ஞாயிறு, 6 அக்டோபர், 2013

04/10/2013 சவூதி மர்கஸில் நடைபெற்ற QITC யின் சிறப்பு நிகழ்ச்சி


அல்லாஹுவின் பெருங்கிருபையால் 04/10/2013 அன்று மாலை வெள்ளிக்கிழமை 6:00 மணியளவில் ஹஜ் பெரு நாள் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. கத்தர் மண்டலத்தலைவர் சகோதரர் மஸ் ஊத் அவர்கள் வருகை தந்திருந்த அனைவரையும் வரவேற்று, சகோதரர் அப்துஸ் ஸமது மதனி அவர்களை தலைமையேற்று நடத்தித்தருமாரு கேட்டுக்கொண்டார். 

முதலாவதாக "குர்பானியின் சட்டங்கள்" என்ற தலைப்பில் சகோதரர் அப்துஸ் ஸமது மதனி அவர்கள் உரையாற்றினார்கள். அடுத்தாக மவ்லவி முஹம்மது அலி அவர்கள் "பகுதறிவுவாதிகள் யார்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

நிகழ்ச்சியின் அடுத்தாக, கத்தர் மண்டலம் மாணவ மாணவியர்களுக்காக "இஸ்லாமிய அடிப்படை கல்வி" என்ற ஆறு மாத பயிற்சி வகுப்பை நடத்தியது. இதில் தேர்வெழுதி தேர்ச்சிப்பெற்ற 28 மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுப்பொருட்களை, தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில பொருளாளர் சகோதரர் எம்.ஐ.சுலைமான் அவர்கள் வழங்கினார்கள்.

பின்னர், "மண்ணறை வாழ்க்கை" என்ற தலைப்பில் சகோதரர் எம்.ஐ.சுலைமான் அவர்கள் சிறப்பு சொற்பொழிவாற்றினார்கள். இறுதியாக தாயி ஒருங்கிணைப்பாளர் சகோதரர் அன்ஸார் அவர்கள் நன்றியுரையாற்றினார்கள்.

இதில் நானூற்றுக்கும் அதிகமான ஆண்கள், பெண்கள், கலந்துக்கொண்டு பயனடைந்தார்கள். கத்தர் மண்டலம் உணவுக்குழு வருகைதந்திருந்த அனைவருக்கும் உணவை தாயரித்து வழங்கியது. அல்ஹம்துலில்லாஹ்...








مركز التوحيد الهندي بقطر
கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்,
QATAR INDIAN THOWHEED CENTRE[QITC],
POST BOX NO: 31579,
DOHA-QATAR.
Tel/Fax:00974 - 44315863
Vodafone: 70138460
E-mail: qitcdoha@gmail.com
Website : http://www.qatartntj.com/