழங்குவாயாக! நீ அவர்களுக்காக வாக்களித்த புகழப்பட்ட இடத்தில் அவர்களை எழுப்புவாயாக!

ஆதாரம்: புகாரி 614



B2. இருப்பில் ஓத வேண்டியவை ஸலவாத்து


اَللّهُمَّ صَلّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيْمَ وَعَلَى آلِ إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَجِيْدٌ اَللّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيْمَ وَعَلَى آلِ إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَجِيْدٌ

அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லை(த்)த அலா இப்[B]ராஹீம, வஅலா ஆலி இப்[B]ராஹீம இன்ன(க்)க ஹமீதுன் மஜீத். அல்லாஹும்ம பா[B]ரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பா[B]ரக்த அலா இப்[B]ராஹீம வஅலா ஆலி இப்[B]ராஹீம இன்ன(க்)க ஹமீதுன் மஜீத்.


பொருள்:

இறைவா! இப்ராஹீம் நபியின் மீதும், அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ அருள் புரிந்தது போல் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தார் மீதும் அருள் புரிவாயாக. நீ புகழுக்குரியவன். மகத்துவமிக்கவன். இறைவா இப்ராஹீம் நபிக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் நீ பாக்கியம் செய்தது போல் முஹம்மது (ஸல்) அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் பாக்கியம் செய்வாயாக. நீ புகழுக்குரியவன். மகத்துவமிக்கவன்.

ஆதாரம்: புகாரி 3370



B3. நோயாளியை விசாரிக்கச் சென்றால் ஓதும் துஆ


اَللّهُمَّ رَبَّ النَّاسِ مُذْهِبَ الْبَأْسِ اِشْفِ أَنْتَ الشَّافِيْ لاَ شَافِيَ إِلاَّ أَنْتَ شِفَاءً لاَ يُغَادِرُ سَقَمًا

அல்லாஹும்ம ரப்ப(B]ன்னாஸி முத்ஹிபல் ப(B]ஃஸி இஷ்பி[F] அன்தஷ் ஷாபீ[F] லா ஷாபி[F]ய இல்லா அன்(த்)த ஷிபா[F]அன் லா யுகாதிரு ஸகமா.


பொருள் :

இறைவா! மனிதர்களின் எஜமானே! துன்பத்தை நீக்குபவனே! நீ குணப்படுத்து. நீயே குணப்படுத்துபவன். உன்னைத் தவிர குணப்படுத்துபவன் யாருமில்லை. நோயை அறவே மீதம் வைக்காமல் முழுமையாகக் குணப்படுத்து! எனக் கூற வேண்டும்.

ஆதாரம்: புகாரி 5742



C1. வித்ரு குனூத் துஆ


اللَّهُمَّ اهْدِنِي فِيمَنْ هَدَيْتَ وَعَافِنِي فِيمَنْ عَافَيْتَ وَتَوَلَّنِي فِيمَنْ تَوَلَّيْتَ وَبَارِكْ لِي فِيمَا أَعْطَيْتَ وَقِنِي شَرَّ مَا قَضَيْتَ فَإِنَّكَ تَقْضِي وَلَا يُقْضَى عَلَيْكَ وَإِنَّهُ لَا يَذِلُّ مَنْ وَالَيْتَ تَبَارَكْتَ رَبَّنَا وَتَعَالَيْتَ

அல்லாஹும்மஹ்தினி ஃபீமன் ஹதைத்த, வஆஃபீனி ஃபீமன் ஆஃபைத்த, வதவல்லனீ ஃபீமன் தவல்லைத்த, வபரிக்லீ ஃபீமா அஃதைத்த, வகினீ ஷர்ரமா களைத்த, ஃபஇன்னக்க தக்னீ வலா யுக்ளா அலைக்க, இன்னஹு லாயதில்லுமன் வாலைத்த தபாரக்த ரப்பனா வ தஆலைத்த.


