வியாழன், 14 டிசம்பர், 2017

08/12/2017 அன்று நடைபெற்ற QITC யின் மாபெரும் இரத்த தான முகாம்


அல்லாஹ்வுடைய அருளால் வெள்ளிக்கிழமை 08/12/2017 அன்று QATAR NATIONAL DAY யை முன்னிட்டு QITC யின் கத்தர் மண்டலத்தின் சார்பாக மாபெரும் இரத்த தான முகாம் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
  • இம்முகாமில் 96 சகோதரர்கள் குருதிக் கொடை அளித்தார்கள்.

  • 300 க்கும் அதிகமான சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.
எல்லா புகழும் அல்லாஹ்விற்கே!

மக்களுக்கு நன்றி செலுத்தாதவன் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தியவனாக ஆக மாட்டான் என்ற அடிப்படையில், இம்முகாம் சிறப்பாக நடைபெற
  • குருதிக் கொடை செய்து ஒத்துழைப்பு நல்கிய சகோதரர்களுக்கும்,

  • கிளைப் பொறுப்பாளர்கள்,

  • கொள்கை சொந்தங்கள்,

  • உணவுக் குழு, வாகனக் குழு, செயல்வீரர்கள்,

  • மற்றும் கலந்துகொண்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும்
எங்களின் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

JAZAKALLAHU KHAIRA

இம் மகத்தான உயிர்காக்கும் பணியில் நம் அனைவரையும் பங்கு கொள்ளச்செய்து, நற்கூலிகளை வாரிவழங்கி நம்பாவங்களை மன்னிக்க காத்திருக்கும் அகில உலக அதிபதி அல்லாஹ்விற்கு நன்றி கூறி அனைத்து புகழும் அவனுக்கே உரித்தாக்குகிறோம்

குறிப்பு:

இரத்த தான பதிவு Registration - HMC ஸிஸ்டம் டவுன் பிரச்சினையினால் மதியம் 2:00 PM முடிந்துவிட்டது. அதன்கராணத்தினால் இரத்த தானம் செய்ய வந்த ஏராளமான சகோதரர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். இதற்கு மண்டல நிர்வாகம் மிகுந்த வருத்தத்தை தெரிவித்து கொள்கிறது.

இப்படிக்கு
QITC- நிர்வாகம்
6631 6247, 55532718, 66579598, 44315863
தேதி: 08-12-2017








சனி, 9 டிசம்பர், 2017

திருக்குர்ஆன் முரண்பாடுகளற்ற இறைவேதம்


ஏகஇறைவனின் திருப்பெயரால்...

திருக்குர்ஆன் முரண்பாடுகளற்ற இறைவேதம்

இறைவனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டு, அவர்கள் வழியாக மக்களுக்குக் கிடைத்ததே திருக்குர்ஆன் என்பது முஸ்லிம்களின் நம்பிக்கை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பேச்சுக்களில் ஒரு வரி கூட திருக்குர்ஆனில் இடம் பெறவில்லை என்று திருக்குர்ஆனே தெளிவாகப் பிரகடனம் செய்கிறது.

ஆயினும் முஹம்மது நபியால் எழுதப்பட்டதே திருக்குர்ஆன் என்று முஸ்லிமல்லாதவர்கள் பலர் நினைக்கின்றனர். இது தவறாகும்.

முரண்பாடின்மை!

பொதுவாக மனிதர்களின் பேச்சுக்களில் முரண்பாடுகள் காணப்படும். ஒருநாள், இரண்டு நாட்கள் முரண்பாடு ஏற்படாத வகையில் மிகவும் கவனமாகப் பேசிட இயலும். எவ்வித முரண்பாடும் இன்றி எவராலும் ஆண்டுக் கணக்கில் பேசிட இயலாது.

எவ்வளவு பெரிய அறிஞராக இருந்தாலும் அவரது ஐந்து வருட பேச்சுக்களை ஆய்வு செய்தால் ஏராளமான விஷயங்களில் அவர் முரண்பட்டுப் பேசியிருப்பதைக் காண முடியும்.
  • முன்னர் பேசியதை மறந்து விடுதல்

  • முன்னர் தவறாக விளங்கியதைப் பின்னர் சரியாக விளங்குதல்

  • கவலை, துன்பம் போன்ற பாதிப்புகள் காரணமாக போதுமான கவனமின்றிப் பேசுதல்

  • யாரிடம் பேசுகிறோமோ அவர்கள் மனம் கோணக் கூடாது என்பதற்காக அல்லது அவர்களிடமிருந்து ஆதாயம் பெறுவதற்காக வளைந்து கொடுத்துப் பேசுதல்

