சனி, 25 மே, 2013

கத்தர் மண்டல செயல்வீரர்கள் மற்றும் கிளை நிர்வாகிகளுக்கான தர்பிய்யா நிகழ்ச்சி 24-05-2013

அல்லாஹ்வின் மிகப்பெரும் அருளால், தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் கத்தர் மண்டல செயல்வீரர்கள் மற்றும் கிளை நிர்வாகிகளுக்கான தர்பிய்யா நிகழ்ச்சி, 24-05-2013 அன்று ஜும்மா தொழுகைக்குப்பின் கத்தர் மண்ட தலமையகத்தில் சிறப்பாக நடைப்பெற்றது.

நிகழ்ச்சியை மண்டலத் துணைச்செயலாளர் சகோ ஷேக் அப்துல்லாஹ் அவர்கள் துவக்கி வைத்தார்கள்

மண்டலத் தலைவர் சகோ மஸ்வூத் அவர்கள் தலைமை உரையாற்றினார்கள். இந்த நிகழ்ச்சியின் நோக்கம் என்ன என்பது பற்றியும் புதிய நிர்வாகிகள் அறிமுகத்தையும் செய்து வைத்தார்கள்,

அதன் பின்பு மண்டல பேச்சாளர் சகோ முஹம்மது தமீம் MISc அவர்கள் 'நாம் ஏன் இந்த ஜமாத்தில் இருக்க வேண்டும்' என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். மற்ற இயக்கங்களுக்கும் நம் ஜமாத்திற்கும் உள்ள வித்தியாசங்களை எடுத்து கூறி, கடந்த கால நிகழ்வுகளை சுட்டிக் காட்டி பேசி செயல் வீரர்களுக்கு ஒரு உத்வேகத்தைக் கொடுத்தார்.

அடுத்ததாக துணைச் செயலாளர் சகோ காதர் மீரான் அவர்கள் சென்ற நிகழ்சிகள் பற்றி ஒரு சிறு கண்ணோட்டத்தை வழங்கினார்கள். அதன் பிறகு அஸர் தொழுகை மற்றும் தேனீர் இடைவெளி 15 நிமிடங்கள் விடப்பட்டது.

பின்னர் மண்டலத் தலைவர் சகோ மஸ்வூத் அவர்கள் செயல்வீரர்கள் செயல்திட்டங்களை விளக்கி பேசினார்கள். தாவா களத்தில் பின் பற்ற படவேண்டிய நுணூக்கங்களை பட்டியலிட்டு, கிளை பொறூப்பாளர்கள் அனுதினமும் மார்க்க அறிவையும் பொது அறிவையும் வளர்த்துக்கொள்ளும் விதம் பற்றி கூறினார்கள். நேரத்தை திட்டமிடுவதிலும், மக்கள் தொடர்பு எற்படுத்துவதிலும், தாவாவிற்காக நவீன சாதனங்களை பயன்படுத்தும் முறைகள் பற்றியும் எடுத்து கூறினார்கள்.

மேலும் கிளைகளிடம் இருந்து தலைமை எதிர்பார்ப்பது என்ன? என்பது பற்றியும், ஒவ்வொரு கிளைகள் திட்டமிட்டிருக்கும் எதிர்கால தாவா பணிகள் என்ன என்பதை கேட்டறிந்தார்.

வக்ரா, அல்ஹீஸா, கர்த்தியாத், நஜ்மா, சனைய்யா, மாமுரா, பின் மெஹ்மூத், லக்தா, அல்சத் ஆகிய கிளைகளிலிருந்து வந்திருந்த பொறுப்பாளர்கள் இன்ஷா அல்லாஹ் எதிர் காலங்களில் செய்ய இருக்கும் தாவாபணிகளை கூறினார்கள்.

அடுத்த மண்டலச் செயலாளர் சகோ முஹம்மது அலி MISc அவர்கள் இந்த ஜமாத்தின் பொறுப்பாளர்களிடம் காணப்பட்ட வேண்டிய பண்புகளை குர்ஆன் ஹதீஸின் அடிப்படையிலும் நபிகளாரின் வாழ்வில் ஏற்பட்ட நிலைகளையும் சுட்டிக் காட்டிப் பேசினார்கள். அதில் குறிப்பாக தவிர்க்க வேண்டிய பண்புகளைப் பற்றியும், இந்த ஜமாத்துடன் முரண்படும் செயல்களையும், மற்ற இயக்கங்களிடம் இருக்கும் பலகீனங்களையும், நிர்வாகிகளாக இருப்போர் கத்தர் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு ஏற்ப எப்படி நடக்க வேண்டும் என்பதையும் கிளை நிர்வாகிகளுக்கு தெள்ளத் தெளிவாக உதாரணங்களுடன் கூறி விளங்கப்படுத்தினார்கள்.