பொருள்:

இறைவா! நீ நேர்வழி காட்டியவர்களுடன் சேர்த்து எனக்கும் நேர்வழி காட்டுவாயாக! நீ ஆரோக்கியம் அளித்தவர்களுடன் சேர்த்து எனக்கும் ஆரோக்கியம் அளிப்பாயாக! நீ பொறுப்பேற்றுக் கொண்டவர்களுடன் சேர்த்து எனக்கும் பொறுப்பேற்றுக் கொள்வாயாக! நீ எனக்குத் தந்திருப்பவற்றில் பரகத் செய்வாயாக! நீ விதியாக்கியவைகளில் உள்ள கெடுதியை விட்டும் என்னைக் காப்பாயாக! நிச்சயமாக நீயே விதிப்பவன், உன் மீது எதையும் விதிக்க முடியாது. நிச்சயமாக நீ யாரை நேசித்து விட்டாயோ அவர் இழிவடைய மாட்டார். எங்கள் இறைவா! உன் அருள் விசாலமானது, உன் மகத்துவம் மேலானது

ஆதாரம்: திர்மிதீ 426



C2. தொழுகையை துவக்கியதும் ஓத வேண்டிய துஆ


اَللّهُمَّ بَاعِدْ بَيْنِيْ وَبَيْنَ خَطَايَايَ كَمَا بَاعَدْتَ بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ اَللّهُمَّ نَقِّنِيْ مِنَ الْخَطَايَا كَمَا يُنَقَّى الثَّوْبُ الأَبْيَضُ مِنَ الدَّنَسِ اَللّهُمَّ اغْسِلْ خَطَايَايَ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ

அல்லாஹும்ம பா(B]யித் பைனீ வபைன கதாயாய கமா பா(B]அத்த பை(B]னல் மஷ்ரி(க்)கி வல் மக்ரிபி[B], அல்லாஹும்ம நக்கினீ மினல் கதாயா கமா யுனக்கஸ் ஸவ்பு[B]ல் அப்[B]யளு மினத் தனஸி அல்லாஹும்மஃக்ஸில் ஃகதாயாய பி[B]ல்மாயி வஸ்ஸல்ஜி வல் ப[B]ரதி


பொருள் :

இறைவா! கிழக்கிற்கும், மேற்கிற்கும் இடையே உள்ள இடைவெளியைப் போல் எனக்கும் என் பாவங்களுக்கும் இடையே இடைவெளியை ஏற்படுத்துவாயாக! வெண்மையான ஆடை அழுக்கிலிருந்து சுத்தம் செய்யப்படுவது போல் என்னைப் பாவங்களிலிருந்து சுத்தம் செய்வாயாக! இறைவா! தண்ணீராலும், பனிக்கட்டியாலும், ஆலங்கட்டியாலும் என் பாவங்களைக் கழுவுவாயாக.

ஆதாரம்: புகாரி 744



C3. இருப்பில் ஓத வேண்டிய துஆ


اَلتَّحِيَّاتُ للهِ وَالصَّلَوَاتُ وَالطَّيّبَاتُ السَّلاَمُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ السَّلاَمُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللهِ الصَّالِحِيْنَ أَشْهَدُ أَنْ لاَ إِلهَ إِلاَّ اللهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُوْلُهُ

அத்தஹியா(த்)து லில்லாஹி வஸ்ஸலவாத்து வத்தய்யிபா[B](த்)து அஸ்ஸலாமு அலை(க்)க அய்யுஹன் னபி[B]ய்யு வரஹ்ம(த்)துல்லாஹி வப[B]ரகா(த்)துஹு அஸ்ஸலாமு அலைனா வஅலா இபா[B]தில்லாஹிஸ் ஸாலிஹீன் அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்[B]துஹு வரஸுலுஹு


பொருள் :

எல்லாவிதமான கன்னியங்களும், தொழுகைகளும், நல்லறங்களும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே உங்கள் மீது சாந்தியும், அல்லாஹ்வின் அருளும், பாக்கியங்களும் உண்டாகட்டும். எங்கள் மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்கள் மீதும் சாந்தி உண்டாகட்டும். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.