  • வயதாவதால் மூளையின் திறனில் ஏற்படும் குறைபாடுகள்

  • விளைவுகளுக்கும், நெருக்கடிகளுக்கும் அஞ்சி இரட்டை நிலை மேற்கொள்ளுதல்
மற்றும் இது போன்ற ஏராளமான பலவீனங்கள் மனிதர்களுக்கு இருப்பதால் முரண்பாடுகள் இல்லாத ஒருவரைக் கூட காண முடியாது.

அனால், திருக்குர்ஆனை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிறிது சிறிதாக 23 ஆண்டுகளாக மக்களிடம் போதித்தார்கள். இது அவர்களின் சொந்தக் கற்பனையாக இருந்திருந்தால், 23 வருடப் பேச்சுக்களில் ஏராளமான முரண்பாடுகள் அவர்களிடம் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால் திருக்குர்ஆனில் முரண்பாடுகள் எள்ளளவும் இல்லை.

மேலே சுட்டிக்காட்டிய பலவீனங்கள் எதுவுமே இல்லாத ஏகஇறைவனின் வார்த்தையாக திருக்குர்ஆன் இருந்தால் மட்டுமே முரண்பாடு இல்லாமல் இருக்க முடியும்.

இறைவனிடமிருந்து வந்ததால் தன்னுள் முரண்பாடு இல்லை என்று மனித குலத்துக்கு திருக்குர்ஆன் அறைகூவல் விடுக்கிறது.

அவர்கள் இந்தக் குர்ஆனை சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.

(திருக்குர்ஆன் 4:82)


காலத்தால் முரண்படாதது!

இதில் இன்னொரு முக்கிய அம்சத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். திருக்குர்ஆன் என்பது ஏதோ இன்று நேற்று வழங்கப்பட்ட புத்தகமல்ல. 1400 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்டதாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கி.பி. 570ல் பிறந்தார்கள். இந்தக் காலகட்டத்தில் உலக மக்கள் அறிவியலில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தார்கள். உலகம் உருண்டை என்ற சாதாரண அறிவு கூட அன்றைய மக்களுக்கு இருக்கவில்லை.

இத்தகைய காலத்தில் வாழ்ந்தவர் எவ்வளவு பெரிய மேதையாக இருந்தாலும், தனது காலத்து அறிவைக் கடந்து எதையும் அவரால் கூறவே இயலாது. சுமார் நூறு வருடம் கடந்த பின் அவரது நூலை வாசித்தால் அதில் பல தவறுகளும் முரண்பாடுகளும் இருப்பதை உலகம் கண்டு கொள்ளும்.

நூறு வருடங்களுக்குப் பின் என்ன நடக்கும்; என்னென்ன கண்டுபிடிக்கப்படும் என்ற விபரங்களை நூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்தவரால் ஊகம் செய்ய இயலாது என்பதே இதற்குக் காரணம்.

பல அறிஞர்கள் கூட்டாகச் சேர்ந்து உருவாக்கிய நூலாக இருந்தால் கூட நூறு வருடங்களுக்குப் பின் அதில் பல தவறுகள் இருப்பதைக் காண முடியும். சில நேரங்களில் அந்த முழு நூலுமே காலத்திற்கு ஒவ்வாத நூலாகி இருப்பதையும் காணமுடியும்.

ஆனால் எழுதவும், படிக்கவும் தெரியாத, மிகவும் பின்தங்கிய சமுதாயத்தில் வாழ்ந்த ஒருவர் எதை இறைவேதம் என்று அறிமுகம் செய்தாரோ அந்த வேதத்தில் எந்த ஒன்றையும் தவறானது என்று இன்றைக்கும் நிரூபிக்க முடியவில்லை. துளி முரண்பாட்டை சுட்டிக்காட்ட இயலவில்லை.

இத்தனைக்கும் திருக்குர்ஆனைப் பொறுத்தவரை அது ஆன்மீகத்தைப் பற்றி மட்டும் பேசவில்லை. எல்லாத் துறைகளைப் பற்றியும் ஆங்காங்கே பேசுகிறது.

