ஞாயிறு, 18 நவம்பர், 2012

15-11-2012 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு

அல்லாஹ்வின் பேரருளால், 

கத்தர் மண்டல மர்கஸில் [QITC] வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 15-11-2012 வியாழன் இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

துவக்கமாக மண்டல அழைப்பாளர் சகோதரர்.காதர் மீரான் அவர்கள் "மார்க்கக் கல்வியின் மகிமை" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

அடுத்ததாக மண்டல அழைப்பாளர் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் "சகிப்போம் - வாழ்வை சுகிப்போம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இறுதியாக மௌலவி.ரிழ்வான் அவர்கள் "இலங்கை முஸ்லிம்களின் வரலாறு" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

பின்பு, மண்டல தலைவர் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் அறிவிப்புகள் பல செய்து, இன்றைய பயானில் இருந்து மூன்று கேள்விகள் கேட்டு நிகழ்ச்சியை நிறைவு செய்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்திய-இலங்கையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட சகோதர- சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள். 

தர்பியா வகுப்பு

மௌலவி,முஹம்மத் தமீம்,M.I.Sc., மௌலவி,லாயிக், மௌலவி,அன்சார் மஜீதி ஆகியோர் குழந்தைகளுக்கான, 'தர்பியா வகுப்பை' நடத்தினார்கள்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

அல்ஹம்துலில்லாஹ்.