சனி, 11 செப்டம்பர், 2010

கத்தரில் ஈத் பெருநாள் கொண்டாட்டம்




கத்தரில் அல்லாஹுவினுடைய மாபெரும் கிருபையால் ஈத் பெருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது .அல் மால் எதிரில் உள்ள அலி பின் அல் முசல்மானி பள்ளியில் ஈத் பெருநாள் தொழுகை மற்றும் அரபியில் குத்பா உரைக்கு பின்னர் மௌலவி அப்துல் கரீம் MISc (பேராசிரியர், இஸ்லாமியக் கல்லூரி, மேலப்பாளையம்) அவர்களின் சிறப்புரை இடம்பெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மையத்தின் தலைவர் சகோதரர் ஷபீர் அவர்கள் தலைமை வகித்தார்கள் . மூத்த தலைவர் சகோதரர் லியாகத் அலி அவர்கள் துவக்கவுரை நிகழ்த்தினார்கள். மையத்தின் செயலாளர் சகோதரர் மஸ்ஊத் அவர்கள் நன்றியுரையாற்றினார்கள்.

கத்தர் வாழ் ஐநூறுக்கும் மேற்பட்ட சகோதர சகோதிரிகள் ஈகை திருநாள் சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு ஒருவர்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். இந்நிகழ்ச்சியின் இறுதியில் அனைவருக்கும் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.


"நீங்கள்,மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத்தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்!" - அல்குரான் 3:110

திங்கள், 6 செப்டம்பர், 2010

ஈத் பெருநாள் சகோதர சங்கமம்



அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )
அன்பிற்குரிய கத்தர் வாழ் முஸ்லிம் சகோதர சகோதரிகளே !
இன்ஷா அல்லாஹ் , ஈத் பெருநாள் அன்று
" ஓர் சகோதர சங்கமம்" .
பெருநாள் தொழுகை மற்றும் குத்பா உரைக்கு பின்னர் , தமிழில் சிறப்பு சொற்பொழிவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .
இடம் : அலி பின் அலி முஸ்ஸல்மாணி மஸ்ஜித்
( மால் ரௌண்டஅபௌட் எதிரில், அல் அஹ்லி ஸ்போர்ட்ஸ் கிளப் அருகில் )
உரை : சகோதரர் அப்துல் கரீம் MISC
தமிழறிந்த இந்திய இலங்கை சகோதர சகோதரிகள் தாங்களும் தங்கள் உறவுகளுடனும் ,நண்பர்களுடனும் ஈத் பெருநாள் கொண்டாட்டத்தை சிறப்புடன் கொண்டாட வாரீர் வாரீர் என அன்புடன் அழைக்கிறோம்.
-----------------------------------------------------------------------
"நீங்கள்,மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத்தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்!" அல்குரான் 3:110

ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

QITC இஃப்தார் 2010



கத்தரில் சென்ற வெள்ளிக்கிழமை 03-09-2010 அன்று மாபெரும் இப்தார் விருந்து மற்றும் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது . அல்லாஹுவினுடைய மாபெரும் கிருபையால் கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் ஆறாவது ஆண்டாக இவ்வருட ரமலானில் மாபெரும் இப்தார் விருந்தை நடத்தியது . இந்நிகழ்ச்சி பின் மெஹ்மூத் பகுதியில் அமைந்துள்ள ,ஹம்ஜா பின் அப்துல் முத்தலிப் பள்ளிக் கூட உள்விளையாட்டு அரங்கில் ஏற்பாடு செய்யபட்டிருந்தது . மாலை 5:00 மணிக்கு ,சகோதரர் அப்துஸ் சமத் மதனீ அவர்களின் துவக்க உரையுடன் , சகோதரர் அப்துல் கரீம் MISC அவர்கள் " குர் ஆன் கூறும் அறிவியல் உண்மைகள் " என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மையத்தின் தலைவர் சகோதரர் ஷபீர் அவர்கள் , ரமலானில் மையத்தின் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சிகளை தொகுத்து கூறினார். தமிழறிந்த சகோதரர்கள் ஆர்வத்துடன் இஸ்லாத்தையும் அதன் போதனைகளையும் அறிய முற்படவேண்டும் எனவும் மர்கசில் நடைபெறும் வாரந்திர மாதாந்திர பயான்களுக்கு வருகை தரவேண்டும் எனவும் கூறினார் . பின்னர் வருகை தந்த அனைவருக்கும் இப்தார் பதார்த்தங்கள் , நோன்பு கஞ்சி பரிமாறப்பட்டது . நோன்பு திறந்தவுடன் மக்ரிப் தொழுகை நிறைவேற்றபட்டது . பின்னர் அனைவர்க்கும் சுட சுட உணவு விருந்தளிக்கப்பட்டது . அரங்க ஏற்பாடுகள் துணை செயலாளர் சகோதரர் அப்துல் கபூர் அவர்களின் தலைமையில் சகோதர் கலீல் கிப்ரான் , சகோதர் பக்ரு , சகோதர் பாஷா ஆகியோர் அடங்கிய குழு சிறப்புடன் அமைத்திருந்தது . உணவு ஏற்பாடுகளை துணை செயலாளர் ஹாஜி முஹம்மது அவர்கள் தலைமையில் , சகோதரர் அபுதாகிர் , சகோதரர் ஜாபர் ,சகோதரர் அப்துல் ஜலீல் ஆகியோர் அடங்கிய குழு சிறப்புடன் செய்தது. சகோதரர் அஜ்மீர் அலி ,சகோதரர் அப்துல் காதர் அடங்கிய விளம்பர குழு , பல் வேறு தொழிலாளர் கேம்ப்களில் நிகழ்ச்சி பற்றி விளம்பரங்களை கொண்டு சேர்த்து அழைப்பு விடுத்தனர். தோஹாவின் பல் வேறு பகுதிகளிலிருந்தும் எண்ணூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் , பெண்கள் மற்றும் குழந்தைகள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயனடைந்தார்கள். அல் ஹம்துலில்லாஹ் !