பூமியைப் பற்றியும், ஏனைய கோள்கள் பற்றியும், வானுலகம் பற்றியும் பேசும்போது, இந்த நூற்றாண்டின் மாமேதையும், வானியல் நிபுணரும் பேசினால் எவ்வாறு இருக்குமோ அதைவிடச் சிறப்பாக திருக்குர்ஆன் பேசுகிறது.
  • அது போல் மனிதனைப் பற்றியும், மற்ற உயிரினங்களைப் பற்றியும், உயிரினங்கள் உற்பத்தியாகும் விதம் பற்றியும், இன்னும் பல விஷயங்களைப் பற்றியும் திருக்குர்ஆன் பேசுகிறது. 14 நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதன் பேசுவது போல் பேசவில்லை. இந்த நூற்றாண்டின் தேர்ந்த மருத்துவ மேதை பேசுவதைவிட அழகாகப் பேசுகிறது. தாவரங்களைப் பற்றி பேசினாலும், மலைகளைப் பற்றி பேசினாலும், நதிகளைப் பற்றி பேசினாலும், 14 நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் பேசியது போல் திருக்குர்ஆனின் பேச்சு இல்லை.

  • அது மட்டுமின்றி சென்ற நூற்றாண்டுக்கு முன்னாள் வரை கண்டுபிடிக்கப்படாத, தற்போது கண்டுபிடிக்கப்பட்ட பல விஷயங்களை குர்ஆன் அன்றே சொல்லியிருக்கிறது.

  • பல்வேறு துறைகளிலும் தேர்ந்த அறிவுடைய ஒருவர் இன்று எப்படி பேசுவாரோ அதைவிடச் சிறப்பாக திருக்குர்ஆன் பேசுவதையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலச் சூழ்நிலையையும் ஒரு நேரச் சிந்திக்கும் யாரும் “இது முஹம்மது நபியின் சொந்த வார்த்தையாக இருக்க முடியாது; முக்காலமும் உணர்ந்த இறைவனின் வார்த்தையாகத்தான் இருக்க முடியும்” என்ற முடிவுக்குத்தான் வருவார்கள்.
காலங்கள் பல கடந்தாலும், பல துறைசார்ந்த கருத்துகள் திருக்குர்ஆனில் நிறைந்திருந்தாலும் எந்த ஒன்றிலும் முரண்பாட்டைக் காட்ட முடியவில்லை என்பது எத்தனை பெரிய அதிசயம்!

இதிலிருந்தே காலம் கடந்தும் கம்பீரமாக நிற்கும் இறைவேதமாக, எவ்வித முரண்பாடும் இல்லாத ஒப்பற்ற இறைவேதமாக திருக்குர்ஆன் திகழ்கிறது என்பதை அறியலாம்.

திருக்குர்ஆன் போல முரண்பாடில்லாத ஒரு வேதப்புத்தகத்தை யாராலும் எக்காலத்திலும் கொண்டுவர முடியாது என்பதே நிதர்சன உண்மையாகும்.

நமது அடியாருக்கு (முஹம்மதுக்கு) நாம் அருளியதில் நீங்கள் சந்தேகம் கொண்டு, (அதில்) நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள்! அல்லாஹ்வைத் தவிர ஏனைய உங்கள் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள்!

(திருக்குர்ஆன் 2:23)

புதன், 6 டிசம்பர், 2017

QATAR NATIONAL DAY யை முன்னிட்டு QITC யின் மாபெரும் இரத்த தான முகாம் - 08 டிசம்பர் 2017


QATAR NATIONAL DAY யை முன்னிட்டு QITC யின் மாபெரும் இரத்த தான முகாம் - 08 டிசம்பர் 2017


நாள்: வெள்ளிக்கிழமை 08/12/2017

நேரம்: காலை 8:00 மணி முதல் மதியம் 4:00 மணிவரை Registration 

இடம்: QITC மர்கஸ்


கண்ணியத்திற்குரிய சகோதர சகோதரிகளே!

✍ கடந்த காலங்களில் இரத்த தான நிகழ்ச்சியில் இரத்த தானம் செய்ய வரும் சகோதரர்களுக்கு ஏற்பட்ட தாமதத்தை தவிர்க்கும் விதமாக இன்ஷா அல்லாஹ்! வெள்ளிக்கிழமை 08/12/2017 அன்று கத்தர் மண்டல "QITC-யின் மாபெரும் இரத்த தான முகாம்" காலை 8:00 மணிக்கு ஆரம்பம் ஆகும் என்பதை அறியத்தருகிறோம்.