அதன் பிறகு மண்டலத் துணைத் தலைவர் சகோ பக்ருதீன் அவர்கள் நம் ஜமாத்தின் வெளியீடான உணர்வு தீன்குலப் பெண், ஏகத்துவம் இதழ்களின் கத்தர் மண்டத்தின் நிலைகளைக் கூறி இந்த இதழ்கள் எந்த அளவிற்கு செய்திகளைத் தாங்கி வருகிறது, இதன் மூலம் நம் சமுதாயத்திற்கு எந்த அளவிற்கு பயன் கிடைக்கிறது, இதன் செய்திகளின் உண்மைத் தன்மை பற்றியும், இது எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்து என்பது பற்றியும் தெளிவான ஒரு விளக்கத்தை வழங்கி கிளை உறுப்பினர்களிடம் இதன் வளர்ச்சிக்குக்கும் சந்தாவை அதிகப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அடுத்ததாக சகோ முஹம்மது அலி MISc எதிர்வரும் நிகழ்ச்சிகள் என்னென்ன? என்பது பற்றியும் தலைமையில் இருந்து செய்திகள் வரும் போது கிளை உறுப்பினர்களும் செயல் வீரர்களும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றியும் உரையாற்றினார்கள்.

அத்தோடு இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் நிகழ்சிகளாக பின்வரும் நிகழ்சிகளை பட்டியலிட்டார்கள்:

1. பிற மதக் கட்டுரைப் போட்டி
2. முஸ்லீம்களுக்கான கட்டுரைப் போட்டி
3. சிறுவர்களுக்கான கட்டுரைப் போட்டி
4. தாயிக்கள் பயிற்சி வகுப்பு
5. 31-05-2013 அன்று இரத்த தானம் 
6. 14-06-2013 அன்று ரமலான் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் 
7. இஸ்லாம் ஒர் இனிய மார்க்கம்
8. ரமலான் நிகழ்சிகள்

இறுதியாக மண்டலப் பொருலாளர் சகோ இலியாஸ் நன்றியுரை கூறி இனிதே நிகழ்ச்சி நிறைவுற்றது. இந்நிகழ்ச்சியில் நாற்பதுக்கும் மேற்பட்ட செயல் வீரர்கள் கலந்துக்கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்.


சனாயிய்யா அல்-நஜாஹ் கிளையில் மார்க்க சொற்பொழிவு 23-05-2013

அல்லாஹ்வின் பேரருளால்,

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டலம், சனாயிய்யா பகுதியிலுள்ள அல்-நஜாஹ் கிளையில் அல்-நஜாஹ் ஆட்டோமேடிக் டைல்ஸ் ஃபேக்டரி வளாகத்தில், 23-05-2013 வியாழன் இரவு 8:30 மணி முதல் 9:30 மணி வரை ,சிறப்பு மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது.

இதில் சவூதிமர்க்ஸ் அழைப்பாளர் சகோதரர் அப்துஸ் சமத் மதனீ அவர்கள் "சுட்டெரிக்கும் நரகம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் 50க்கும் மேற்ப்பட்ட சகோதரர்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தார்கள். கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.



"சிறார்கள் தர்பியா" வாய்மொழி தேர்வு 23-05-2013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டலத்தில், "சிறார்கள் தர்பியா" வில் வாய்மொழி தேர்வு 23-05-2013 வியாழன் அன்று இரவு 9 மணி முதல் 10 மணி வரை நடைபெற்றது.

இதில், மண்டல அழைப்பாளர் மவ்லவி முஹமத் தமீம் MISc, மவ்லவி மனாஸ் பயானி மற்றும் சகோதரர் ஃ பக்ருதீன் அலி ஆகியோர் "அல்லாஹ், நபிமார்கள், குர் ஆன், துஆ, நல்லொழுக்கங்கள்" ஆகிய தலைப்புகளில் இருந்து சிறுவர் சிறுமிகளுக்கு கேள்விகள் கேட்டு வாய்மொழி தேர்வு நடத்தினார்கள். இதில் பல சிறுவர் சிறுமிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு பதில் அளித்தார்கள்

கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்!


கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு 23-05-2013

அல்லாஹ்வின் பேரருளால்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு 23-05-2013 வியாழன் இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை மண்டல இணைச் செயலாளர் சகோதரர் ஷைக் அப்துல்லாஹ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

ஆரம்பமாக, மண்டல அழைப்பாளர் சகோதரர் காதர்மீரான் அவர்கள் "தியாகங்களை நினைவு கூறுவோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்

பின்னர் மவ்லவி இஸ்ஸத்தின் ரிள்வான் ஸலஃபி அவர்கள் "திசை மாறும் இளைஞர்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

பின்னர் மவ்லவி முஹமத் தமீம் MISC அவர்கள் "குழப்பவாதிகள் யார்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

பின்பு மண்டலத்தலைவர் சகோதரர் மஸ்வூத் அவர்கள் கத்தர் மண்டலம் ஏற்பாடு செய்துள்ள நம்முடைய சகோதரர்களுக்காண கட்டுரைப்போட்டி குறித்தும், ஹமாத் மருத்துவமனை கேட்டுகொண்டதிற்கிணங்க எதிர்வரும் 31-05-2013 வெள்ளிக்கிழமை இரத்ததான முகாம் நடுத்துவது குறித்தும், இன்னும் பல அறிவிப்புகளும் செய்தார்கள். பின்னர் மண்டல துணைத்தலைவர் சகோதரர் ஃபக்ருதீன் அலி அவர்கள் கடந்தவாரம் கேட்கப்பட்ட கேள்விக்கான பதிலை கூறி அன்றைய உரையிலிருந்து மூன்று கேள்விகள் கேட்டு நிகழ்ச்சியை நிறைவு செய்து வைத்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 140-க்கும் மேற்பட்ட சகோதர- சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.





கத்தர் மண்டல கிளைகளில் 24-05-2013 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு

அல்லாஹுவின் பேரருளால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 24-05-2013 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

1. வக்ரா-1 பகுதியில் - சகோதரர் சபீர் அஹ்மத் அவர்கள் உரையாற்றினார்கள்.

2. வக்ரா-2 பகுதியில் - மவ்லவி இஸ்ஸதின் ரிள்வான், ஸலபி அவர்கள் உரையாற்றினார்கள்.

3. நஜ்மா பகுதியில் - சகோதரர் அப்துல் லதீப் அவர்கள் உரையாற்றினார்கள்.

4. அல் அத்தியா பகுதியில் – மவ்லவி அப்துஸ்சமத் மதனீ அவர்கள் உரையாற்றினார்கள்.

5. முஐதர் பகுதியில் – சகோதரர் காதர் மீரான் அவர்கள் உரையாற்றினார்கள்.

6. லக்தா பகுதியில் - சகோதரர் யூசுப் அவர்கள் உரையாற்றினார்கள்.

7. அல் ஃஹீஸா பகுதியில் – மவ்லவி முஹமத் தமீம் Misc ,அவர்கள் உரையாற்றினார்கள்.

8. சலாத்தா ஜதீத் பகுதியில் - மவ்லவி லாயிக் அவர்கள் உரையாற்றினார்கள்.

9. பின் மஹ்மூத் பகுதியில் - மவ்லவி முஹமத் அலி MISC அவர்கள் உரையாற்றினார்கள்.

10. கரத்திய்யாத் பகுதியில் – சகோதரர் ஜலாலுதீன் அவர்கள் உரையாற்றினார்கள்.

11. அல்சத் பகுதியில் - மவ்லவி மனாஸ் பயானி அவர்கள் உரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய, இலங்கையைச் சேர்ந்த பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

அல்ஹம்துலில்லாஹ்!





வியாழன், 23 மே, 2013

கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தில் அவசர இரத்ததான முகாம் - 31-05-2013

அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே !

கத்தர் ஹமத் மெடிக்கல் கார்பொரேஷன் (HMC) மருத்துவமனைக்கு, அறுவை சிக்கிச்சைக்காக பல நோயாளிகள் போதிய அளவிலான இரத்தம் இல்லாததால் காத்து இருகின்றனர் என்றும், காரணம் இரத்த வங்கியில் இரத்தத்திற்காக கடும் பற்றாக்குறை நிலவுகிறது என்றும், இதை ஈடுகட்ட தங்கள் அமைப்பு துரித முகாம் ஒன்றினை நடத்தி தரவேண்டும் என்று ஹமாத் இரத்த வங்கியிலிருந்து கோரிக்கை வந்த நிலையில், மனித உயிர் காக்கும் இம்மகத்தான பணிக்கு உடனே செவி சாய்த்து, இன்ஷா அல்லாஹ் வருகின்ற 31-05-2013 வெள்ளிக் கிழமை, கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தில் இரத்ததான முகாமை ஏற்பாடு செய்திருக்கிறோம்.

