ஞாயிறு, 27 மே, 2012

25-05-2012 பெண்கள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

அல்லாஹுவின் அருளால்,

கத்தர் இந்திய தவ்ஹீத் மையம்  (QITC)  சார்பாக ஒவ்வொரு மாதமும் இறுதி வெள்ளிக்கிழமைகளில் , பெண்களுக்கு பெண்களே நடத்தும் "பெண்கள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி", மண்டல [QITC] மர்கசில் 25-05-2012 வெள்ளி அன்று மாலை 7:00 மணி முதல் 8:00 மணி வரை நடைபெற்றது.

ஆரம்பமாக,சகோதரி. வஜியத் நிஷா அவர்கள் "சோதனைகளுக்கு கிடைக்கும் நன்மைகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

பின்பு, சகோதரி. அஷ்ரஃப் நிஷா அவர்கள் "நல்ல தோழியர்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.


இந்த நிகழ்ச்சியில் 60 க்கும் மேற்பட்ட சகோதரிகளும், சிறுமிகளும் கலந்து கொண்டார்கள்.


அல்ஹம்துலில்லாஹ்.