திங்கள், 31 டிசம்பர், 2012

28-12-2012 கத்தர் மண்டல மர்கஸில் "பெண்கள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி"

அல்லாஹுவின் அருளால், 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா'அத்-கத்தர் மண்டல மர்கஸில் [QITC-கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்] ஒவ்வொரு மாதமும் இறுதி வெள்ளிக்கிழமைகளில், பெண்களுக்கு பெண்களே நடத்தும் "பெண்கள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி", 28-12-2012 வெள்ளி அன்று மாலை 7:00 மணி முதல் 8:00 மணி வரை நடைபெற்றது.

ஆரம்பமாக,சகோதரி. அஷ்ரஃப் நிஷா அவர்கள் "திருக்குர்'ஆனின் 62-63-64 ஆகிய அத்தியாயங்களின் முக்கியத்துவம்" குறித்து உரையாற்றினார்கள்.

பின்பு, திருக்குர்'ஆனின் 62-63-64 ஆகிய அத்தியாயங்களில் இருந்து கேள்விகள் 'தேர்வாக' நடத்தப்பட்டது. இத்தேர்வை பல சகோதரிகள் ஆர்வத்துடன் எழுதினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் 35 க்கும் மேற்பட்ட சகோதரிகளும், சிறுமிகளும் கலந்து கொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.