செவ்வாய், 7 அக்டோபர், 2008

கத்தரில், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்





























ரமலான் 2008 சிறப்பு நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக கடந்த வெள்ளிக்கிழமை 03-10-2008 அன்று " இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்", என்ற மாற்று மதத்தவருக்கான சிறப்பு நிகழ்ச்சி,"கத்தர் இஸ்லாமிய கலாச்சர மையம்" FANAR உள்ளரங்கில் நடைபெற்றது.கத்தர் இந்திய தவ்ஹீத் மைய‌த்தின் செயலாளர் மஸ்ஊத் அவர்கள் நிகழ்ச்சிக்கு வருகை தந்திருக்கும் அனைவரையும் வரவேற்று பேசினார்.

QITC தலைவர் சகோதரர் லியாகத் அலி அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார்கள். அவ‌ருடைய‌ உரையில் ,முஸ்லீம்களின் வேதமான திருக்குர்ஆன் முஸ்லீம்க‌ள் ம‌ட்டும் உரிமை கொண்டாவோ ,அவ‌ர்க‌ள் மட்டும் தான் பின் ப‌ற்ற வேண்டும் என்ப‌தில்லை,அனைத்து உல‌க‌ மக்க‌ளுக்கும் நேர் வ்ழி காண்ப்பிக்க கூடிய‌தாக் இருக்கிற‌து.மேலும் உங்களுடைய‌ இஸ்லாமிய‌ நண்ப‌ர்க‌ளின் ப‌ழ‌க்க‌வ‌ழ‌க்க‌ங்க‌ள் அவ‌ர்க‌ள் பேணுகின்ற இஸ்லாமிய‌ முறைக‌ளை வைத்து இஸ்லாத்தை ம‌தீப்பீடு செய்ய‌வோ ,அவ‌ர்க‌ளை முன் மாதிரியாக‌ கொள்ளவோ கூடாது. உல‌க‌ முஸ்லீம்க‌ளுக்கெல்லாம் த‌லைவரான‌ அல்லாஹூவின் இறுதித் தூத‌ர் முஹம்ம‌து ந‌பிய‌வ‌ர்க‌ளை ம‌ட்டும் தான் முன் மாதிரியாக‌க் கொள்ள வேண்டும். அவ‌ருடைய‌ போத‌னைக‌ள் ம‌ட்டும் தான் பின் பற்ற த‌குதியான்து,என்று கூறினார்.

தமிழகத்திலிருந்த வருகை தந்த சிறப்பு அழைப்பாளர் சகோதரர் கோவை ரஹ்மதுல்லாஹ் அவர்கள் பதில் அளித்தார்கள். அந்நிகழ்ச்சியில் சகோதரர் கோவை ரஹ்மதுல்லாஹ் அவர்கள் மாற்று மத சகோதரர்கள் தொடுத்த கேள்விகளுக்கு உரிய ஆதாரங்களுடனும் தெளிவான விளக்கங்களுடன் பதிலளித்தார்கள். இதில் மாற்று மத பெண்களும் பல கேள்விகள் கேட்டு தெளிவுப்பெற்றனர். கத்தரில் இது போன்ற மாற்று மத மக்களிடம் இஸ்லாத்தை எத்தி வைக்கக்கூடிய நிக‌ழ்ச்சிக‌ள் மிக அரிதாக நடை பெறுகிறது.

ஓவ்வரு சகோதரர்களும் தங்களுடைய ஒரு மாற்று மத அன்பர்களை கொண்டு வரவேண்டும் என்ற அன்பு கட்டளைக்கு கீழ் படிந்தவர்களாக , தங்களால் இயன்ற தவாவை செய்து அரங்கத்தை முழு வதும் நிரம்ப செய்தனர்.

இதில் மாற்று மத தொழில் அதிபர்கள் உயர் அலுவலர்கள் மேலும் பல தொழிலாளர் குடிஇருப்பு வளாகத்திளிருந்தும் தமிழ் அறிந்த நண்பர்கள் ஆர்வமுடன் வந்திருந்தனர். கேள்வி கேட்ட அனைத்து நபர்களுக்கும் " குற்றச்சாட்டுகளும் பதில்களும்" என்ற நூலும் சிடிக்களும் இலவசமாக வழங்கப்பட்டது.குர் ஆனை நாங்கள் படிக்க வேண்டும் என்று விரும்பி கேட்ட மாற்று ம‌த அன்பர்களுக்கு 10க்கும் மேற்ப்பட்ட திருகுர்ஆன் வழங்கப்பட்டது.‌அல்லாஹுவின் அளபெருங் கிருபையால் கத்தர் வாழ் மாற்று மத தமிழ் மக்கிளிடையே இஸ்லாத்தை அவர்கள் மத்தியில் எடுத்து வைத்து கத்தர் இந்தியா தவ்ஹீத் மையத்தின் தாவா பணிகள் ஊடுருவி நிற்க எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்பானாக !