இதில் தங்களும், தங்களுக்கு தெரிந்த அன்பர்களையும், நண்பர்களையும் அழைத்து வருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

கூடுதல் விவரங்களுக்கு இணைக்கப்பட்டுள்ள நோட்டிஸை காணவும்.

திங்கள், 20 மே, 2013

QITC யின் பிறமத சகோதரர்களுக்கான கட்டுரைப்போட்டி - 2013



கண்ணியத்திற்குரிய சகோதர சகோதரிகளே !

இந்த கட்டுரைப்போட்டிக்கான தகவலை நமது தொப்புள் கொடி உறவுகளான பிற மத சகோதர சகோதரிகளுக்கு விரைவாக எத்திவைக்கும் படி தங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம். இதை மெயிலாக மற்றவர்களுக்கும் அனுப்பி வைக்கவும்.

கண்ணியத்திற்குரிய பிற மத சகோதர சகோதரிகளே !

நம் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நல்லிணக்கத்துடன் வாழ மற்றவர்களுடைய மதரீதியான கொள்கை கோட்பாடுகளை தெரிந்து வைத்துக்கொள்வது மிக இன்றியமையாததாக உள்ளது. இஸ்லாத்ததை பற்றி தங்கள் மனதில் உள்ளதை சொல்லும் இடமாக இந்த கட்டுரைப்போட்டியை அறிமுகப்படுத்துகிறோம். அதனடிப்படையில் "இஸ்லாம் என் பார்வையில்" என்ற தலைப்பில் தங்கள் மனதில் தோன்றியதை கட்டுரையாக எழுதி எங்களுக்கு அனுப்பும் படி தங்களை கேட்டுக்கொள்கிறோம் .

குறிப்பு :

1. இப்போட்டியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளோர் தங்கள் பெயர் மற்றும் தொலைபேசி எண் இவை இரண்டையும் 66579598 என்ற எண்ணுக்கு SMS செய்து தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளவும்.

2. கட்டுரை வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 15-06-2013

3. சிறந்த மூன்று கட்டுரைகளுக்கு வெகுமதி மிக்க பரிசுகள் காத்திருக்கிறது மற்றும் போட்டியில் பங்குபெறும் அனைவருக்கும் பரிசுகள் காத்திருக்கிறது

4. கூடுதல் விவரங்களுக்கு நோட்டிஸை பார்வையிடவும்.

ஞாயிறு, 19 மே, 2013

"கத்தர் மண்டல நிர்வாகிகள் கூட்டம்", 17-05-2013

அல்லாஹ்வின் பேரருளால்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா'அத்-கத்தர் மண்டல மர்கஸில் [QITC], "கத்தர் மண்டல நிர்வாகிகள் கூட்டம்", 17-05-2013 வெள்ளி மாலை 6.30 மணி முதல் இரவு 9.30 மணி வரைமண்டல தலைவர் சகோதரர் மஸ்வூத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், ரமலான் சிறப்பு நிகழ்சிகள் குறித்து செயற்குழு கூட்டம் நடுத்துவது, கிளை பொறுப்பாளர்களுக்கான தர்பியா நடத்துவது, மர்க்ஸ் சீரமைப்பு பணிகள், உணர்வு விற்பனையை மேம்படுத்துவது மற்றும் பல விசயங்கள் குறித்து விரிவாக அலசப்பட்டு, எதிர்காலத்திற்கான முடிவுகள் எடுக்கப்பட்டன.

இதில் 10 நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்.


கத்தர் மண்டல கிளைகளில் 17-05-2013 வாராந்திர சொற்பொழிவு

அல்லாஹுவின் பேரருளால்,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 17-05-2013 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

1. வக்ரா-1 பகுதியில் - அன்சார் மஜிதி அவர்கள் உரையாற்றினார்கள்.

2. வக்ரா-2 பகுதியில் – சகோதரர். சபீர் அஹ்மத் அவர்கள் உரையாற்றினார்கள்.

3. நஜ்மா பகுதியில்-சகோதரர் , தஸ்தகீர் அவர்கள் உரையாற்றினார்கள்.

4. அல் அத்தியா பகுதியில் – மவ்லவி,அப்துஸ்சமத் மதனீ அவர்கள் உரையாற்றினார்கள்.