✍ அனைத்து சகோதர சகோதரிகளும் இந்த செய்தியை தங்களின் குடும்பத்தினர்களுக்கும் தங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் எடுத்து கூறி அவர்களை உயிர்காக்கும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் செய்து நன்மைகளை அள்ளிச்செல்லுமாறு உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.


To mark the Qatar National Day - 2017
QITC MASS BLOOD DONATION CAMPAIGN

Date: 08/12/2017
Timing: 8:00 am to 4:00 pm for Registration
Venue: QITC- MARKAS, Behind Ansar Gallery, THUMAMA

Dear Brothers and Sisters,

Peace Be Up On You.

You are Cordially Invited to attend our Life Saving Program "QITC-Mass Blood Donation Campaign".

Give blood Save Lifes.


குறிப்பு:

⛑ Registration: காலை 8:00 am முதல் மதியம் 4:00 pm மணி வரை மட்டும்

🍲 காலை சிற்றுண்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

🍽 மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

🚨 இரத்தம் கொடுக்க ஏதுவாக 6 பெட்களை கொண்ட வசதி மர்கஸ் உள்ளரங்கில் ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது

🚌 வாகன வசதி செய்யப்பட்டுள்ளதுதொடர்புக்கு: 5585 6697, 66205277

🚺 பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது

🌔 Location Map: https://goo.gl/99yyFy


இப்படிக்கு

QITC- நிர்வாகம்
தொடர்புக்கு: 66316247, 55532718, 66579598, 44315863
தேதி: 29-11-2017


பிற மொழிகளில் இரத்ததான முகாம் நோட்டீஸ்:


வியாழன், 16 நவம்பர், 2017

QITC யின் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி அழைப்பிதழ் 17/11/2017


QITC யின் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்


நாள்: வெள்ளிக்கிழமை 17/11/2017

நேரம்: சரியாக மாலை 6:00 மணி முதல் இரவு 9:00 மணிவரை

இடம்: QITC- மர்கஸ் - துமாமா பகுதி


Location Map: https://goo.gl/99yyFy


கண்ணியத்திற்குறிய சகோதர சகோதரிகளே!

இன்ஷா அல்லாஹ்!

17/11/2017 வெள்ளிக்கிழமை அன்று மாலை இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

பதில் அளிப்பவர்:

சகோதரர்: முஹம்மத் தமீம் MISc
(மண்டல துணைச் செயலாளர்)

அனைத்து சகோதர சகோதரிகளும் இஸ்லாத்தை தவறாக புரிந்துள்ள பிறமத சகோதர சகோதரிகளை இஸ்லாம் பற்றிய சந்தேகங்களுக்கான விளக்கங்களை அறிந்துகொள்ளச் செய்ய அழைத்து வருமாறு உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.


குறிப்பு:

☎ மேலதிக விவரங்களுக்கு 7478 7072 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.

🚺 பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது.

🍲 இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

🚎 வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது - 6620 5277, 7721 0605, 5585 6697

✉ பிறமத சகோதரர்களுக்கான அழைப்பிதழ்கள் QITC மர்கஸில் தயாராக உள்ளது.


இப்படிக்கு,
QITC- நிர்வாகம்
தொடர்புக்கு: 6631 6247, 6657 9598, 4431 5863
11/11/2017

வியாழன், 17 ஆகஸ்ட், 2017

பிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)

ஞாயிறு, 30 ஜூலை, 2017

28/07/17 அன்று நடைபெற்ற QITC யின் மாபெரும் இரத்த தான முகாம்


இந்திய சுதந்திர தினத்தையொட்டி, கத்தர் இந்திய தவ்ஹீத் மையமும் (QITC), ஹமத் மெடிக்கல் கார்பொரேஷனும் (HMC) இணைந்து மாபெரும் இரத்த தான முகாமை 28 ஜூலை 2017 வெள்ளிக்கிழமை அன்று நடத்தியது.

அல்லாஹுவின் மாபெரும் கிருபையால், இந்த இரத்த தான முகாமில் பெருந்திரளான கத்தர் வாழ் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள். காலை 8:00 மணிக்கே சனையா, அல்கோர், லேபர் சிட்டி சகோதரர்கள் வரிசையாக வருகை தந்து பெயர் பதிவு செய்தனர். கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தின் 21 கிளைகளிலிருந்து 250க்கும் மேற்பட்ட சகோதரர்கள் இம்முகாமில் ஆர்வத்துடன் பங்குக்கொண்டார்கள்.

