சனி, 24 டிசம்பர், 2011

QITC மர்கசில் 22-12-2011 அன்று நடைபெற்ற வாராந்திர பயான் நிகழ்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

அல்லாஹ்வின் பேரருளால்,

தோஹா QITC மர்கசில் வாராந்திர பயான் நிகழ்ச்சி 22-12-2011 வியாழன் இரவு 8:30 மணிக்கு நடைபெற்றது.

துவக்கமாக QITC அழைப்பாளர் சகோதரர் ஷாஜஹான் அவர்கள், "கிறிஸ்துமஸும் ஈஸா நபியும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

அடுத்ததாக QITC அழைப்பாளர் முஹம்மத் தமீம் MISc அவர்கள், "இஸ்லாம் கூறும் ஒழுக்கவியல்" என்ற தொடர் தலைப்பில் குழந்தை வளர்ப்பு குறித்து உரையாற்றினார்கள்.

QITC துணைச்செயலாளர் காதர் மீரான் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இந்திய, இலங்கையை சேர்ந்த தமிழ் பேசும் சகோதர சகோதரிகள் 100-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

இறுதியாக QITC துணைத்தலைவர் ஜியாவுத்தீன் அவர்கள் QITC-யின் சார்பாக 2012-க்கான காலண்டரை வெளியிட்டார்கள். இதில் தினசரி தொழுகை நேரங்களும் அரபு மாதங்களும் சேர்க்கப்பட்டுள்ளதால் அனைவரும் வாங்கி, பிறருக்கும் கொடுத்து பயனடையுமாறு கேட்டுக்கொண்டார்கள்.

மேலும், அன்றைய பயானிலிருந்து கேள்விகளும், சென்ற வாரம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களும் சொல்லப்பட்டன.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.