புதன், 1 அக்டோபர், 2008

கத்தரில் ஈத் பெருநாள் கொண்டாட்டம்












அல்லாஹுவின் பெருங்கிருபையால் 29 நோன்புகளை நிறைவேற்றிவிட்டு ஈத் பெருநாள் அன்று அதிகாலை 5:30 மணிக்கு பெருநாள் தொழுகை நிறைவேற்ற வேண்டி , " அலி பின் அலி அல் முஸ்ஸல்மாநி ஈத்கா பள்ளியில் " முஸ்லிம்கள் ஒன்று கூடினார்கள். இமாமின் குத்பா உரைக்கு பின்னர் தமிழில் சிறப்புரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது . QITC யின் துணை செயலாளர் ஷபீர் அவர்கள் முன்னிலையில் , தலைவர் லியாகத் அலி அவர்கள் தலைமை வகித்தார்கள். முதலாவதாக மௌலவி முஹம்மத் அலி அவர்களின் பயன் இடம் பெற்றது . "இன்றைய முஸ்லீம் சமூகம் நோன்பு நமக்களித்திருக்கும் ஆன்மீக பயிற்சியை மீதமுள்ள வருடத்தின் நாட்களில் சரிவர பேணாதது , இம்மையிலும் மறுமையிலும் நன்மைகளை பாழாக்கும். அல்லாஹுவின் நினைவை திசைதிருப்பும் வீணான செய்லகள், சினமா மற்றும் புகை போன்ற கெட்ட பழக்கங்களை நோன்பு காலங்களில் எப்படி தவிர்த்து கொண்டீர்களோ அதை உங்கள் வாழ்கையில் எஞ்சியுள்ள நாட்களிலும் தவிர்த்தால் தான் நோன்பு உங்களுக்கு அளித்த முழுமையான பயிற்சி என்று சொல்லலாம். கெட்ட செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு க்கொண்டு பெரும் நட்டத்தை அடைந்து அதன் காரணமாக மீளா நரகம் சென்ற ஒருவன் " எனக்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்கள் நன்மை செய்து விட்டு வருகிறேன் " என்று கூறுவான் . வாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது . நன்மைகளை அள்ளித்தரும் நோன்பின் மாண்பை உணர்ந்தவர்களாக , நரகத்தில் இருந்து நம்மை காத்து கொண்டவர்களாக நம்மை நாம் சீர்படுத்தி கொள்ளவேண்டும். " என்று கூறினார்

பின்னர் மௌலவி தௌபிக் மதனீ அவர்கள் பள்ளி இமாம் உரையாற்றிய குத்பா உரையின் மொழியாக்கத்தை எடுத்து கூறினார் . " எல்லா நோன்பு நாட்களிலும் பஜ்ர் தொழுகைக்கு பள்ளி நிரம்பி வழிகிறது ஆனால் நோன்பு முடிந்தவுடன் ஒரு ஸப்க்கு கூட தொழுகையாளிகள் இல்லை . பெருநாள் தருமத்தை முறையாக ஏழை எளியோர்க்கு வழங்குங்கள், நோயாளிகளை சென்று விசாரியுங்கள் , நண்பர்கள் உறவினர்கள் எல்லாரையும் சந்தித்து சலாமை தெரிவித்து உள்ளங்களை விசாலப்படுத்தி பெருநாளில் நபி வழி சுன்னாவை கடைபிடியுங்கள்."

இறுதியாக QITC யின் செயலாளர் மஸ்ஊத் அவர்களின் நன்றியுரையுடன் ஈத் பெருநாள் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. வந்திருந்த அனைத்து சகோதர சகோதரிகளும் தங்களுடைய வாழ்த்துக்களை உளமார பரிமாறிக்கொண்டனர் .

மாபெரும் இப்தார் விருந்து






கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஜைதா மேம்பாலம் அருகே அமைந்துள்ள பள்ளிவளாகத்தில் கத்தர் இந்திய தவ்ஹீத் மையமும் கத்தர் செம்பிரை அமைப்பும் இனைந்து ஏற்பாடு செய்திருந்த நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைப்பெற்றது.QITC தலைவர் சகோதரர் லியாகத் அலி அவர்கள்
தலமையேற்று நடத்தினார்கள். கத்தரின் பல பாகங்களிருந்தும் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர் . அந்நிகழ்வின் போது தேவி என்கிற மற்றுமத சகோதரி இஸ்லாத்தை தழுவினர். அவருக்கு மௌலவி தவ்பிஃக் மதனீ அவர்கள் கலிமா மொழிந்து மர்யம் என்று பெயர் சூட்டினார் . மக்ரிப் தொழுகைக்கு பின்னர் உணவுக் குழு அனைவருக்கும் உணவை பரிமாறினார்கள் . அத்திடலில் தவ்ஹீத் புத்தக கண்காட்சியும் அமைக்கப் பட்டிருந்தது . ஏராளமானோர் புத்தம் புதிய தலைப்புகளில் வந்திருந்த நூல்களை வாங்கி சென்றனர். இம்மாபெரும் இப்தார் விருந்திற்கு முக்கிய உதவி நல்கியோர் Qatar Red Crescent, Qatar Charity மற்றும் Eid Bin Charity ஆகிய நிறுவனங்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டார் செயலாளர் மஸ்ஊத். மேலும் ஒலி ஒளி ,அரங்க அமைப்பு , மற்றும் புத்தக கண்காட்சி யை சிறப்பாக செய்திருந்த தன்னார்வ சகோதரர்களுக்கு நன்றி பாராட்டினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவர்க்கும் , வெற்றியாக்கி தந்த எல்லா வல்ல இறைவனுக்கும் நன்றி நவின்றார் . அல்ஹம்துலில்லா !