உடல் ஆரோக்கியம் மற்றும் உடற் பரிசோதனை நடந்த பிறகு 130 பேர் குருதி கொடையளிக்க தகுதி பெற்று இரத்தம் கொடுத்தார்கள்.

வருகை பதிவு, ஒழுங்கு படுத்தல், உணவு தயாரித்து பரிமாறுதல் என அனைத்து வேலைகளையும், கடும் வெயிலுடன், அதிக புழுக்கத்தையும் பொருட்படுத்தாமல் செயல்வீரர்கள் குழு சிறப்பாக செய்தார்கள்.

எல்லா புகழும் அல்லாஹ்விற்கே

மக்களுக்கு நன்றி செலுத்தாதவன் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தியவனாக ஆக மாட்டான் என்ற அடிப்படையில் இம்முகாம் சிறப்பாக நடைபெற

🔻 குருதிக் கொடை செய்து ஒத்துழைப்பு நல்கிய சகோதரர்களுக்கும்,

🔻 கிளைப் பொறுப்பாளர்கள்,

🔻 கொள்கை சொந்தங்கள்,

🔻 உணவுக் குழு, வாகனக் குழு, செயல்வீரர்கள்

🔻 மற்றும் கலந்துகொண்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும்

எங்களின் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

JAZAKALLAHU KHAIRA

இம் மகத்தான உயிர்காக்கும் பணியில் நம் அனைவரையும் பங்கு கொள்ளச்செய்து, நற்கூலிகளை வாரிவழங்கி நம்பாவங்களை மன்னிக்க காத்திருக்குக்கும் அகில உலக அதிபதி அல்லாஹ்விற்கு நன்றி கூறி அனைத்து புகழும் அவனுக்கே உரித்தாக்குகிறோம்.

அல்ஹம்துலில்லாஹ்.

 

 

 

புதன், 26 ஜூலை, 2017

இந்திய 71 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு QITC யின் மாபெரும் இரத்த தான முகாம் - 28/07/2017



இந்தியாவின் 71 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு

QITC யின் மாபெரும் இரத்த தான முகாம்




நாள்: 28/07/2017, வெள்ளிக்கிழமை

நேரம்: காலை 8:00 மணி முதல் மதியம் 4:00 மணி வரை

இடம்: QITC மர்கஸ்



கண்ணியத்திற்குரிய சகோதர சகோதரிகளே!

✍ கடந்த காலங்களில் இரத்த தான நிகழ்ச்சியில் இரத்த தானம் செய்யவருபவர்களுக்கு ஏற்பட்ட தாமதத்தை இந்த முறை தவிர்க்கும் விதமாக இன்ஷா அல்லாஹ்! வெள்ளிக்கிழமை 28/07/2017 அன்று கத்தர் மண்டல "QITC யின் மாபெரும் இரத்த தான முகாம்" காலை 8:00 மணிக்கு ஆரம்பம் ஆகும் என்பதை அறியத்தருகிறோம்.

✍ அனைத்து சகோதர சகோதரிகளும் இந்த செய்தியை தங்களின் குடும்பத்தினர்களுக்கும் தங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் எடுத்துக் கூறி அவர்களை உயிர்காக்கும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் செய்து நன்மைகளை அள்ளிச்செல்லுமாறு உங்களை அன்போடு அழைக்கிறோம்.



குறிப்பு:

Registration: காலை 8:00 am முதல் மதியம் 4:00 pm மணி வரை மட்டும்

🍲 காலை சிற்றுண்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

🍽 மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

🚨 இரத்தம் கொடுக்க ஏதுவாக 6 பெட்களை கொண்ட வசதியை மர்கஸ் உள்ளரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

🚌 வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. தொடர்புக்கு: 55856697, 66205277

🚺 பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது

🌔 Location: https://goo.gl/99yyFy



📌 அன்று இரவு 8:00 மணிக்கு பெண்கள் பயானும் நடைபெறும் என்பதை மறந்து விடவேண்டாம்.

📌 இதை அனைவருக்கும் ஃபார்வேர்ட் செய்யவும்.

📌 பிற மொழிகளில் நோட்டீஸ்: இந்தி | மலையாளம் | சிங்களம் | உருது



இப்படிக்கு,
QITC- நிர்வாகம்
தொடர்புக்கு: 66316247, 55532718, 66579598, 44315863
தேதி: 25-07-2017

புதன், 21 ஜூன், 2017

QITC மர்கஸில் 2017 ரமலானில் மௌலவிகள் ஆற்றிய உரைகள் (MP3 ஆடியோ)



நீதியின் சிகரம் நபிகள் நாயகம் (ஸல்)
உரை: சகோ. சலீம் MISc.