5. முஐதர் பகுதியில் – மவ்லவி ,மனாஸ் பயானி அவர்கள் உரையாற்றினார்கள்.

6. லக்தா பகுதியில் - மவ்லவி ,ரிள்வான் ஸலபி அவர்கள் உரையாற்றினார்கள்.

7. அல் ஃஹீஸா பகுதியில் – மவ்லவி முஹமத் அலி Misc ,அவர்கள் உரையாற்றினார்கள்.

8. சலாத்தா ஜதீத் பகுதியில்- சகோதரர் ,காதர்மீரான் அவர்கள் உரையாற்றினார்கள்.

9. பின் மஹ்மூத் பகுதியில் - சகோதரர் ஹயாத் பாஷா அவர்கள் உரையாற்றினார்கள்.

10. கரத்திய்யாத் பகுதியில் – சகோதரர் ,அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்.

11. கரஃப்ஃபா பகுதியில் - மவ்லவி , ரிள்வான் ஸலபி அவர்கள் உரையாற்றினார்கள்.

12. அல்சத் பகுதியில் -  சகோதரர் ஃ பக்ருதீன் அலி அவர்கள் உரையாற்றினார்கள்

இந்நிகழ்ச்சியில் இந்திய - இலங்கையைச் சேர்ந்த பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

அல்ஹம்துலில்லாஹ் !




திருக் குர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு 14-05-2013

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டல கிளையில் 14-05-2013 முதல் தினந்தோறும் இரவு 9.00 மணிமுதல் 10.00 மணி வரை திருக் குர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது.

இதில் சவுதி மர்க்ஸ் அழைப்பாளர் சகோதரர் அப்துஸ் சமத் மதனீ அவர்கள் திருக் குர்ஆனை பிழையில்லாமல் ஓதுவது குறித்து பயிற்சி அளித்து வருகிறார்கள். இந்த முதல் பேட்ச் (batch) வகுப்பில் பத்து சகோதரர்கள் கலந்துகொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர். அல்ஹம்துலில்லாஹ்.


சனி, 18 மே, 2013

கத்தர் மண்டலத்தி்ல் "சிறார்கள் தர்பியா" 16-05-2013

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத்,கத்தர் மண்டலத்தில், "சிறார்கள் தர்பியா" 16-05-2013 வியாழன் அன்று இரவு 9 மணி முதல் 10 மணி வரை நடைபெற்றது. 

ஆரம்பமாக,மண்டல அழைப்பாளர் மவ்லவி அன்சார் மஜிதி அவர்கள் அல்லாஹ், நபிமார்கள், குர் ஆன், துஆ ஆகிய தலைப்புகளில் இதுவரை நடந்த பாடங்களை நினைவு படுத்தி எதிர்வரும் 23 ஆம் தேதி தேர்விற்கு குழந்தைகளை தயார்படுத்தினார்கள். இவ்வகுப்பில் பல சிறுவர் - சிறுமிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.



கத்தர் மண்டலம் சனாயிய்யா அல்-நஜாஹ் கிளையில் சிறப்பு மார்க்க சொற்பொழிவு 16-05-2013

அல்லாஹ்வின் பேரருளால், 

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டலம், சனாயிய்யா பகுதியிலுள்ள அல்-நஜாஹ் கிளையில் அல்-நஜாஹ் ஆட்டோமேடிக் டைல்ஸ் ஃபேக்டரி வளாகத்தில், 16-05-2013 வியாழன் இரவு 8:30 மணி முதல் 9:30 மணி வரை சிறப்பு மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது

சவூதிமர்க்ஸ் அழைப்பாளர் சகோதரர் அப்துஸ் சமத் மதனீ அவர்கள் "அல்லாஹ்வின் நற்பாக்கியங்களை நினைவு கூறுவோம்" என்ற 

தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் 50க்கும் மேற்ப்பட்ட சகோதரர்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தார்கள் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது .



கத்தர் மண்டலம், அல் ஃஹோர் கிளையில்சொற்பொழிவு நிகழ்ச்சி 16-05-2013

அல்லாஹ்வின் பேரருளால், 

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டலம், அல் ஃஹோர் கிளையில் இரு வாரத்திற்கொருமுறை நடைபெறும் சொற்பொழிவு நிகழ்ச்சி 16-05-2013 வியாழன் இரவு 8:15 மணி முதல் 9:00 மணி வரை கிளைப் பொறுப்பாளர் சகோதரர் நைனா முஹம்மத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் மண்டல அழைப்பாளர் மௌலவி முஹமத் தமீம் Misc அவர்கள் "ஏகத்துவமும், எதிர்வாதமும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 35-க்கும் மேற்பட்ட சகோதர- சகோதரிகள் தங்கள் குழந்தைகளுடன் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள். 