"நீங்கள்,மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத்தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்!"அல்குரான் 3:110

வெள்ளி, 3 செப்டம்பர், 2010

சிறப்பு மார்க்க சொற்பொழிவு மற்றும் மாபெரும் இப்தார் விருந்து நிகழ்ச்சி.

அன்பான நினைவூட்டல் !




அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் சகோதரிகளே !
இன்று மாலை 03-09-2010 , இன்ஷா அல்லாஹ் கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் நடத்தும் சிறப்பு மார்க்க சொற்பொழிவு மற்றும் மாபெரும் இப்தார் விருந்து நிகழ்ச்சி.
நேரம் : மாலை 5:00 மணிக்கு
இடம் : ஹம்சா பின் அப்துல் முத்தலீப் ஆண்கள் பள்ளி கூட உள்ளரங்கம் (பின் மஹ்மூத் )
( சென்டர் ரவுண்டு அபௌட் வழியாக பின் மெஹ்மூத் செல்லும் வழி )
உரை : அல்குர்ஆன் கூறும் அறிவியல் உண்மை
பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் தனி இடவசதியுண்டு.
இந்நிகழ்ச்சியில் தவறாமல் கலந்துகொண்டு பயனடைந்து ஈருலகிலும் வெற்றியாளர்களாக திகழ்வோமாக!
________________________________________
உங்களுக்கு தேவையான திரு குரான் தமிழ் மொழியாக்கம் , தவ்ஹீத் நூல்கள், ஏராளமான தலைப்பிலான மார்க்க சொற்பொழிவு குறுந்தகடுகள் , ஹதீத் கிரந்தங்கள் ஆகிய அனைத்தும் பெற்றுக்கொள்ள தொடர்பு கொள்வீர் : தொலைபேசி : 44315863, e-mail :qitcdoha@gmail.com. மர்கஸ் முகவரி : வில்லா எண் : 12, சூக் கராஜ் பின் புறம் ,நஜ்மா போஸ்ட் ஆபீஸ் அருகில் , கார்டன் ரெஸ்டாரண்ட் பின் புற சாலை . நஜ்மா ,தோஹா கத்தர் .



"நீங்கள்,மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத்தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்!" அல்குரான் 3:110

வியாழன், 2 செப்டம்பர், 2010

QITC அல்கோர் சகர் நேர சிறப்பு நிகழ்ச்சி 26-08-2010


கடந்த 26-08-2010 வியாழக்கிழமை இரவு QITC யின் அல்கோர் கிளை , சகர் நேர சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியை நடத்தியது. இச்சிறப்பு நிகழ்ச்சிக்கு அல்கோர் கிளை ஒருங்கிணைப்பாளர் சகோதரர் தேவியாக்குறிச்சி ஜியாவுதீன் அவர்கள் தலைமை வகித்தார்கள் . நிகழ்ச்சியின் துவக்க உரையாக சகோதர் மௌலவி லாயிக் அவர்கள் "கொடை கொடுப்போம் விடை கொடுப்போம் " என்ற தலைப்பில் உரையாற்றினார். அடுத்ததாக சகோதரர் மௌலவி முஹம்மது அலி அவர்கள் "அன்சாரிகளின் அழகிய வரலாறு " என்ற தலைப்பில் உரையாற்றினார் . மூன்றாவது உரையாக "நபிகளாரின் இறுதி எச்சரிக்கை " என்ற தலைப்பில் சகோதரர் மௌலவி அப்துஸ் சமத் மதனீ அவர்கள் உரையாற்றினார்கள் . இறுதியாக தமிழகத்திலிருந்து வருகை தந்துள்ள சிறப்பு விருந்தினர் சகோதரர் அப்துல் கரீம் MISC அவர்கள் "பத்ரு போர் தரும் படிப்பினை " என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் சகர் உணவு பரிமாறப்பட்டது . முன்னூறுக்கும் மேற்பட்ட அல்கோர் வாழ் சகோதரர் சகோதரிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர் . இரவு பத்து மணிக்கு தொடங்கிய இச்சிறப்பு நிகழ்ச்சி சஹர் நேரம் இரண்டுமணி வரை உற்சாகத்துடன் நடைபெற்றது . இறுதியாக பொருளாளர் செய்யத் இப்ராஹீம் அவர்களின் நன்றியுரையுடன் நிறைவேறியது அல்ஹம்துலில்லாஹ் !

"நீங்கள்,மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத்தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்!"அல்குரான் 3:110

புதன், 1 செப்டம்பர், 2010

QITC UMRA 2010



"நீங்கள்,மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத்தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்!"அல்குரான் 3:110