Play


மார்க்கமா உறவா
உரை: சகோ. சலீம் MISc.

Play (பாகம்-1) Play (பாகம்-2) Play (பாகம்-3)


இறை நேசத்தை பெறுவதற்கான வழிகள்
உரை: சகோ. சலீம் MISc.

Play (பாகம்-1) Play (பாகம்-2)


நபிகளார் சந்தித்த ரமளான்
உரை: சகோ. இஸ்மாயில் MISc.

Play (பாகம்-1) Play (பாகம்-2)


குழந்தை வளர்ப்பு
உரை: சகோ. முஹம்மது தமீம் MISc.

Play


நோன்பை பாழாக்கும் பொய்
உரை: சகோ. முஹம்மது அலி MISc.

Play


உறவுகளை பேணுதல்
உரை: சகோ. இஸ்மாயில் MISc.

Play


இறை நெருக்கத்தை பெறுவோம்
உரை: சகோ. அப்துஸ் ஸமது மதனி

Play (பாகம்-1) Play (பாகம்-2)


புறம் பேசாதீர்
உரை: சகோ. முஹம்மது அலி MISc.

Play


கோபம்
உரை: சகோ. முஹம்மது அலி MISc.

Play (பாகம் -1) Play (பாகம் -2)


சைத்தானின் ஊசலாட்டம்
உரை: சகோ. அன்சார் மஜீதி

Play


அறிவும் அமலும்
உரை: சகோ. முஹம்மது தமீம் MISc.

Play


நபித்தோழர்கள் வாழ்வினில்
உரை: சகோ. மனாஸ் பயானி

Play (பாகம்-1) Play (பாகம்-2)


தொடரட்டும் இறைப்பணிகள்
உரை: சகோ. மனாஸ் பயானி

Play


பிரார்த்தனை
உரை: சகோ. சதக்கத்துல்லாஹ் ரஹ்மானி

Play


நற்செயல்கள்
உரை: சகோ. சதக்கத்துல்லாஹ் ரஹ்மானி

Play (பாகம்-1) Play (பாகம்-2)


புதன், 17 மே, 2017

நினைவில் நிறுத்த சில நபிமொழிகள் (அரபி உச்சரிப்புடன்)



بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ


عن أنس بن مالك الأنصاري رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال: (مَنْ رَغِبَ عَنْ سُنَّتِي فَلَيْسَ مِنّيِ) رواه البخاري ومسلم

1. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் என்னுடைய வழிமுறையை புறக்கணிக்கிறாரோ அவர் என்னைச் சார்ந்தவர் இல்லை.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி), நூல்: புகாரி

Play


عن عثمان بن عفان رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: (خَيْرُكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَهُ) رواه البخاري

2. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தானும் குர்ஆனை கற்று, பிறருக்கும் கற்றுக் கொடுப்பவரே உங்களில் சிறந்தவர்.

அறிவிப்பவர்: உஸ்மான் பின் அப்பான் (ரலி), நூல்: புகாரி

Play


عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: (مَنْ لَا َيَرْحَمُ لاَ يُرْحَمُ) رواه البخاري ومسلم

3. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் பிறருக்கு இரக்கம் காட்ட வில்லையோ அவருக்கு அல்லாஹ் இரக்கம் காட்ட மாட்டான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி, முஸ்லிம்

Play


عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: (مَنْ صَلَّى عَلَيَّ صَلاةً واحِدَةً صَلَّى اللهُ عَلَيْهِ عَشْراً) رواه مسلم

4. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என்மீது யார் ஒருமுறை ஸலவாத் சொல்கிறாரோ அதன் காரணத்தால் அவருக்குப் பத்து முறை அல்லாஹ் அருள்புரிகின்றான்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி), நூல்: முஸ்லிம் 628

Play


عن أنس رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال: (لاَ يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى أَكُوْنَ أَحَبُّ إِلَيْهِ مِنْ وَالِدِهِ وَوَلَدِهِ والنَّاسِ أَجْمَعِيْنَ) رواه البخاري ومسلم

5. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் யாரும் தன்னுடைய பெற்றோரை விட, தன்னுடைய பிள்ளைகளை விட, இந்த உலக மக்கள் அனைவரையும் விட என்னை நேசிக்காத வரை இறைநம்பிக்கை கொண்டவராக ஆக முடியாது.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி, முஸ்லிம்

Play


عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: (مَنْ سَلَكَ طَرِيْقاً يَلْتَمِسُ فِيْهِ عِلْمًاً سَهَّلَ اللهُ لَهُ بِهِ طَرِيْقاً إلَى الْجَنَّةِ)  رواه مسلم

6. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் கல்வியின் வழியைத் தேடிச்செல்கிறாரோ அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தின் வழியை இலேசாக்குகிறான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்

Play


عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَيْسَ مِنْ أُمَّتِي مَنْ لَمْ يُجِلَّ كَبِيرَنَا وَيَرْحَمْ صَغِيرَنَا

7. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் நம்மில் பெரியவருக்கு மரியாதை செய்யாமலும், சிறியவருக்கு இரக்கம் காட்டாமலும் இருக்கிறார்களோ அவர்கள் எனது சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் அல்லர்.

அறிவிப்பவர்: உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி), நூல்: அஹ்மத் 21693

Play


عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ كَانَ يَقُولُ شَرُّ الطَّعَامِ طَعَامُ الْوَلِيمَةِ يُدْعَى لَهَا الْأَغْنِيَاءُ وَيُتْرَكُ الْفُقَرَاءُ

8. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: செல்வந்தர்கள் மட்டும் அழைக்கப்பட்டு ஏழைகள் புறக்கணிக்கப்படும் வலீமா உணவு, உணவுகளில் மிகவும் கெட்டதாகும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 5177

Play


عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَيْسَ الْغِنَى عَنْ كَثْرَةِ الْعَرَضِ وَلَكِنَّ الْغِنَى غِنَى النَّفْسِ

9. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: வசதி வாய்ப்புகள் அதிகமாக இருப்பது செல்வம் கிடையாது. போதுமென்ற மனம்தான் செல்வமாகும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 6446

Play


الْبَرَاءِ بْنِ عَازِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ أَمَرَنَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِاتِّبَاعِ الْجَنَائِزِ وَعِيَادَةِ الْمَرِيضِ وَإِجَابَةِ الدَّاعِي وَنَصْرِ الْمَظْلُومِ وَإِبْرَارِ الْقَسَمِ وَرَدِّ السَّلَامِ وَتَشْمِيتِ الْعَاطِسِ

10. நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஏழு விஷயங்களை (செய்வதற்குக்) கட்டளையிட்டார்கள். ஜனாசாவைப் பின்தொடருமாறும், நோயாளியை நலம் விசாரிக்குமாறும். விருந்துக்கு அழைப்பவரின் அழைப்பை ஏற்றுக்கொள்ளுமாறும், அநீதி இழைக்கப்பட்டவருக்கு உதவுமாறும், சத்தியம் செய்தவர் அதை நிறைவேற்ற உதவுமாறும், சலாமுக்குப் பதில் கூறுமாறும், தும்மியவருக்கு மறுமொழி கூறுமாறும் கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர்: பராஉ பின் ஆஸிப் (ரலி) நூல் : புகாரி 1239

Play


عَنْ أَبِي سعيد عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا يُصِيبُ الْمُسْلِمَ مِنْ نَصَبٍ وَلَا وَصَبٍ وَلَا هَمٍّ وَلَا حُزْنٍ وَلَا أَذًى وَلَا غَمٍّ حَتَّى الشَّوْكَةِ يُشَاكُهَا إِلَّا كَفَّرَ اللَّهُ بِهَا مِنْ خَطَايَاهُ

11. "ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உட்பட அவருக்கு நேரிடும் துன்பம், நோய், துக்கம், கவலை, தொல்லை, மனவேதனை ஆகிய எதுவாயினும் அதற்குப் பதிலாக அவருடைய பாவங்களிலிருந்து சிலவற்றை அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி), நூல்: புகாரி 5641

Play


عَنْ سَهْلٍ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا وَكَافِلُ الْيَتِيمِ فِي الْجَنَّةِ هَكَذَا وَأَشَارَ بِالسَّبَّابَةِ وَالْوُسْطَى وَفَرَّجَ بَيْنَهُمَا شَيْئًا

12. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”நானும் அனாதையின் காப்பாளரும் சொர்க்கத்தில் இப்படி இருப்போம்” என்று கூறியபடி தம் சுட்டு விரலையும், நடு விரலையும் அந்த இரண்டுக்குமிடையே சற்று இடைவெளி விட்டு சைகை செய்தார்கள்.

