செவ்வாய், 31 ஜனவரி, 2012

25/01/2012 கத்தர் மண்டல செனையா கர்வா கேம்ப் பயான் நிகழ்ச்சி

அல்லாஹ்வின் பேரருளால்...

25/01/2012 புதன்கிழமை கத்தர் மண்டல செனையா கர்வா கேம்ப் பயான் நிகழ்ச்சியில் சகோதரர் மௌலவி. ரில்வான் அவர்கள் "மாற்றங்கள் தேவை" என்ற தலைப்பின் கீழ் உரையாற்றினார்கள்.

இறுதியாக QITC துணைச்செயலாளர் சகோதரர். காதர் மீரான் அவர்கள் அதிக மக்களுக்கு இங்கு நடக்கும் நிகழ்ச்சியை எடுத்துகூறி பங்கு பெற செய்ய வேண்டும் என்று கூறினார்கள். 

இனிதே துவா ஒதியவர்களாக கூட்டம் நிறைவு பெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்.

திங்கள், 30 ஜனவரி, 2012

கத்தர் மர்கஸ் பெண்கள் பயான் - 27/01/2012

அல்லாஹுவின் பேரருளால்,

கத்தர் மண்டல மர்கஸில் (QITC) பெண்களுக்கான பெண்களே நடத்தும் "பயான் நிகழ்ச்சி", 27/01/2012 அன்று மாலை 7:00 மணிக்கு சகோதரி. மரியம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

துவக்கமாக சகோதரி. ஹாஜரா பேகம் அவர்கள் "அல்லாஹ்வின் அச்சத்தால் அழும் கண்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

அடுத்ததாக சகோதரி. வஜியத் நிஷா அவர்கள் "தொழுகையின் அவசியம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இறுதியாக சகோதரி. அஷ்ரஃப் நிஷா அவர்கள் "அல்லாஹ்வை புரிந்து நடப்போம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் சகோதரிகளும், சிறுமிகளும் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.

கத்தர் மண்டல மர்கசில் (QITC) வாராந்திர பயான் நிகழ்ச்சி - 26/01/2012

அல்லாஹ்வின் பேரருளால்,


கத்தர் மண்டல மர்கசில் (QITC) வாராந்திர பயான் நிகழ்ச்சி 26/01/2012 வியாழன் இரவு 8:30 மணிக்கு மண்டல துணைத்தலைவர் சகோதரர். ஜியாவுத்தீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

துவக்கமாக கத்தர் கெஸ்ட் சென்டர் அழைப்பாளர் சகோதரர். ஷாஜஹான் அவர்கள், "குர்ஆனில் தடுக்கப்பட்டவைகளில் சில" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

அடுத்ததாக கத்தர் இந்திய தவ்ஹீத் மைய அழைப்பாளர் மௌலவி. முஹம்மத் அலீ M.I.Sc. அவர்கள், "புரிந்துணர்வு" என்ற தொடர் தலைப்பில் உரையாற்றினார்கள்.


இந்நிகழ்ச்சியில் இந்திய, இலங்கையை சேர்ந்த தமிழ் பேசும் சகோதர சகோதரிகள் 100-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

இறுதியாக மண்டல தலைவர் டாக்டர். அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் அறிவிப்புகளும், செயலாளர் மௌலவி, முஹம்மத் அலீ அவர்கள் அன்றைய பயானிலிருந்து கேள்விகளும், சென்ற வாரம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களும் கூறினார்கள்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மேலும், இரவு உணவிற்குப் பின், இலங்கை சகோதரர்களுக்கான தாவா ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்.

புதன், 25 ஜனவரி, 2012

27-01-2012 பெண்கள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி - அழைப்பு


அல்லாஹ்வின் திருப்பெயரால்...

பெண்கள் சிறப்பு
சொற்பொழிவு நிகழ்ச்சி

நாள்: 27-01-2012 வெள்ளி, மாலை 7:௦௦ மணி
இடம்: QITC மர்கஸ்

இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் அறிய வாய்ப்பு!

மாதத்தின் இறுதி வெள்ளிக்கிழமையில் பெண்களே பெண்களுக்காக நடத்தும் பயான் நிகழ்ச்சி!!

