சனி, 26 பிப்ரவரி, 2011

கத்தர் மர்கசில் இஸ்லாத்தை தழுவிய இரண்டு சகோதரர்கள்


بسم الله الرحمن الرحيم

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு......

சென்ற வியாழக்கிழமை 24-02-2011 அன்று கத்தர் மர்கசில் நடைபெற்ற வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சியின் போது பட்டுகோட்டையை சேர்ந்த கலைவாணன் , தஞ்சை சேர்ந்த நாகராஜ் ஆகிய இரண்டு சகோதரர்கள் இஸ்லாத்தை தழுவினார்கள். அச்சகோதரர்களுக்கு துணை செயலாளர் சாஜஹான் அவர்கள் கலிமா சொல்லிகொடுத்து , தூய மார்க்கமான இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டு கலைவாணன் என்ற சகோதரர் அப்துல்லாஹ் என்றும் , நாகராஜ் என்ற சகோதரர் அப்துல் காதிர் என்றும் பெயர் சூடிகொண்டார்கள் . அல்ஹம்துலில்லாஹ் எல்லா புகழும் இறைவனுக்கே ! அவ்விருவருக்கும் மர்கஸ் தலைவர் சகோதரர் ஷபீர் அவர்கள் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு வழங்கினார்கள்.