அறிவிப்பவர்: ஸஹ்ல் (ரலி), நூல்: புகாரி 5304

Play


عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اجْتَنِبُوا السَّبْعَ الْمُوبِقَاتِ قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَمَا هُنَّ قَالَ الشِّرْكُ بِاللَّهِ وَالسِّحْرُ وَقَتْلُ النَّفْسِ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ وَأَكْلُ الرِّبَا وَأَكْلُ مَالِ الْيَتِيمِ وَالتَّوَلِّي يَوْمَ الزَّحْفِ وَقَذْفُ الْمُحْصَنَاتِ الْمُؤْمِنَاتِ الْغَافِلَاتِ

13. அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களைத் தவிருங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள் அல்லாஹ்வின் தூதரே! அவை எவை? என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள், அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதும், சூனியம் செய்வதும், நியாயமின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரைக் கொல்வதும், வட்டி உண்பதும், அனாதைகளின் செல்வத்தை உண்பதும், போரின் போது புறமுதுகிட்டு ஓடுவதும், அப்பாவிகளான இறை நம்பிக்கை கொண்ட கற்புள்ள பெண்களின் மீது அவதூறு கூறுவதும் தான் (அந்தப் பெரும் பாவங்கள்) என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 2766

Play


حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي بُرْدَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ عَلَى كُلِّ مُسْلِمٍ صَدَقَةٌ فَقَالُوا يَا نَبِيَّ اللَّهِ فَمَنْ لَمْ يَجِدْ قَالَ يَعْمَلُ بِيَدِهِ فَيَنْفَعُ نَفْسَهُ وَيَتَصَدَّقُ قَالُوا فَإِنْ لَمْ يَجِدْ قَالَ يُعِينُ ذَا الْحَاجَةِ الْمَلْهُوفَ قَالُوا فَإِنْ لَمْ يَجِدْ قَالَ فَلْيَعْمَلْ بِالْمَعْرُوفِ وَلْيُمْسِكْ عَنْ الشَّرِّ فَإِنَّهَا لَهُ صَدَقَةٌ

14. அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ”தர்மம் செய்வது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமையாகும்” எனக் கூறியதும், தோழர்கள், ”அல்லாஹ்வின் தூதரே! (தர்மம் செய்வதற்கான பொருள்) ஏதும் கிடைக்காவிட்டால்...?” எனக் கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ” ஏதேனும் கைத்தொழில் செய்து, தாமும் அதன் மூலம் பலனடைந்து, தர்மமும் செய்ய வேண்டும்” என்றார்கள். தோழர்கள், ”அதுவும் முடியவில்லையாயின்” எனக் கேட்டதற்கு, ”தேவையுடைய, உதவி தேடி நிற்கும் துயருற்றவர்களுக்கு உதவ வேண்டும்” என்று பதிலளித்தார்கள். தோழர்கள் ”அதுவும் இயலவில்லையாயின்” என்றதும் ”நற்காரியத்தைச் செய்து தீமையிலிருந்து தம்மைத் தடுத்துக் கொள்ள வேண்டும். இதுவே அவர் செய்யும் தர்மமாகும்” எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி), நூல்: புகாரி 1445

Play


عن سَهْلُ بْنُ حُنَيْفٍ وَقَيْسُ بْنُ سَعْدٍ قَاعِدَيْنِ بِالْقَادِسِيَّةِ فَمَرُّوا عَلَيْهِمَا بِجَنَازَةٍ فَقَامَا فَقِيلَ لَهُمَا إِنَّهَا مِنْ أَهْلِ الْأَرْضِ أَيْ مِنْ أَهْلِ الذِّمَّةِ فَقَالَا إِنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّتْ بِهِ جِنَازَةٌ فَقَامَ فَقِيلَ لَهُ إِنَّهَا جِنَازَةُ يَهُودِيٍّ فَقَالَ أَلَيْسَتْ نَفْسًا

15. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பிரேதம் ஒன்று கடந்து சென்றது. உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுந்து நின்றனர். 'இது யூதருடைய பிரேதம்' என்று அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'அதுவும் ஓர் உயிர் அல்லவா?' என்று கேட்டனர்.

நூல்: புகாரி 1313

Play