இன்ஷா அல்லாஹ், 27-01-2012 வெள்ளியன்று பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

குடும்பத்துடன் வசிக்கும் அனைத்து சகோதரர்களும் தங்களின் குடும்பத்தினரையும் மற்றும் நண்பர்களின் குடும்பத்தினர்களையும் இந்த பயான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடையும்படி செய்யுமாறு உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

கூடுதல் தகவலுக்கு:
சகோ. முஹம்மத் இல்யாஸ், +974 -55187260
துணைப்பொருளாளர் & பெண்கள் பயான் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்

திங்கள், 23 ஜனவரி, 2012

QITC சிறப்பு ஆலோசனைக் கூட்டம் - 20/01/2012

அல்லாஹுவின் திருப்பெயரால்... 

அல்லாஹுவின் அருளால், QITC சிறப்பு ஆலோசனைக் கூட்டம் 20/01/2012 வெள்ளி அன்று மாலை 6:00 மணி முதல் 9:30 மணி வரை QITC மர்கசில் நடைபெற்றது. 

QITC அழைப்பாளர் மௌலவீ.முஹம்மத் தமீம் M.I.Sc. அவர்கள் "அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்தல்" என்ற தலைப்பில் உறுப்பினர்களுக்கு எழுச்சி உரை ஆற்றினார்கள்.

QITC தலைவர், டாக்டர். அஹ்மத் இப்ராஹீம் அவர்கள், கூட்டத்தின் நோக்கத்தை விளக்கினார்கள்.

QITC பொது செயலாளர் மௌலவீ.முஹம்மது அலீ அவர்கள், நமது மார்கஸ் கட்டிட பராமரிப்பிலுள்ள சிரமத்தையும், அதற்காக தற்போதைய QITC நிர்வாகம், அனுபவமிக்க முன்னாள் நிர்வாகிகளுடன் இணைந்து மேற்கொண்ட பணிகளையும் விளக்கமாக எடுத்துரைத்தார்கள்.

இதற்கான மாற்று ஏற்பாடு குறித்து உறுப்பினர்களின் ஆலோசனைகள் பெறப்பட்டு, அவர்களின் கேள்விகளுக்கு தலைவரும், பொது செயலாளரும் பதிலளித்தனர். பின்பு,  குறுகிய கால செயல்திட்டத்திற்கு அனைவரும் ஒப்புதல் அளித்து அதற்கு உதவ உறுதியளித்தார்கள்.

மேலும் இன்ஷாஅல்லாஹ் பிப்ரவரி 14ல் நடைபெறவுள்ள முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் குறித்து விளக்கம் தெரிவிக்கப்பட்டு, அதற்கான நமது பங்களிப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இறுதியாக, QITC துணைத்தலைவர், சகோ.ஜியாவுதீன் அவர்கள், 'நன்றியுரை' நவில, துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.

இக்கூட்டத்தில் பல சகோதரர்கள் கலந்து கொண்டனர். இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்!


ஞாயிறு, 22 ஜனவரி, 2012

19-01-2012 கத்தர் மண்டல மர்கசில் [QITC] வாராந்திர சொற்பொழிவு

அல்லாஹ்வின் பேரருளால்,

கத்தர் மண்டல மர்கசில் [QITC] வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 19-01-2012 வியாழன் இரவு 8:30 மணி முதல் 10:15 மணி வரை மண்டல துணை பொருளாளர் சகோ. இலியாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

துவக்கமாக கத்தர் கெஸ்ட் சென்டர் அழைப்பாளர் சகோதரர். ஷாஜஹான் அவர்கள், "இஸ்லாத்தில் புதிய வரவுகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

அடுத்ததாக கத்தர் இந்திய தவ்ஹீத் மைய அழைப்பாளர் மௌலவி, முஹம்மத் அலீ அவர்கள், "புரிந்துணர்வு" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இறுதியாக கத்தர் இந்திய தவ்ஹீத் மைய அழைப்பாளர் மௌலவி, அன்சார் அவர்கள், "இறையச்சம்" என்ற தொடர் தலைப்பில் உரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட சகோதர- சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

இறுதியாக மண்டல தலைவர் டாக்டர். அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் அறிவிப்புகளும், செயலாளர் மௌலவி, முஹம்மத் அலீ அவர்கள் அன்றைய பயானிலிருந்து கேள்விகளும், சென்ற வாரம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களும் கூறினார்கள்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.

