திங்கள், 7 அக்டோபர், 2013

"இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்" சிறப்பு நிகழ்ச்சி - 11/10/2013

 


"இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்"
மற்றும்
"ஹஜ்ஜுப் பெருநாள் மலர்" வெளியிடல்
சிறப்பு நிகழ்ச்சி


நாள் : 11/10/2013 மாலை 6 மணிக்கு
இடம் : QITC மர்கஸ்



கண்ணியத்திற்குரிய சகோதர சகோதரிகளே !

"இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்" மற்றும் பிறமத சகோதரர்கள் கட்டுரைப்போட்டியில் வெற்றிபெற்ற கட்டுரைகள் மலராக வெளியிடல் நிகழ்ச்சி வரும் 11/10/2013 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது.

அனைத்து சகோதர சகோதரிகளும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு தங்களை கேட்டுக்கொள்கிறோம்.

மற்றும் இந்த தகவலை நமது தொப்புள் கொடி உறவுகளான பிற மத சகோதர சகோதரிகளுக்கு விரைவாக எத்திவைக்கும் படி தங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம். அவர்களை இந்நிகழ்ச்சிக்கு அழைத்து வரவும் மற்றும் இந்த செய்தியை மற்றவர்களுக்கும் அனுப்பி வைக்கவும் மறந்து விடவேண்டாம் !


பதிலளிப்பவர் :

பேராசிரியர் M .I சுலைமான்

மாநில பொருளாளர் - TNTJ




கண்ணியத்திற்குரிய பிற மத சகோதர சகோதரிகளே !

நாம் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நல்லிணக்கத்துடன் வாழ மற்றவர்களுடைய மதரீதியான கொள்கை கோட்பாடுகளை தெரிந்து வைத்துக்கொள்வது மிக இன்றியமையாததாக உள்ளது .

அதன் அடிப்படையில் கடந்த சில மாதங்களுக்கு முன் "இஸ்லாம் என் பார்வையில்" என்ற தலைப்பில் கட்டுரைப்போட்டி ஒன்றை நாம் அறிவித்திருந்தோம். அதற்கு பிறமத சகோதரர்களிடமிருந்து 15க்கும் மேற்பட்ட கட்டுரைகள் வந்து அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது என்பது தாங்கள் அறிந்த ஒன்றே.

அந்த கட்டுரைகளை QITC-யின் ஹஜ்ஜுப் பெருநாள் மலராக வெளியிடும் விதமாக "இஸ்லாம் ஓர் இனிய மாரக்கம்" நிகழ்ச்சி வரும் 11/10/2013 வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது.

எனவே இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனைத்து பிறமத சகோதர சகோதரிகளையும் QITC மர்கஸ் மனமகிழ்ந்து அழைக்கிறது.

குறிப்பு :

1. வாகனம் தேவைப்படும் சகோதரர்கள் மண்டல துணை செயலாளர்கள் ஷேய்க் அப்துல்லாஹ், காதர் மீரான் அவர்களை தொடர்பு கொள்ளவும் 66963393, 70453598

2. பெண்களுக்கு தனி இட வசதி உள்ளது

கூடுதல் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள : 55532718, 66579598