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

அல்ஹம்துலில்லாஹ்.




கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு 16-05-2013

அல்லாஹ்வின் பேரருளால்,

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத், கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு 16-05-2013 வியாழன் இரவு 8:45 மணி முதல் 10:00 மணி வரை சகோதரர் .ஃ பக்ருதீன் அலி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

ஆரம்பமாக,மண்டல அழைப்பாளர் மவ்லவி மனாஸ் பயானி அவர்கள் "உம்மு சலமா (ரலி)" வரலாறு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்

பின்னர் மவ்லவி முஹமத் அலி Misc அவர்கள் "இஸ்லாத்தை விட்டு வெளியேற்றும் செயல்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

பின்பு மண்டலத்தலைவர் சகோதரர் மஸ்வூத் அவர்கள் எதிர்வரும் ரமலான் மாதத்தை ஒட்டி பிற மத சகோதரர்களுக்கான கட்டுரைப்போட்டி நடுத்துவது குறித்தும் இன்னும் பல அறிவிப்புகளும் செய்தார்கள்.

பின்னர் மண்டலச் செயலாளர் சகோதரர் முஹமத் அலி Misc அவர்கள் கடந்தவாரம் கேட்கப்பட்ட கேள்விக்கான பதிலை கூறி அந்த கேள்விக்கு சரியாக பதில் அளித்த ஒரு சகோதரர் மட்டும் ஒரு சகோதரிக்கு பரிசுகளை அறிவித்தார்கள் மண்டல துணைத் தலைவர் சகோதரர் ஃ பக்ருதீன் அலி அவர்கள்பரிசுகளை வழங்கினார்கள் மேலும் அன்றைய உரையிலிருந்து மூன்று கேள்விகள் கேட்டு நிகழ்ச்சியை நிறைவு செய்து வைத்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 140-க்கும் மேற்பட்ட சகோதர- சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.





சனி, 11 மே, 2013

கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் 10-05-2013

அல்லாஹுவின் பேரருளால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கத்தர் மண்டலத்தின் பின்வரும் கிளைகளில் கடந்த 10-05-2013 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

1. வக்ரா-1 பகுதியில் - மவ்லவி இஸ்சத்தின் ரிள்வான் ஸலபி அவர்கள் உரையாற்றினார்கள்.

2. வக்ரா-2 பகுதியில் – சகோதரர். ஃ பக்ருதீன் அலி அவர்கள் உரையாற்றினார்கள்.

3. நஜ்மா பகுதியில் - சகோதரர் சகோதரர். காதர் மீரான் , அவர்கள் உரையாற்றினார்கள்.

4 .அல் அத்தியா பகுதியில் – மவ்லவி அப்துஸ்சமத் மதனீ அவர்கள் உரையாற்றினார்கள்.

5 .முஐதர் பகுதியில் – சகோதரர் முஹம்மத் யூசுப் அவர்கள் உரையாற்றினார்கள்.

6. லக்தா பகுதியில் - சகோதரர் அப்துர் ரஹ்மான்அவர்கள் உரையாற்றினார்கள்.

7. அல் ஃஹீஸா பகுதியில் – மவ்லவி மனாஸ் பயானி அவர்கள் உரையாற்றினார்கள்.

8. சலாத்தா ஜதீத் பகுதியில் - சகோதரர் தாஜுதீன் அவர்கள் உரையாற்றினார்கள்.

9. ம'அமூரா பகுதியில் – சகோதரர் ஹயாத் பாஷா அவர்கள் உரையாற்றினார்கள்.

10. பின் மஹ்மூத் பகுதியில் - மவ்லவி முஹம்மது அலி அவர்கள் உரையாற்றினார்கள்.

11. கரத்திய்யாத் பகுதியில் – சகோதரர் சபீர் அவர்கள் உரையாற்றினார்கள்.

12. கரஃப்ஃபா பகுதியில் - சகோதரர் அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்.

13. அல்சத் பகுதியில் - மவ்லவி அன்ஸார் மஜிதி அவர்கள் உரையாற்றினார்கள்

இந்நிகழ்ச்சியில் இந்திய- இலங்கையைச் சேர்ந்த பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.