சனி, 24 செப்டம்பர், 2011

தோஹா QITC மர்கசில் வாராந்திர பயான் 22-09-2011

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

இறைவனின் திருப்பெயரால்...
தோஹா QITC மர்கசில் வாராந்திர பயான் நிகழ்ச்சி 22-09-2011 வியாழன் இரவு 8:30 மணிக்கு நடைபெற்றது.

துவக்கமாக QITC அழைப்பாளர் டாக்டர். அஹ்மத் இப்ராஹிம் அவர்கள், "நபித்தோழியர் வரலாறு" என்ற தொடர் தலைப்பில் "உம்முல் ஃபதல் (ரலி)"  அவர்களைப்பற்றி உரையாற்றினார்கள்.

சவூதி மர்கஸ் அழைப்பாளர் மவ்லவி அப்துஸ்ஸமத் மதனி அவர்கள் சவூதி மர்கஸ் வேண்டுகோளின் படி "கிதாபுத் தவ்ஹீத்" நூலை அடிப்படையாகக்கொண்டு "தவ்ஹீத்" என்ற தலைப்பில் இன்ஷாஅல்லாஹ் 8 வாரங்கள் வியாழக்கிழமைகளில் உரை நிகழ்த்துவார்கள். முதல் உரையில் இந்நூலின் ஆசிரியர் இமாம் முஹம்மத் பின் அப்துல் வஹாப் அவர்களைப் பற்றியும், அன்றைய அரபுலகின் நிலையைப் பற்றியும் குறிப்பிட்டார்கள்.

இந்நூலை மறைந்த மவ்லவி அப்துல் ஜலீல் மதனி அவர்களுடன் இணைந்து மவ்லவி அப்துஸ்ஸமத் மதனி அவர்கள் தமிழில் மொழிபெயர்த்த்து குறிப்பிடத்தக்கது.

QITC துணைச்செயலாளர் காதர் மீரான் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இந்திய, இலங்கையை சேர்ந்த தமிழ் பேசும் சகோதர சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

இதே நேரம், பத்து வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கான தர்பியா வகுப்பை QITC அழைப்பாளர் மவ்லவி அன்சார் அவர்கள் நடத்தினார்கள்.

இறுதியாக அறிவிப்புகளும், அன்றைய பயானிலிருந்து கேள்விகளும், சென்ற வாரம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களும் சொல்லப்பட்டன.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்.