ஞாயிறு, 30 ஜூலை, 2017

28/07/17 அன்று நடைபெற்ற QITC யின் மாபெரும் இரத்த தான முகாம்


இந்திய சுதந்திர தினத்தையொட்டி, கத்தர் இந்திய தவ்ஹீத் மையமும் (QITC), ஹமத் மெடிக்கல் கார்பொரேஷனும் (HMC) இணைந்து மாபெரும் இரத்த தான முகாமை 28 ஜூலை 2017 வெள்ளிக்கிழமை அன்று நடத்தியது.

அல்லாஹுவின் மாபெரும் கிருபையால், இந்த இரத்த தான முகாமில் பெருந்திரளான கத்தர் வாழ் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள். காலை 8:00 மணிக்கே சனையா, அல்கோர், லேபர் சிட்டி சகோதரர்கள் வரிசையாக வருகை தந்து பெயர் பதிவு செய்தனர். கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தின் 21 கிளைகளிலிருந்து 250க்கும் மேற்பட்ட சகோதரர்கள் இம்முகாமில் ஆர்வத்துடன் பங்குக்கொண்டார்கள்.

உடல் ஆரோக்கியம் மற்றும் உடற் பரிசோதனை நடந்த பிறகு 130 பேர் குருதி கொடையளிக்க தகுதி பெற்று இரத்தம் கொடுத்தார்கள்.

வருகை பதிவு, ஒழுங்கு படுத்தல், உணவு தயாரித்து பரிமாறுதல் என அனைத்து வேலைகளையும், கடும் வெயிலுடன், அதிக புழுக்கத்தையும் பொருட்படுத்தாமல் செயல்வீரர்கள் குழு சிறப்பாக செய்தார்கள்.

எல்லா புகழும் அல்லாஹ்விற்கே

மக்களுக்கு நன்றி செலுத்தாதவன் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தியவனாக ஆக மாட்டான் என்ற அடிப்படையில் இம்முகாம் சிறப்பாக நடைபெற

🔻 குருதிக் கொடை செய்து ஒத்துழைப்பு நல்கிய சகோதரர்களுக்கும்,

🔻 கிளைப் பொறுப்பாளர்கள்,

🔻 கொள்கை சொந்தங்கள்,

🔻 உணவுக் குழு, வாகனக் குழு, செயல்வீரர்கள்

🔻 மற்றும் கலந்துகொண்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும்

எங்களின் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

JAZAKALLAHU KHAIRA

இம் மகத்தான உயிர்காக்கும் பணியில் நம் அனைவரையும் பங்கு கொள்ளச்செய்து, நற்கூலிகளை வாரிவழங்கி நம்பாவங்களை மன்னிக்க காத்திருக்குக்கும் அகில உலக அதிபதி அல்லாஹ்விற்கு நன்றி கூறி அனைத்து புகழும் அவனுக்கே உரித்தாக்குகிறோம்.

அல்ஹம்துலில்லாஹ்.

 

 

 

புதன், 26 ஜூலை, 2017

இந்திய 71 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு QITC யின் மாபெரும் இரத்த தான முகாம் - 28/07/2017



இந்தியாவின் 71 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு

QITC யின் மாபெரும் இரத்த தான முகாம்




நாள்: 28/07/2017, வெள்ளிக்கிழமை

நேரம்: காலை 8:00 மணி முதல் மதியம் 4:00 மணி வரை

இடம்: QITC மர்கஸ்



கண்ணியத்திற்குரிய சகோதர சகோதரிகளே!

✍ கடந்த காலங்களில் இரத்த தான நிகழ்ச்சியில் இரத்த தானம் செய்யவருபவர்களுக்கு ஏற்பட்ட தாமதத்தை இந்த முறை தவிர்க்கும் விதமாக இன்ஷா அல்லாஹ்! வெள்ளிக்கிழமை 28/07/2017 அன்று கத்தர் மண்டல "QITC யின் மாபெரும் இரத்த தான முகாம்" காலை 8:00 மணிக்கு ஆரம்பம் ஆகும் என்பதை அறியத்தருகிறோம்.

✍ அனைத்து சகோதர சகோதரிகளும் இந்த செய்தியை தங்களின் குடும்பத்தினர்களுக்கும் தங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் எடுத்துக் கூறி அவர்களை உயிர்காக்கும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் செய்து நன்மைகளை அள்ளிச்செல்லுமாறு உங்களை அன்போடு அழைக்கிறோம்.



குறிப்பு:

Registration: காலை 8:00 am முதல் மதியம் 4:00 pm மணி வரை மட்டும்

🍲 காலை சிற்றுண்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

🍽 மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

🚨 இரத்தம் கொடுக்க ஏதுவாக 6 பெட்களை கொண்ட வசதியை மர்கஸ் உள்ளரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

🚌 வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. தொடர்புக்கு: 55856697, 66205277

🚺 பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது

🌔 Location: https://goo.gl/99yyFy



📌 அன்று இரவு 8:00 மணிக்கு பெண்கள் பயானும் நடைபெறும் என்பதை மறந்து விடவேண்டாம்.

📌 இதை அனைவருக்கும் ஃபார்வேர்ட் செய்யவும்.

📌 பிற மொழிகளில் நோட்டீஸ்: இந்தி | மலையாளம் | சிங்களம் | உருது



இப்படிக்கு,
QITC- நிர்வாகம்
தொடர்புக்கு: 66316247, 55532718, 66579598, 44315863
தேதி: 25-07-2017