ஞாயிறு, 30 ஜூலை, 2017

28/07/17 அன்று நடைபெற்ற QITC யின் மாபெரும் இரத்த தான முகாம்


இந்திய சுதந்திர தினத்தையொட்டி, கத்தர் இந்திய தவ்ஹீத் மையமும் (QITC), ஹமத் மெடிக்கல் கார்பொரேஷனும் (HMC) இணைந்து மாபெரும் இரத்த தான முகாமை 28 ஜூலை 2017 வெள்ளிக்கிழமை அன்று நடத்தியது.

அல்லாஹுவின் மாபெரும் கிருபையால், இந்த இரத்த தான முகாமில் பெருந்திரளான கத்தர் வாழ் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள். காலை 8:00 மணிக்கே சனையா, அல்கோர், லேபர் சிட்டி சகோதரர்கள் வரிசையாக வருகை தந்து பெயர் பதிவு செய்தனர். கத்தர் இந்திய தவ்ஹீத் மையத்தின் 21 கிளைகளிலிருந்து 250க்கும் மேற்பட்ட சகோதரர்கள் இம்முகாமில் ஆர்வத்துடன் பங்குக்கொண்டார்கள்.

உடல் ஆரோக்கியம் மற்றும் உடற் பரிசோதனை நடந்த பிறகு 130 பேர் குருதி கொடையளிக்க தகுதி பெற்று இரத்தம் கொடுத்தார்கள்.

வருகை பதிவு, ஒழுங்கு படுத்தல், உணவு தயாரித்து பரிமாறுதல் என அனைத்து வேலைகளையும், கடும் வெயிலுடன், அதிக புழுக்கத்தையும் பொருட்படுத்தாமல் செயல்வீரர்கள் குழு சிறப்பாக செய்தார்கள்.

எல்லா புகழும் அல்லாஹ்விற்கே

மக்களுக்கு நன்றி செலுத்தாதவன் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தியவனாக ஆக மாட்டான் என்ற அடிப்படையில் இம்முகாம் சிறப்பாக நடைபெற

🔻 குருதிக் கொடை செய்து ஒத்துழைப்பு நல்கிய சகோதரர்களுக்கும்,

🔻 கிளைப் பொறுப்பாளர்கள்,

🔻 கொள்கை சொந்தங்கள்,

🔻 உணவுக் குழு, வாகனக் குழு, செயல்வீரர்கள்

🔻 மற்றும் கலந்துகொண்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும்

எங்களின் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

JAZAKALLAHU KHAIRA

இம் மகத்தான உயிர்காக்கும் பணியில் நம் அனைவரையும் பங்கு கொள்ளச்செய்து, நற்கூலிகளை வாரிவழங்கி நம்பாவங்களை மன்னிக்க காத்திருக்குக்கும் அகில உலக அதிபதி அல்லாஹ்விற்கு நன்றி கூறி அனைத்து புகழும் அவனுக்கே உரித்தாக்குகிறோம்.

அல்ஹம்துலில்லாஹ்.