வியாழன், 19 ஜனவரி, 2012

முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் - பிப்ரவரி 14 அன்று Fax அனுப்ப வேண்டிய வாசகம்!

இறைவனின் திருப்பெயரால்...

பிப்ரவரி 14ல் முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம்!

அன்புள்ள சகோதர, சகோதரிகளே!

இன்ஷா அல்லாஹ் பிப்ரவரி 14ல் முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டத்தில் கலந்து கொள்ள முடியாத வெளிநாட்டு வாழ் சகோதரர்கள் கீழ் கண்ட இரண்டு கோரிக்கைகளை வழியுறுத்தி மத்திய மாநில அரசுகளுக்கு Fax அனுப்பி தங்களது உணர்வுகளை தெரியப்படுத்துவன் மூலம் முஸ்லிம் சமுதாயத்தின் எதிர்கால முன்னேற்றத்திற்கு உதவிடுங்கள்.

நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா அவர்களின் பரிந்துரைப்படி மத்தியிலும் அனைத்து மாநிலங்களிலும் முஸ்லிம்களுக்கு 10 சதவிகித தனி இடஒதுக்கீட்டை சட்டமாக்க மத்திய அரசை வலியுறுத்துகின்றோம்.
We urge the Central government to legislate 10 per cent reservation for Muslims in Centre and in all States as recommended by Justice Ranganath Misra.

தமிழகத்தில் முஸ்லிம்களின் 3.5 சதவிகித இட ஒதுக்கீட்டை 7 சதவிகிதமாக உயர்த்த மாநில அரசை வலியுறுத்துகின்றோம்.
We urge the State government to increase the 3.5 per cent reservation to 7 per cent for Muslims in Tamil Nadu.

அனுப்ப வேண்டிய முகவரிகள்:

மத்திய அரசு

Smt. Sonia Gandhi
10, Janpath
New Delhi.
Tel. (O) : 23792263, 23019080
Tel. (R) : 23014161, 23014481
Fax : 23018651

Rahul Gandhi, MP
12, Tughlak Lane
New Delhi
Tel. (O) : 23019056, 23019080
Tel. (R) : 23795161
Fax (R) : 23012410

The Prime Minister’s Office
South Block, Raisina Hill,
New Delhi,
India-110 101.
Telephone: 91-11-23012312.
Fax: 91-11-23019545 / 91-11-23016857

The President of India
Rashtrapati Bhavan
New Delhi – 110 004
Fax – +91-11-23017824

மாநில அரசு

Tamil Nadu CM
Chief Minister’s Office
Secretariat, Chennai 600 009
Fax – 044 25671441

Chief Minister’s Special Cell
Secretariat, Chennai 600 009
Fax – 044 25676929



சனி, 14 ஜனவரி, 2012

QITC மர்கசில் 13-01-2012 அன்று நடைபெற்ற அரபு மொழி அடிப்படைக்கல்வி தேர்வு

அல்லாஹுவின் பேரருளால்,

தோஹா QITC மர்கசில் 13-01-2012 வெள்ளிக்கிழமை அன்று மாலை மஹ்ரிப் தொழுகைக்குப்பின் அரபு மொழி அடிப்படைக்கல்வி தேர்வு நடைபெற்றது.

QITC அழைப்பாளர் மௌலவி. அன்சார் அவர்கள் அனைவரும் சரியான உச்சரிப்பில் குர்ஆனை ஓதவேண்டும் என்பதை வலியுறுத்தி, கடந்த 26 வாரங்களாக இவ்வகுப்பை நடத்தினார்கள்.



இதில் இந்திய - இலங்கை நாடுகளை சார்ந்த 40-க்கும் மேற்பட்ட சகோதர, சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தேர்வு எழுதினார்கள். 

இத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் முதல் மூன்று பேருக்கு பரிசுகள் வழங்கப்படும் என்றும், அடுத்த கட்டமாக அரபு மொழி இலக்கண வகுப்பு இன்ஷாஅல்லாஹ் விரைவில் ஆரம்பமாகும் என்றும் QITC தலைவர் டாக்டர். அஹமத் இப்ராஹீம் அவர்கள் அறிவித்தார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.

