திங்கள், 21 மே, 2012

18-05-2012 கத்தர் மண்டல மர்கஸில் அரபி இலக்கணப் பயிற்சி வகுப்பு

அல்லாஹுவின் பேரருளால்,
கத்தர் மண்டல மர்கஸில் [QITC] 18-05-2012 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6:40 மணி முதல் 7:40 மணி வரை, வாராந்திர "அரபி இலக்கணப் பயிற்சியின்" பனிரெண்டாவது வகுப்பு நடைபெற்றது.

ஸவூதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவி, அப்துஸ்ஸமத் அவர்கள் இவ்வகுப்பில் "வருங்கால வினைச்சொற்களின்" பல்வேறு வடிவங்களைக் குறித்து விரிவாக பாடம் நடத்தினார்கள்.

இதில், இந்திய - இலங்கை நாடுகளை சார்ந்த ஏராளமான சகோதர- சகோதரிகள் மற்றும் சிறார்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள். 
இன்ஷாஅல்லாஹ், இவ்வகுப்பு நான்கு வார  இடைவெளிக்குப் பிறகு, 22-06-2012 முதல் இம்மர்கஸில், மஃக்ரிப்  தொழுகையை தொடர்ந்து நடைபெறும்.

இஸ்லாத்தை ஏற்றல்
சிறப்பம்சமாகஇந்நிகழ்ச்சியின் இறுதியில் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சார்ந்த சகோதரர். சிவானந்தம்இஸ்லாத்தில் நுழைந்துரியாஸ் என மாறினார். அவருக்குமௌலவி,அப்துஸ்ஸமத் அவர்கள் 'ஏகத்துவ உறுதிமொழியைவிளக்கிக் கூறினார்கள்.

 
மேலும் அவருக்கு பின்மஹ்மூத் கிளை பொறுப்பாளர். வழுத்தூர் ஜஹீர் அஹ்மத் அவர்கள் மார்க்க விளக்க புத்தகங்களை வழங்கினார்கள்.