D1. கப்ருகளை ஸியாரத் செய்யும் போது


اَلسَّلاَمُ عَلَيْكُمْ دَارَ قَوْمٍ مُؤْمِنِيْنَ وَإِنَّا إِنْ شَاءَ اللهُ بِكُمْ لاَحِقُوْنَ

அஸ்ஸலாமு அலை(க்)கும் தாரகவ்மின் மூமினீன் வஇன்னா இன்ஷா அல்லாஹு பி(B]கும் லாஹி(க்)கூன்.


பொருள் :

இறை நம்பிக்கையுள்ள சமுதாயமே! உங்கள் மீது சாந்தி நிலவட்டும். அல்லாஹ் நாடினால் நாங்களும் உங்களுடன் சேரக் கூடியவர்களே.

ஆதாரம்: முஸ்லிம் 367



D2. பாவமன்னிப்பு கோருவதில் தலையாய துஆ


اَللّهُمَّ أَنْتَ رَبّي لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ خَلَقْتَنِيْ وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوْءُ لَكَ بِذَنْبِيْ فَاغْفِرْ لِيْ فَإِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلاَّ أَنْتَ

அல்லாஹும்ம அன்(த்)த ரப்பீ[B] லாயிலாஹ இல்லா அன்(த்)த கலக்(த்)தனீ வஅன அப்[B]து(க்)க வஅன அலா அஹ்தி(க்)க வவஃதி(க்)க மஸ்ததஃ(த்)து அவூது பி[B](க்)க மின்ஷர்ரி மாஸனஃ(த்)து அபூ[B]வு ல(க்)க பி[B]னிஃமதி(க்)க அலய்ய, வஅபூ[B]வு ல(க்)க பி[B]தன்பீ[B] ப[F]க்பி[F]ர்லீப[F]இன்னஹு லா யஃக்பி[F]ருத் துனூப[B] இல்லா அன்(த்)த


பொருள் :

இறைவா! நீயே என் எஜமான். உன்னைத் தவிர வணக்கத்திற்குரி யவன் யாருமில்லை. என்னை நீயே படைத்தாய். நான் உனது அடிமை. உனது உடன்படிக்கையின்படியும் வாக்குறுதியின் படியும் என்னால் இயன்ற வரை நடப்பேன். நான் செய்த தீமையை விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். நீ எனக்குச் செய்த அருளோடும் நான் செய்த பாவத்தோடும் உன்னிடம் மீள்கிறேன். எனவே என்னை மன்னிப்பாயாக! உன்னைத் தவிர யாரும் பாவங்களை மன்னிக்க முடியாது.

ஆதாரம்: புகாரி 6309



D3. அனைத்து வகையான துன்பங்களின் போதும் ஓத வேண்டிய துஆ


لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ الْعَظِيْمُ الْحَلِيْمُ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ رَبُّ السَّمَوَاتِ وَالأَرْضِ وَرَبُّ الْعَرْشِ الْعَظِيْمِ

லாயிலாஹ இல்லல்லாஹூல் அளீமுல் ஹலீம் லாயிலாஹ இல்லல்லாஹூ ரப்பு[B]ஸ் ஸமாவா(த்)தி வல் அர்ளி வரப்பு[B]ல் அர்ஷில் அளீம்.


பொருள் :

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அவன் சகிப்புத் தன்மையும், மகத்துவமும் மிக்கவன். வானங்கள், பூமி, மகத்தான அர்ஷு ஆகியவற்றின் அதிபதியான அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை.