QITC மர்கசில் 12-01-2012 அன்று நடைபெற்ற வாராந்திர பயான் நிகழ்ச்சி


அல்லாஹ்வின் பேரருளால்,

தோஹா QITC மர்கசில் வாராந்திர பயான் நிகழ்ச்சி 12-01-2012 வியாழன் இரவு 8:30 மணிக்கு நடைபெற்றது.

துவக்கமாக சவூதி மர்கஸ் அழைப்பாளர் சகோதரர் யூசுப் அவர்கள், "மரணத்தின் வேளையில்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

அடுத்ததாக QITC அழைப்பாளர் மௌலவி. முஹம்மத் தமீம் M.I.Sc. அவர்கள், "உறக்கத்தின் ஒழுங்குகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

சவுதி மர்கஸ் அழைப்பாளர் மவ்லவி. அப்துஸ் ஸமத் மதனி அவர்கள், "நன்றி மறவோம்" என்ற தொடர் தலைப்பில் உரையாற்றினார்கள்.




QITC இணைச்செயலாளர் M.S.ஃபக்ருதீன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இந்திய, இலங்கையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட தமிழ் பேசும் சகோதர சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

இறுதியாக QITC தலைவர் டாக்டர். அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் அறிவிப்புகளும், QITC செயலாளர் மௌலவி முஹம்மத் அலி M.I.Sc. அவர்கள் அன்றைய பயானிலிருந்து கேள்விகளும், சென்ற வாரம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களும் கூறினார்கள்.

மேலும் இன்ஷாஅல்லாஹ் 20-01-2012 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறவுள்ள ஆலோசனைக்கூட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார்கள்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.

புதன், 11 ஜனவரி, 2012

கர்வா கேம்பில் கடந்த 4-1-2012 புதன் கிழமை அன்று நடைபெற்ற பயான் நிகழ்ச்சி

அல்லாஹ்வின் பேரருளால்,

கத்தார் மண்டலத்தின் கர்வா கேம்பில் கடந்த 4-1-2012 புதன் கிழமை அன்று பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.

சகோ. காதர் மீரான் (QITC துணை செயலாளர்)  மார்க்கத்தை அறிந்துகொள்வோம் என்ற தலைப்பிலும், மௌலவி ரிஸ்கான் மரணமும் மன்னரை வேதனையும் என்ற  தலைப்பிலும் உரைநிகழ்த்தினார்கள்.

பல சகோதரர்கள் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்.






கத்தர் மண்டல கிளைகளில் 6-1-2012 அன்று நடைபெற்ற வாராந்திர சொற்பொழிவு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 6-1-2012 அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ் !
  1. வக்ரா பகுதியில் – சகோ. வக்ராஹ் பாக்ருதீன் உரையாற்றினார்கள்.
  2. நஜ்மா பகுதியில் – மவ்லவி. முஹம்மத் தமீம் misc  அவர்கள் உரையாற்றினார்கள் .
  3. சனைய்யா அல் அத்தியா பகுதியில் – மவ்லவி. அப்துஸ் சமத் மதனி அவர்கள் உரையாற்றினார்கள்..
  4. மைதர் பகுதியில் – மவ்லவி. அன்சார் மஜீதி அவர்கள் உரையாற்றினார்.
  5. கர்தியாத் பகுதியில் – சகோ. காதர் மீரான் அவர்கள் உரையாற்றினார்.
  6. லக்தா பகுதியில் - சகோ. ஷாஜஹான் அவர்கள் உரையாற்றினார்.
  7. கரா ஃபா  பகுதியில்- சகோ. ஷாஜஹான் அவர்கள் உரையாற்றினார்கள்.
  8. மதினா கலிபா பகுதியில் -சகோ.ஷாஜஹான் அவர்கள் உரையாற்றினார்கள். 
  9. புதிய சலாத்தா பகுதியில் - சகோ. தஸ்தகீர் அவர்கள் உரையாற்றினார்கள்.
  10. பின் மஹ்மூத் பகுதியில் - மவ்லவி. லாயிக் அவர்கள் உரையாற்றினார்கள்.
  11. அல்கீஸ் பகுதியில் -  மவ்லவி. எம் முஹம்மத் அலி misc உரையாற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில் இந்திய - இலங்கையைச் சேர்ந்த பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.