ஞாயிறு, 4 நவம்பர், 2012

29-10-2012 "கத்தர் மண்டல த'அவாக்குழு கூட்டம்"

அல்லாஹ்வின் பேரருளால்,  

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா'அத்-கத்தர் மண்டல மர்கசில் [QITC], "கத்தர் மண்டல த'அவாக்குழு கூட்டம்", 29-10-2012 வெள்ளி  மாலை 7:00 மணி முதல் 10:00 மணி வரை  மண்டல தலைவர் டாக்டர். அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் த'அவாவை  விரிவு படுத்துவது, த'அவா செய்யும் போது வரும் பிரச்சனைகளை எதிர் கொள்வது, த'அவா குழு உறுப்பினர்களின் பங்களிப்பு, நேரம் தவறாமை போன்ற பல விஷயங்கள்  குறித்து விரிவாக அலசப்பட்டு, முடிவுகள் எடுக்கப்பட்டன.

இதில் தாயகத்தில் இருந்து வருகை புரிந்திருக்கும் மாநில மேலாண்மைக் குழு உறுப்பினர் சகோதரர்.முஹம்மத் அல்தாஃபி அவர்கள் உட்பட 18 உறுப்பினர்கள்  கலந்து கொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்!