ஆதாரம்: புகாரி 6345



E1. ஜனாஸா தொழுகையில் இறந்தவருக்காக ஓதும் துஆ (1)


اَللّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ وَأَكْرِمْ نُزُلَهُ وَوَسِّعْ مُدْخَلَهُ وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهِ مِنْ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِهِ وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ وَأَدْخِلْهُ الْجَنَّةَ وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ

அல்லாஹும்மபி[F]ர் லஹு வர்ஹம்ஹு வஆபி[F]ஹி வபு[F] அன்ஹு வஅக்ரிம் நுஸுலஹு வவஸ்ஸிஃ முத்கலஹு வக்ஸில்ஹு பி(B]ல்மாயி வஸ்ஸல்ஜி வல்ப(B]ரதி வநக்கிஹி மினல் கதாயா கமா நக்கைத்தஸ் ஸவ்ப(B]ல் அப்(B]யள மினத் தனஸி வ அப்(B]தில்ஹு தாரன் கைரன் மின் தாரிஹி வஅஹ்லன் கைரன் மின் அஹ்லிஹி வஸவ்ஜன் கைரன் மின் ஸவ்ஜிஹி வ அத்ஹில்ஹுல் ஜன்ன(த்)த வஅயித்ஹு மின் அதாபி(B]ல் கப்(B]ரி


பொருள் :

இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள் புரிவாயாக! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவர் தங்குமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக! இவர் நுழையும் இடத்தை விசாலமாக்குவாயாக! இவரைத் தண்ணீராலும், பனிக் கட்டியாலும், ஆலங்கட்டியாலும் கழுவுவாயாக! வெண்மையான ஆடையை அழுக்கிலிருந்து சுத்தம் செய்வதைப் போல் இவரை குற்றத்திலிருந்து சுத்தம் செய்வாயாக! இங்கிருக்கும் வீட்டை விடச் சிறந்த வீட்டையும், இங்கிருக்கும் குடும்பத்தை விடச் சிறந்த குடும்பத்தையும், இங்கிருந்த வாழ்க்கைத் துணையை விட சிறந்த துணையையும் இவருக்கு வழங்குவாயாக! இவரை கப்ரின் வேதனையிலிருந்து காப்பாயாக!



E2. ஜனாஸா தொழுகையில் இறந்தவருக்காக ஓதும் துஆ (2)


اللَّهُمَّ إِنَّ فُلَانَ بْنَ فُلَانٍ فِي ذِمَّتِكَ، وَحَبْلِ جِوَارِكَ فَأَعِذْهُ مِنْ فِتْنَةِ الْقَبْرِ، وَعَذَابِ النَّارِ، أَنْتَ أَهْلُ الْوَفَاءِ وَالْحَقِّ، اللَّهُمَّ فَاغْفِرْ لَهُ وَارْحَمْهُ إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ

அல்லாஹும்ம இன்ன ஃபுலானப்ன ஃபுலானின் ஃபீ திம்மதி(க்)க ‎வஹப்லி ஜிவாரி(க்)க ஃப(க்)கிஹி மின் ஃபித்ன(த்)தில் கப்ரி ‎வமின் அதா பின்னாரி ஃபஅன்(த்)த அஹ்லுல் வஃபாயி ‎வல்ஹக்கி அல்லாஹும்ம ஃபக்ஃபிர்லஹு வர்ஹம்ஹு இன்ன(க்)க அன்(த்)தல் ‎கஃபூருர் ரஹீம்


பொருள்:

இறைவா! இன்னாரின் மகனான இவர் உனது ‎பொறுப்பில் இருக்கிறார். கப்ரின் வேதனையை விட்டு இவரைப் ‎பாதுகாப்பாயாக! நரகின் வேதனையை விட்டும் காப்பாயாக! நீயே ‎வாக்குறுதிகளை நிறைவேற்றுபவன். உண்மையாளன். இவரை ‎மன்னித்து அருள் புரிவாயாக! நீயே மன்னிப்பவன். அருள் ‎புரிபவன்.‎

அறிவிப்பவர்: வாஸிலா பின் அஸ்கஃ (ரலி)‎
நூல்கள்: அபூ தாவூத் 2787